search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை நிறுத்தம்"

    • தூய்மை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நெல்லை மாநகராட்சியில் 753 தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.

    நெல்லை:

    சுய உதவி குழுக்களின் கீழ் பணி புரியும் நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 753 பேரை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைப்பதை கண்டித்தும், தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரியும் தூய்மை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் 2-வது நாளான இன்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை அளிப்பதற்காக நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நெல்லை மாவட்ட அறிவியல் மையம் முன்பு உள்ள சாலையில் திரண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் அறிவியல் மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததை கண்டித்து போராட்டத்தை நடத்தினர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக 47 சுய உதவி குழுக்கள் மூலமாக 753 தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள். தற்போது தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் இந்த தூய்மை பணியாளர்களை ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதனை அறிந்து கடந்த மாதம் 27-ந்தேதி அனைத்து தூய்மை பணியாளர்களும் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் காரணமாக மாநகராட்சி அதிகாரி களுக்கும், தொழிற்சங்கத்திற்கும் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் மாவட்ட கலெக்டர் உத்தரவு அடிப்படையில் தினசரி சம்பளம் ரூ.480 வழங்கி விடுவதாகவும், சுய உதவிக்குழு தூய்மை தொழிலாளர்கள் சுய உதவி குழுவாகவே நீடிப்பார்கள் என்று உறுதி அளித்தார்கள். இதன் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இது தொடர்பான தீர்மானமும் கடந்த 4-ந் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    தற்போது ஒரு வார காலமாக சுய உதவிக்குழு தலைவர் மற்றும் செயலாளர்களிடம் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணி செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குழு தலைவர் மற்றும் செயலாளர் கையெழுத்திட வேண்டும் என்றும் நிர்பந்தப்படுத்தப்படு கிறார்கள் என்று புகார்கள் எழுந்தது.

    அதிகாரிகளின் இந்த செயல் தொழிலாளர் நலத்திட்டத்திற்கும், சமூக நீதிக்கும் புறம்பானது. அதிகாரிகளின் மிரட்டலை கைவிடக் கோரியும், ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்க கூடாது என்று வலியுறுத்தியும், ஒப்பந்ததாரர்களிடம் சுய உதவி குழு தொழி லாளர்களை ஒப்படைக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று நெல்லை மாநகராட்சியில் பணி செய்யும் அனைத்து பணியாளர்களும் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தகுந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் மோகன், பொது செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்லத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதனையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலக சாலை மற்றும் மாவட்ட அறிவியல் மைய சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே தூய்மை பணியாளர்களை சுய உதவி குழுவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்க மாட்டோம் என்று மாநகராட்சி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கும் வரையிலும் வேலைக்கு செல்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் சுகுமாரன் தலைமையில் நாளை (புதன்கிழமை) மேலப்பாளையம் சந்தை பகுதியில் போராட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஒவ்வொரு மண்டல அலுவலகம் முன்பும் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    • ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
    • ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இரண்டாவது நாளாக ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குறைந்தபட்ச ஓட்டுநர்களே டாக்சி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது.

    • 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன் பிடித்து செல்வதாக குளச்சல் கட்டுமர மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • இன்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது

    குளச்சல் :

    குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.விசைப்பட குகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.

    கட்டுமரம்,வள்ளங்கள் அருகில் சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்.இந்த மீனவ ர்கள் தூண்டிலை பயன்ப டுத்தி மீன் பிடிக்கி ன்றனர்.இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த கட்டுமங்கள் தடை செய்யப்பட்ட 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன் பிடித்து செல்வதாக குளச்சல் கட்டுமர மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்த வகை வலையை பயன்படுத்துவதால் கடலில் உள்ள பவள பாறைகள் அழிந்து விடுகிறது என்றும், மீன்கள் உற்பத்தி பாதிக்க ப்படுகிறது என்றும், இதனால் கட்டுமர மீனவ ர்களின் வாழ்வ தாரம் பாதிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.

    இந்நிலையில் இந்த 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை கண்டித்து குளச்சலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் இன்று மீன் பிடிக்க செல்லாமல் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.

    இதில் பாதர் தாமஸ் கொச்சேரி மீன் பிடி தொழிலாளர்கள் யூனியன் உள்பட குளச்சல் 4 சங்கங்கள் மற்றும் கொட் டில்பாடு,சைமன்காலனி ஆகிய ஊரை சேர்ந்த கட்டுமர மீனவர்களும் கலந்து கொண்டனர்.மீன் பிடிக்க செல்லாத கட்டு மரங்கள் மணற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓலா, ஊபர் டிரைவர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் இன்று சிரமப்பட்டனர்.

    சென்னை:

    ஓலா, ஊபர் ஆப் மூலம் கார், ஆட்டோக்கள் புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையம் செல்வோர் செயலி பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு கார், ஆட்டோ தேவை என்று புக் செய்துவிட்டால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வாகனங்கள் வந்து விடுவதால் பொது மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள முடிகிறது.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த செயலியை பயன்படுத்தி மருத்துவமனை உள்ளிட்ட அவசர பயணத்திற்கு புக்கிங் செய்வதால் குறித்த நேரத்திற்கு செல்ல முடிகி றது.

    இந்த நிலையில் ஓலா, உபேர் டிரைவர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியு றுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சென்னையில் ஆட்டோ, கால் டாக்சி, போர்ட்டர் சரக்கு வாகனங்கள் என 70 ஆயிரம் ஓடுகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் இன்று சிரமப்பட்டனர்.

    ஆப் மூலம் முன்பதிவு செய்யப்படும் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. சென்னையில் பெரும்பாலானவர்கள் ஆப் வழியாக தங்கள் செல்போன் மூலம் வாகனங்களை புக்கிங் செய்து பயணம் செய்கிறார்கள்.

    இந்த போராட்டத்தால் அவர்கள் கார், ஆட்டோக்களை புக்கிங் செய்ய முடியவில்லை. ஆட்டோ நிலையங்கள், சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்களை பயன்படுத்தினர். இதனால் வீடுகளில் இருந்து பஸ், ஆட்டோ நிறுத்தங்களுக்கு வந்து பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

    இதனால் ஆப் பயன்படுத்தாத ஆட்டோக்களுக்கு இன்று தேவை அதிகரித்தது. வழக்கமாக கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதில் தீவிர மாக இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் இன்று அதை விட அதிகமாக வசூலித்தனர்.

    கோயம்பேடு, பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் ஆட்டோக்களுக்கு கிராக்கி கூடியது. பயணிகள்-டிரைவர்கள் இடையே கட்டண பேரம் நடந்தது.

    இதற்கிடையே இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஓலா, ஊபர் போர்ட்டர் டிரைவர்கள் சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம், உரிமைக்குரல், உரிமை கரங்கள், சிகரம், அக்னி சிறகுகள், தமிழக கால் டாக்சி மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    வேலைநிறுத்தம் குறித்து ஜாகீர் உசேன் கூறியதாவது:-

    ஓலா, உபேர் செயலி மூலம் புக்கிங் செய்யப்படும் ஆட்டோ, கார் வாகனங்கள் இன்று முதல் 3 நாட்கள் ஓடாது. புக்கிங் எடுக்க மாட்டோம். 2 வருடமாக இந்த அரசு முறைப்படுத்தவில்லை. எங்கள் தொழிலை முறைப்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து போக்குவரத்து பணிமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறினர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சுமார் 45 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுப்பு மறுக்கப்படுவதாகவும், வார ஓய்வையும் நிர்வாகம் வழங்குவது இல்லை எனவும் அடிக்கடி புகார் எழுந்தது. மேலும் டிரைவர்-கண்டக்டர்கள் வேறு வழித்தடத்திற்கு செல்லமாட்டேன் எனவும், அதிக நேரம் பணி செய்ய முடியாது என கூறினால் எந்தவித விசாரணையும் இன்றி தற்காலிக பணிநீக்கம் அல்லது பணியிட மாற்றத்தில் வள்ளியூர் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் ஈடுபடுவதாக டிரைவர்-கண்டக்டர்கள் புகார் கூறி வந்தனர்.

    இந்நிலையில் போக்குவரத்து கழக அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து இன்று அதிகாலை 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து போக்குவரத்து பணிமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்தில் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் நிர்வாகம் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், தொழிலாளர்கள் மீது அதிக பணி சுமையை ஏற்படுத்துவதோடு தொழிலாளர்கள் விரோத போக்கை கடைபிடிப்பதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக நெல்லை அரசு போக்குவரத்து கழக மண்டல வணிக மேலாளர் சசிகுமார், தொழில்நுட்ப துணை மேலாளர் சங்கர நாராயணன், வள்ளியூர் கிளை மேலாளர் வினோச் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறினர். இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கப்படும், தொழிலாளர்களுக்கு வார ஓய்வு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 3 மணி நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டத்தின்போது 45 பஸ்களில் 5 பஸ்கள் மட்டுமே இயங்கின. 3 மணி நேரமாக 40 பஸ்கள் இயங்கவில்லை.

    இதனால் காலையில் பணிக்கு செல்லும் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர். 

    • திருப்பூர்,கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்கி வருகின்றன.
    • மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படவுள்ளது

    மங்கலம்,செப்.24-

    திருப்பூர், கோவை மாவட்ட சிறு ஓ.இ.ஸ்பின்னிங் மில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரகுபதி கூறுகையில்,

    திருப்பூர்,கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்கி வருகின்றன. ஒரு நாளைக்கு ரூ.25கோடி மதிப்பிலான நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 12 மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாளை 25-ந்தேதி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு தொழில்முறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    இந்த ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் திருப்பூர்,கோவை மாவட்ட ஓ.இ.ஸ்பின்னிங் மில் சங்கம் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்கிறது.

    தமிழக முதல்வர் ஓ.இ. மில்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற்று, தமிழகம் முழுவதும் உள்ள சிறு ஓ.இ.மில் நூற்பாலைகளை பாதுகாத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வருகிற 27-ந் தேதி வரை ராமேசுவரம் மீனவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    2-வது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் நடந்தது. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. கடற் கரையில் விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.

    ராமேசுவரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இறால் மீன், நண்டு, கனவாய் உள்ளிட்ட மீன்கள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக 2 நாள்கள் மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீன் வகைகள் ஏற்றுமதி இல்லாததால் ரூ.5 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் இன்று ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மதுரை மாவட்டத்தில் 13ஊராட்சி ஒன்றியங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப் பட்டது. இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

    ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார அளவில் பணி புரிபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடந்தது. கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.

    • பெட்ரோல் பங்கை மூட வலியுறுத்தி போராட்டம்
    • விசைப்படகுகளும், நாட்டு படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறை முகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வருகின்றன. இந்த நிலையில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் அருகே பெட்ரோல் பங்க் அமைக்கப் பட்டு வந்தது.

    இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த கோரி அவர்கள் கடந்த 9-ந் தேதி முதல் 15 நாட்களாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர். இருப்பினும் மீனவர்களின் எதிர்ப்பை மீறி நேற்று பெட்ரோல் பங்க் திறக்கப் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்தும் பெட்ரோல் பங்கை மூட வலியுறுத்தியும் சின்ன முட்டத்தில் மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் சின்னமுட்டம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 100-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால் விசைப்படகு களும், நாட்டுப்படகுகளும் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் சின்னமுட் டம் புனித தோமையார் ஆலயம் முன்பு மீனவர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்ட மும் நடத்தி வருகிறார்கள். இதனால் சின்னமுட்டத்தில் பரபரப்பும் பதட்டமும் நிலவுகிறது. அங்கு பாது காப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து 16- வது நாளாக சின்ன முட்டத்தில் மீனவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. 

    • மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மீன் பிடிக்க விரித்து வைத்திருந்த வலையை மீனவர்கள் அவிழ்த்து வீட்டிற்கு சென்று விட்டனர்.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையில் தனியார் சார்பில் மீன் பிடிக்கும் உரிமம் பெறப்பட்டு மீன்பிடித்து வந்த நிலையில் தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் பிடிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

    சுசில் குட்டை, அண்ணாநகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை சேர்ந்த கூட்டுறவு சொசைட்டி மீனவர்கள் சுமார் 500 பேர் பரிசல் மூலம் மீன் பிடித்து வந்தனர். இங்கு கட்லா, ரோகு கேலுத்தி, ஜிலேபி போன்ற மீன்களை அவர்கள் பிடித்து வந்தனர். நாள் ஒன்றுக்கு ஒரு டன் (ஆயிரம் கிலோ) மீன்களை பிடித்து கொடுத்த போது ஒரு கிலோவுக்கு மீனவர்களுக்கு ரூ.55 வழங்கப்பட்டது.

    ஆனால் தற்போது தனியார் டெண்டர் காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் அவர்களுக்கு டெண்டர் வழங்காமல் தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பாக மீன்பிடிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டுறவு சங்கங்கள் மீன்பிடிக்க உரிமை பெற்றனர்.

    மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை மீன்வளத்துறை இடம் கொடுத்த போது அவர்கள் மீனவர்களுக்கு ஒரு கிலோவுக்கு மீன் ஒரு 35-க்கு கொடுத்தனர். இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழையபடி ஒரு கிலோ மீனுக்கு ரூ.55 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் இதை ஏற்க மறுத்ததால் பவானிசாகர் அணை பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன் பிடிக்க விரித்து வைத்திருந்த வலையை மீனவர்கள் அவிழ்த்து வீட்டிற்கு சென்று விட்டனர்.

    பவானிசாகர் அணை பகுதியில் பரிசல்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக இன்று இரவு சுசில் குட்டை, அண்ணா நகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை போன்ற பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்னைக்கு சென்று தமிழ்நாடு மீன்வளத்துறை தலைவரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.

    • மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் சுமார் 1,000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால், மீன்பிடித் தொழிலுக்குச் சென்று விட்டு திரும்பும்போது கரையில் படகுகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும் தெரிகிறது.

    இதனால், இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்துத்தர வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் மீன்வள மானிய கோரிக்கையில் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் எந்த பணிகளும் நடைபெறாததால், இப்பகுதி மீனவர்கள் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    நிதி ஒதுக்கியும் தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டி வரும் தமிழக அரசையும், மீனவளத்துறை அமைச்சரையும் வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைத்து அமலி நகர் மீனவர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். கடல் நீரை நம்பி வாழும் மீனவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டியது அரசின் கடமை. எனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதந்தோறும் சம்பளம் மிக தாமதமாக வழங்குவதாக கூறப்படுகிறது.
    • உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் சூழல் மேம்பாடு திட்டத்தின் கீழ் சுமார் 35-க்கும் மேற்பட்ட ஆதிவாசி ஊழியர்கள், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உணவகம், விடுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் மிக தாமதமாக வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கவில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆதிவாசி ஊழியர்கள், வனத்துறையினரிடம் முறையிட்டனர்.

    ஆனால் அப்போதும், அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆதிவாசி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து தெப்பக்காடு பகுதியில் உள்ள உணவகத்தை மூடினர். இதனிடையே கர்நாடகம், கேரளா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உணவகம் மூடி கிடப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து ஆதிவாசி ஊழியர்கள் கூறும்போது, மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த சம்பளமும் மிகவும் தாமதமாகே வழங்கப்படுகிறது.

    இதனால் எங்களால் குடும்பத்தை நிர்வகிக்க முடியாத நிலை உள்ளது. எனவே உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஊழியர்களின் போராட்டத்தை அடுத்து மாலையில், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, வழக்கம் போல தங்கள் பணியில் ஈடுபட சென்றனர்.

    ×