search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளச்சேரி விபத்து"

    • ஒரு வாலிபர் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபரை காணவில்லை.

    சென்னை:

    சென்னை கிண்டி 5 பர்லாங் சாலை- வேளச்சேரி சாலை இணைப்பு சந்திப்பில் 7 மாடி கட்டிடம் கட்டுவதற்காக 40 அடியில் தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கடந்த 5 நாட்களாக பள்ளத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ராட்சத மோட்டார்கள் மூலமாக மழைநீர் வெளியேற்றப்பட்ட போதிலும் கிண்டி ரேஸ் கோர்சில் இருந்து தொடர்ந்து வெள்ளம் வந்து கொண்டே இருந்ததால் மீட்புப் படையினர் கடும் சிரமத்தோடு பணியில் ஈடுபட்டனர்.

    கட்டுமான பணி நடைபெற்ற இடத்திற்கு அருகே செயல்பட்டு வந்த கியாஸ் நிரப்பும் நிலையத்தில் இருந்த 4 பேரும், கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் கண்டெய்னரில் அமர்ந்திருந்த சிவில் என்ஜினீயர் ஜெயசீலனும் 40 அடி பள்ளத்தில் விழுந்தனர். இந்த 5 பேரில் 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர்.

    2 பேர் மட்டும் 40 அடி பள்ளத்தில் விழுந்து மூழ்கினார்கள். என்ஜினீயர் ஜெயசீலன் மற்றும் நரேஷ் என்ற வாலிபர் ஆகிய இருவரும் வெள்ளத்தில் மூழ்கி பலியானார்கள்.

    இருவரது உடல்களும் மீட்கப்பட்டன. இத்துடன் மீட்பு பணிகள் முடிந்து விட்டதாகவும் கருதப்பட்டது. இந்த நிலையில் 2 பேரின் உயிரை பலி வாங்கிய 40 அடி பள்ளத்தில் மேலும் ஒரு வாலிபர் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    7 மாடி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபரை காணவில்லை. எனவே அவரும் 40 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதையடுத்து நேற்று இரவு விடிய விடிய பேரிடர் மீட்பு படையினர் 40 அடி பள்ளத்தில் தேடினர். இன்றும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசார் கூறும்போது, 'தமிழகத்தை சேர்ந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனியார் கட்டுமான பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 50 அடிக்கும் மேல் திடீரென பள்ளம் ஏற்பட்டது.
    • பெரும் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட இரண்டு பேரை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    சென்னை :

    வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில் உள்ள கேஸ் பங்க் அருகே நடைபெற்று வந்த தனியார் கட்டுமான பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 50 அடிக்கும் மேல் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் மற்றும் ஜே.சி.பி. இயந்திரமும் விழுந்ததாக கூறப்பட்டது. இதில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தவர்கள் என 8 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    பெரும் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட இரண்டு பேரை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் 2 பேர் இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.

    இந்நிலையில், இந்த கட்டிட விபத்து தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கட்டுமான பணியின்போது உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற தவறிய மேற்பார்வையாளர்கள் எழில் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கிண்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மண் சரிவு இருப்பதால் மீட்பு பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்படுகிறது.
    • முதலமைச்சர் தினசரியும் மீட்பு பணிகள் குறித்து விசாரிக்கிறார்.

    சென்னை :

    கடந்த திங்கட்கிழமை அன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்று வந்த தனியார் கட்டுமான பகுதியில் சுமார் 50 அடிக்கும் அதிகமாக திடீர் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் மற்றும் ஜே.சி.பி. இயந்திரமும் விழுந்ததாக கூறப்பட்டது. இதில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த சிலர் சிக்கிக் கொண்டனர்.

    கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஜெயசீலன் கண்டெய்னர் உடன் தண்ணீருக்குள் மூழ்கினார். இவருடன் மேலும் சிலர் மூழ்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. பெரும் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஜெயசீலன் மற்றும் சிலரை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவரான நரேஷ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் சிக்கிய மற்றவரின் உடலை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தின் மீட்பு பணிகளில் எல் அண்ட் டி, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், மீட்புப்பணி நடைபெற்று வரும் இடத்தில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கட்டுமான நிறுவனம் என்ன பணிகளை இங்கே மேற்கொண்டு வந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது. இதனை அடுத்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பள்ளத்தில் மூழ்கியவரை மீட்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. மேற்பார்வையாளராக பணியாற்றிய ஜெயசீலன் உடலை மீட்கும் பணி நடைபெறுகிறது.

    * மண் சரிவு இருப்பதால் மீட்பு பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்படுகிறது. முதலமைச்சர் தினசரியும் மீட்பு பணிகள் குறித்து விசாரிக்கிறார்.

    இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

    ×