search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளை மாளிகை"

    • ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது.
    • பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின.

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன. இதில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது.

    இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த நீர் மின் நிலையமும் சேதம் அடைந்தது.

    அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் தான் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் சுமார் 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியது.

    அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் பல நகரங்கள், கிராமங்களுக்குள் புகுந்தது. பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின.

    இந்நிலையில், ரஷ்யாவால் தகர்க்கப்பட்டதாக கூறப்படும் கக்கோவ்கா அணை மீது நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வெடிகள் மிதப்பதாகவும், அதிகளவில் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் உக்ரைன் துணைப் பிரதமர் ஒலெக்சாண்டர் குப்ராகோவ் எச்சரித்துள்ளார்.

    மேலும் அவர், "முன்பு போடப்பட்ட கண்ணிவெடிகள் நீரில் தற்போது மிதந்து வருகிறது. அவை வெடித்து சிதறுகின்றன" என்றார்.

    • கெர்சன், கக்கோவ்கா பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது.
    • அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    கிவ்:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 1½ ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன.

    இதில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது. இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது.

    மேலும் அங்கிருந்த நீர் மின் நிலையமும் சேதம் அடைந்தது. அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் தான் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் சுமார் 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து கெர்சன், கக்கோவ்கா பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது.

    மேலும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் பல நகரங்கள், கிராமங்களுக்குள் புகுந்தது. பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின.

    சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. சில இடங்களில் வீடுகளும் வெள்ளத்தில் மிதந்து சென்றன. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    அங்கிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 17 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலர் வீட்டின் கூரை மீது அமர்ந்து இருந்தனர். அவர்களை படகில் சென்று மீட்பு குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

    அணை உடைந்துள்ளதால் ரஷிய மற்றும் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சுமார் 42 ஆயிரம் பேர் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை கூறும்போது, 'உக்ரைன் அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும், என்று தெரிவித்துள்ளது.

    அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறும்போது, 'இந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை அமெரிக்காவில் உறுதியாக கூற முடியாது. ஆனால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்கா இறுதி முடிவுக்கு இன்னும் வரவில்லை. நாங்கள் தகவல்களை சேகரித்து உக்ரைனியர்களுடன் பேச முயற்சிக்கிறோம்' என்றார்.

    இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள நதிக்கரையில் இருக்கும் கஸ்கோவா டிப்ரோவா உயிரியல் பூங்கா முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்த 300 விலங்குகளும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு, ஈரான் உதவி வருகிறது.
    • ஈரானுக்கு ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவை ரஷியா அளிக்கிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவிற்கு நூற்றுக்கணக்கான தாக்குதல் ட்ரோன்களை, ஈரான் வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஆழமான பாதுகாப்பு கூட்டணி, உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு ஈரான் உதவுவதை வெளிக்காட்டுவதாக பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை விற்பனை செய்ய ஈரான் பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்க கூறியுள்ளது. இதைடுத்து ஈரானிய நிறுவனங்கள் மற்றும் அதன் அமைப்புகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை வெள்ளை மாளிகை அண்மையில் வெளியிட்டது.

    இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷியா, ஈரானுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். வான் பாதுகாப்பு அமைப்புகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் உட்பட ஈரானுக்கு மேம்பட்ட ராணுவ உதவியை வழங்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


    அமெரிக்க உளவுத்துறை தகவல்களின்படி ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை ரஷியா அளித்து வருவதாகவும், அடுத்த வருடத்திற்குள் போர் விமானங்களை ரஷியாவிடம் இருந்து ஈரான் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போர் விமானங்கள் அந்த பிராந்திய அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது ஈரானின் விமானப்படையை கணிசமாக பலப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவும், பிரதமர் மோடியும், அமெரிக்காவிற்கு உதவக்கூடிய முக்கிய கூட்டாளிகள்.
    • பிரதமர் மோடியும், அதிபர் பைடனும் 15 முறைக்கு மேல் சந்தித்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் முதன்மை துணை தேசிய ஆலோசகர் ஜான் ஃபைனர் கூறியுள்ளதாவது:

    இந்தியா-அமெரிக்கா வரலாற்றில், 2022 ஆண்டு முக்கியமானது. அடுத்த ஆண்டு இரு நாடுகளிடையேயான உறவு இன்னும் வலுவடையும். ​சர்வதேச அளவிலான பிரச்சினைகளில் ​அமெரிக்காவிற்கும், அதன் அதிபர் ஜோபைடனுக்கும் உண்மையிலேயே உதவக்கூடிய கூட்டாளிகளை உலகம் முழுவதும் தேடும் போது அந்த பட்டியலில் இந்தியாவும், பிரதமர் மோடியும் முக்கிய இடத்தை பெறுகின்றனர்.

    ஜி-20 உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் நாங்கள் இதை பார்த்தோம்., அணுசக்தி பிரச்சினைகள் தொடர்பாக அதிகரித்து வரும் ஆபத்தை இந்திய அரசு முன்னிலைப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடியும், அதிபர் பிடனும் 15 முறைக்கு மேல் சந்தித்து உள்ளனர், சமீபத்தியது சந்திப்பு கடந்த வாரம் பாலியில் நடந்துள்ளது.

    குவாட் உச்சி மாநாடு அடுத்து நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா வகிக்க உள்ளது. அதை நாங்கள் அனைவரும் எதிர்நோக்குகிறோம். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் அடுத்த ஆண்டு மிக முக்கிய ஆண்டாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தைவான் பிரச்சினை தொடர்பாக சீனா, அமெரிக்கா இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
    • 3வது முறையாக சீன அதிபரான பிறகு ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் சந்திக்க உள்ளார்.

    வாஷிங்டன்:

    இந்தோனேசியாவின் பாலியில் வரும் 14ந்தேதி ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

    இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன. தைவான் பிரச்சினை தொடர்பாக சீனா அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில் 3வது முறையாக சீன அதிபரான பின்பு, ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் சந்திக்க உள்ளார். அப்போது இரு தலைவர்கள் இடையே தகவல் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளிடையேயான உறவுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    • ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் சமீபத்தில் சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கை நேரில் சந்தித்தார்.
    • 3 ஆண்டுகளில் சீனாவுக்கு பயணம் செய்த ஜி7 நாடுகளின் முதல் தலைவர் என்ற வகையில் இந்த சந்திப்பு அமைந்தது.

    வாஷிங்டன்:

    ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் சமீபத்தில் சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேசினார். 3 ஆண்டுகளில் சீனாவுக்கு பயணம் செய்த ஜி7 நாடுகளின் முதல் தலைவர் என்ற வகையில் இந்த சந்திப்பு அமைந்தது.

    அதன்பிறகு அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடந்த சந்திப்பின்போது ரஷியாவின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இரு நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ரஷியா போரை நிறுத்த சீனா வலியுறுத்த வேண்டும் என ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் ஜின்பிங்கிடம் கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் இருவரும் தொலைபேசி மூலம் பேசினார்கள். அப்போது சீன பயணம், ரஷிய விவகாரம் போன்றவை பற்றி அதிபர் ஜோ பைடனிடம் ஓலப் பகிர்ந்து கொண்டார்.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஷியாவின் படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பது என்ற உறுதியுடன் இருக்கிறோம்.

    உக்ரைன் நாடு தன்னை தற்காத்துக் கொள்வதற்கு ஏற்ப பொருளாதாரம், மனித நேயம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த ஆதரவு ஆகியவற்றை அளிப்பதில் உறுதியுடன் இருக்கிறோம் என தெரிவித்துள்ளது.

    மேலும், ரஷியாவின் சமீபத்திய அணு ஆயுத மிரட்டல்கள் பொறுப்பற்ற தன்மை என இரு தலைவர்களும் பேசும்போது ஒப்புக் கொண்டுள்ளனர். விதிகளின்படி சர்வதேச நடைமுறை, மனித உரிமைகள் மற்றும் முறையான வர்த்தக நடைமுறைகள் ஆகிய வற்றை தொடர்ந்து பின்பற்றுவதில் பொறுப்புடன் செயலாற்றுவதற்கான பகிர்தலையும் இரு நாட்டு தலைவர்களும் உறுதி செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜின்ஜியாங் விவகாரத்தில் ஐ.நா. அறிக்கை பரிந்துரைகளை சீனா பின்பற்றவேண்டும் என ஐ.நா. பொதுசெயலாளர் வலியுறுத்தினார்.
    • ஜின்ஜியாங்கில் நடந்த மனித உரிமை மீறல் விவகாரத்துக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    சீனாவின் வடமேற்கில் ஜின்ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.

    ஜின்ஜியாங் மாகாணத்தில் பல லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர் என்று உலகம் முழுவதும் தெரியவந்தது. ஆனால் இதனை சீனா மறுத்து வந்தது.

    இதற்கிடையே, மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் அலுவலகம் சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஜின்ஜியாங் பகுதியில் அரங்கேறிய கொடுமைகள் பற்றிய அறிக்கை ஒன்றை புதன்கிழமை வெளியிட்டது.

    இதனைத் தொடர்ந்து, ஜின்ஜியாங் விவகாரம் பற்றி ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை சீனா பின்பற்ற வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், சீனாவின் மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது. இந்த முக்கியமான அறிக்கை, உய்குர் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களை சீன மக்கள் குடியரசின் வெறுக்கத்தக்க மனித உரிமைகள் நடத்துவதை அதிகாரப்பூர்வமாக விவரிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    • கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் பாகிஸ்தானில் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.
    • அங்கு கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    வாஷிங்டன்:

    பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.

    பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.

    பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் விளைவாக பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

    • மின்னல் தாக்கி 4 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.
    • இந்த ஆண்டு அங்கு இதுவரை மின்னல் தாக்கி 12 பேர் இறந்துள்ளனர்.

    வாஷிங்டன் :

    அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே நேற்று முன்தினம் மின்னல் தாக்கி 4 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்த நிலையில் அவர்களில் 3 பேர் உயரிழந்திருப்பதாக வாஷிங்டன் போலீஸ் நேற்று அறிவித்தது. வெள்ளை மாளிகையின் வட பகுதியில் உள்ள லாபாயெட் சதுக்கத்தில் மின்னல் தாக்கியதில் 70 வயது தாண்டிய ஒரு தம்பதியரும், 29 வயதான ஒரு ஆணும் பலியாகி இருப்பதாக வாஷிங்டன் போலீஸ் தெரிவித்தது.

    இதுபற்றி வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கேரின் ஜீன் பியாரே வெளியிட்டுள்ள அறிக்கையில், "லாபாயெட் சதுக்கத்தில் மின்னல் தாக்குதலில் ஏற்பட்ட துயரமான உயிரிழப்புகளால் வேதனை அடைந்துள்ளோம். அன்புக்குரியவர்களை இழந்து வேதனையில் உள்ள குடும்பங்களுடன் எங்கள் இதயங்கள் இணைந்துள்ளன. உயிருக்கு போராடுகிறவருக்காக பிரார்த்தனை செய்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க தேசிய மின்னல் பாதுகாப்பு கவுன்சில், இந்த ஆண்டு அங்கு இதுவரை மின்னல் தாக்கி குறைந்தது 12 பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    "இடியுடன் மழை வருகிறபோது, நீங்கள் ஒருபோதும் மரத்தின் கீழ் நிற்கக்கூடாது என்பதற்கு இந்த சோக சம்பவம் ஒரு நினைவூட்டலாக அமைந்துள்ளது" என தேசிய மின்னல் பாதுகாப்பு கவுன்சில் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசுமுறை பயணமாக ஈரான் சென்றுள்ளார்.
    • புதினும் ரஷியாவும் எந்தளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசுமுறை பயணமாக ஈரான் சென்றுள்ளார். அங்கு அதிபர் புதின் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி, ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் துருக்கி அதிபர் தையூப் எர்டோகன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதினின் ஈரான் பயணம் உலக அரங்கில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், அதிபர் புதினின் ஈரான் பயணம் உலக அரங்கில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

    புதினும் ரஷியாவும் எந்த அளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது. இப்போது ​​அவர்கள் உதவிக்காக ஈரானிடம் திரும்ப வேண்டும். ஈரானிடம் இருந்து ராணுவ டிரோன்களை நாடுகிறது.

    ஈரானிடம் இருந்து ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களைக் கோருவதன் மூலம், உக்ரைனில் நடக்கும் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் அதிபர் புதின் தீவிரம் காட்டவில்லை என தெரிவித்தார்.

    • ஏப்ரல் முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
    • பூஸ்டர் தடுப்பூசி கடுமையான பாதிப்புக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 8 கோடியே 86 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் BA.4 மற்றும் BA.5 என பெயரிடப்பட்ட இரண்டு புதிய வகை கொரோனா தொற்றுகள் வேகமாக பரவுவதாக அமெரிக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

    இது ஓமிக்ரான் வகையை சேர்ந்தது என்றும் இதற்கு முந்தைய தொற்றுகளை விட வீரியம் வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க மக்கள் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதுடன், பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டு கொள்ளுமாறு வெள்ளை மாளிகை அறிவுறுத்தி உள்ளது.

    அமெரிக்காவில் ஏப்ரல் முதல் கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்றும் இது புதிய வகை கொரோனா பரவலை பிரதிபலிக்கிறது என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    பூஸ்டர் தடுப்பூசி கடுமையான பாதிப்புக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது, ஒருவருக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு இருந்தால், அவர் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்றும் வாலென்ஸ்கி தெரிவித்தார். கொரோனா நம் வாழ்க்கையை சீர்குலைக்க விடக்கூடாது, கொரோனா என்பது நாம் சமாளிக்க வேண்டிய ஒரு உண்மை என்பதை மறுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

    • ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ட்ரோன்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்குகிறது.
    • ட்ரோன் பயன்பாடு குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்க ஈரான் தயாராகி வருகிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல நகரங்களை கைப்பற்றிய போது, உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ட்ரோன்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்கி வருவதாக கூறினார். தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து இந்த மாதத்தில் ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என்றும் அவர் கூறினார்.

    முன்னதாக சவுதி அரேபியாவைத் தாக்க ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் இதேபோன்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை வழங்கியதாக சல்லிவன் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து தமது சுற்றுப்பயணத்தின் போது பைடன் ஆலோசிக்க உள்ள நிலையில், ஈரான் குறித்த சல்லிவன் குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ==

    ×