search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜான் கிர்பி"

    • எதிர்தாக்குதலில் உக்ரைன் முன்னேற அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகள் வழங்கியது
    • ரஷியாவும் பரஸ்பர தாக்குதல் நடத்துவோம் என ஏற்கனவே தெரிவித்திருந்தது

    ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் தனது ராணுவ படையால் ஆக்ரமித்தது. இதற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்து பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    500 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெறும் இந்த போர் இந்த ரஷிய- உக்ரைன் போர் தற்போது 513-வது நாளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராணுவ ரீதியாக பலம் வாய்ந்த ரஷியாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகள் (cluster bombs) எனும் பெருஞ்சேதம் விளைவிக்கும் வெடிகுண்டுகளை வழங்கியது.

    இந்நிலையில் கொத்து வெடிகுண்டுகளை சரியான முறையில் உக்ரைன் பிரயோகப்படுத்துவதாகவும், இது நல்ல பலனை தந்து வருவதாகவும், இதனால் ரஷியாவின் ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் முன்னேற முடிவதாகவும் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

    இந்த ரஷிய- உக்ரைன் போரில் கொத்து வெடிகுண்டுகளை வீசுவதாக பரஸ்பர குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

    பெரிய அளவில் நாசத்தை உண்டாக்க கூடிய இந்த வெடிகுண்டுகளை ரஷிய ராணுவ வீரர்கள் குவிகின்ற இடங்களில் மட்டுமே பயன்படுத்துவோம் என உக்ரைன் தெரிவித்திருந்தது.

    உலகில் 120 நாடுகளுக்கும் மேல் தடை செய்யப்பட்ட இந்த கொத்து வெடிகுண்டுகள், வெடிக்கும்போது சிறு சிறு குண்டுகளை ஒரு பெரிய பரப்பளவில் வீசி சேதத்தை ஏற்படுத்தும். இதில் ஒரு சில குண்டுகள் வெடிக்காமல் போகலாம். அவை பல தசாப்தங்களுக்கு அப்பகுதியில் ஆபத்தை உண்டாக்கும்.

    மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் இரு நாடுகளும் அப்பாவி பொதுமக்களை அழிக்கும் இத்தகைய ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது.

    கிளஸ்டர் குண்டுகளின் (கொத்து வெடிகுண்டு) பயன்பாட்டில் எந்த சர்வதேச சட்டமீறலும் இல்லை. ஆனால், பொதுமக்களுக்கு எதிராக அவற்றை பயன்படுத்துவது ஒரு சட்டமீறலாக மாறலாம். 120-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து இந்த வெடிகுண்டுகளை பயன்படுத்துவதைத் தடைசெய்யும் மாநாட்டில் கையொப்பமிட்டன.

    அந்த நாடுகள், "இந்த வெடிகுண்டுகளை உற்பத்தி செய்யவோ, பயன்படுத்தவோ, வினியோகிக்கவோ, அல்லது எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கவோ மாட்டோம்" என உறுதியெடுத்தது. மேலும் தங்களின் இருப்பில் உள்ளவற்றை அழிக்கவும் ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    கொத்துகுண்டு விவகாரத்தில் ''எங்களிடம் போதுமான கையிருப்பு உள்ளது. உக்ரைன் பயன்படுத்தினால், பரஸ்பர தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது'' என ரஷியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு, ஈரான் உதவி வருகிறது.
    • ஈரானுக்கு ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவை ரஷியா அளிக்கிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவிற்கு நூற்றுக்கணக்கான தாக்குதல் ட்ரோன்களை, ஈரான் வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஆழமான பாதுகாப்பு கூட்டணி, உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு ஈரான் உதவுவதை வெளிக்காட்டுவதாக பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை விற்பனை செய்ய ஈரான் பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்க கூறியுள்ளது. இதைடுத்து ஈரானிய நிறுவனங்கள் மற்றும் அதன் அமைப்புகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை வெள்ளை மாளிகை அண்மையில் வெளியிட்டது.

    இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷியா, ஈரானுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். வான் பாதுகாப்பு அமைப்புகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் உட்பட ஈரானுக்கு மேம்பட்ட ராணுவ உதவியை வழங்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


    அமெரிக்க உளவுத்துறை தகவல்களின்படி ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை ரஷியா அளித்து வருவதாகவும், அடுத்த வருடத்திற்குள் போர் விமானங்களை ரஷியாவிடம் இருந்து ஈரான் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போர் விமானங்கள் அந்த பிராந்திய அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது ஈரானின் விமானப்படையை கணிசமாக பலப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உக்ரைனுக்கு எதிராக ஏவ ஈரானிடம் இருந்து டிரோன்களை ரஷியா வாங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
    • அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.

    வாஷிங்டன்:

    ரஷியாவிற்கு ஆதரவாக ஈரான் படைகள் கிரிமியாவில் இருப்பதற்கான ஆதாரம் அமெரிக்காவிடம் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், உக்ரைனுக்கு எதிராக ஈரானில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை ஏவுவதில் ரஷிய படைகளுக்கு உதவுவதற்காக, 2014-ல் ரஷியாவால் சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட உக்ரைனின் ஒரு பகுதியான கிரீமியாவிற்கு குறைந்த அளவு தனது படைகளை ஈரான் அனுப்பி உள்ளது.

    எங்களிடம் உள்ள தகவல் என்னவென்றால், ஈரான் கிரீமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர், ஆனால் ரஷிய படைகள் தான் இயக்குகின்றனர் என தெரிவித்தார்.

    உக்ரைனுக்கு எதிராக ஏவுவதற்காக ஈரானிடம் இருந்து டிரோன்களை ரஷியா வாங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.

    • இந்தியா உடனான நல்லுறவுக்கு என்றும் மதிப்பளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
    • ரஷிய அதிபர் புதின் தன் செயலுக்கு தக்க விளைவுகளை சந்திக்க வேண்டும் எனவும் கூறியது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. அதை மீறி, இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்குகிறது. இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி ரஷியா 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:

    இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளியாக இந்தியா விளங்குகிறது. இந்தியா உடனான பரஸ்பர நல்லுறவுக்கு அமெரிக்கா எப்போதும் மதிப்பளித்து வருகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் இறையாண்மையை காப்பதிலும், சொந்த முடிவுகளை எடுப்பதிலும் சுதந்திரம் உள்ளது.

    ரஷியா மீது சர்வதேச அளவில் அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். ரஷிய அதிபர் புதின் தன் செயலுக்கு தக்க விளைவுகளை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

    ×