search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crimea"

    • உக்ரைனுக்கு எதிராக ஏவ ஈரானிடம் இருந்து டிரோன்களை ரஷியா வாங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
    • அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.

    வாஷிங்டன்:

    ரஷியாவிற்கு ஆதரவாக ஈரான் படைகள் கிரிமியாவில் இருப்பதற்கான ஆதாரம் அமெரிக்காவிடம் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், உக்ரைனுக்கு எதிராக ஈரானில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை ஏவுவதில் ரஷிய படைகளுக்கு உதவுவதற்காக, 2014-ல் ரஷியாவால் சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட உக்ரைனின் ஒரு பகுதியான கிரீமியாவிற்கு குறைந்த அளவு தனது படைகளை ஈரான் அனுப்பி உள்ளது.

    எங்களிடம் உள்ள தகவல் என்னவென்றால், ஈரான் கிரீமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர், ஆனால் ரஷிய படைகள் தான் இயக்குகின்றனர் என தெரிவித்தார்.

    உக்ரைனுக்கு எதிராக ஏவுவதற்காக ஈரானிடம் இருந்து டிரோன்களை ரஷியா வாங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.

    ரஷியாவுடன் இணைந்த கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் 11 பேர் பலியாகி விட்டனர்.

    கிரீமியா:

    ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே கெர்ச் ஜலசந்தி உள்ளது. இங்குள்ள கிரீமியா உக்ரைனில் இருந்தது. கடந்த 2004-ம் ஆண்டு ரஷியாவுடன் இணைந்தது.

    அங்குள்ள கெர்ச் துறைமுகத்தில் தான்சானியா நாட்டின் 2 சரக்கு கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் கியாஸ் டேங்கர் கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.

    அப்போது திடீரென தீப்பிடித்தது. அந்த தீ 2 கப்பல்களுக்கும் பரவியது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    அதை தொடர்ந்து ரஷிய மீட்பு படையினர் விரைந்து சென்றனர். 2 கப்பல்களிலும் மொத்தம் 31 பேர் இருந்தனர். அவர்களில் 17 பேர் ஊழியர்கள், 14 பேர் பயணிகள்.

    இவர்களில் இதுவரை 14 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 11 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டனர். இவர்கள் உயிர்பிழைக்க கடலில் குதித்த போது மரணத்தை தழுவினர்.

    ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாதகாலமாக நடைமுறையில் இருந்த ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார். #UkraineMartialLaw #Crimea
    கீவ்:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா கடந்த மாதம் கைப்பற்றியது. தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்தது.
     
    ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றன. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து அசோவ் கடற்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது.


    இதையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரஷ்ய எல்லையில்  உள்ள குறிப்பிட்ட பிராந்தியங்களில் ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கக்கூடிய ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்தது. இதற்காக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் நிறைவேற்றப்பட்டு, கடந்த மாதம் 28-ம் தேதி ராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஒரு மாத காலம் இந்த சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நாட்டின் எல்லை பிராந்தியங்களில் அமலில் உள்ள ராணுவச் சட்டம் இன்றுடன் (புதன்) முடிவுக்கு வந்துவிட்டதாக அதிபர் பெட்ரோ போரோஷென்கோ நேற்று அறிவித்தார். தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றியபோது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை தொடர்பான அனைத்து கூறுகளையும் ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். #UkraineMartialLaw #Crimea #UkrainePresident
    பனிப்போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய உக்ரைன் அரசு இன்று தடை விதித்துள்ளது. #Russianmen #Russianmenbarred #Ukraineconflict
    கீய்வ்:

    உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷியா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை சமீபத்தில் கிரிமியா அருகே ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து இருநாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.


    இந்நிலையில், இந்த பனிப்போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ரஷியாவை சேர்ந்த 16-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய உக்ரைன் அரசு இன்று தடை விதித்துள்ளது. உக்ரைனின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பதிலடியாக இதேபோன்ற தடையை விதிக்கும் எண்ணம் ஏதுமில்லை என ரஷியா தெரிவித்துள்ளது. #Russianmen #Russianmenbarred #Ukraineconflict 
    ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் நாளை முதல் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. #UkraineMartialLaw #Crimea #RussiaSeizesShips
    கீவ்:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா நேற்று முன்தினம் கைப்பற்றியது. கிரிமியா அருகே உள்ள கெர்ச் ஜலசந்தியை உக்ரைன் கப்பல்கள் கடந்தபோது, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்திருக்கிறது.  

    ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றன. உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதால் அசோவ் கடற்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்த சூழ்நிலையில், உக்ரைனின் ரஷ்ய எல்லையில்  உள்ள குறிப்பிட்ட பிராந்தியங்களில் ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கக்கூடிய ராணுவச் சட்டத்தை அமல்படுத்த உக்ரைன் அரசு முடிவு செய்தது. இதற்காக பாராளுமன்றத்தில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்கு பிறகு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவை நிறைவேற்ற 226 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மசோதாவிற்கு ஆதரவாக 276 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

    ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள மோல்டோவாவின் டிரான்ஸ்னிஸ்டிரியா பிராந்தியம் மற்றும் கருங்கடல் ஓரம் உள்ள பிராந்தியங்கள் மற்றும் அஸோவ் கடல் பகுதியில் இந்த சட்டம் அமலில் இருக்கும். இந்த பிராந்தியங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிளவுபட்ட பிராந்தியமான டிரான்ஸ்னிஸ்டிரியாவில் ரஷ்ய படைகள் முகாமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



    தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலில் 60 நாட்களுக்கு ராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆணையில் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ கையெழுத்திட்டார். அதன்பின்னர், 30 நாட்களாக குறைத்தார்.

    இது தொடர்பாக உக்ரைன் அதிபர் கூறுகையில், ‘ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டதால் போர் பிரகடனம் என்று அர்த்தம் அல்ல.  உக்ரைன் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை’ என்றார். #UkraineMartialLaw #Crimea #RussiaSeizesShips
    கிரிமியா அருகே உக்ரைன் நாட்டு கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. #Crimea #RussiaSeizesShips
    கீவ்:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள், அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே இணைந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. கிரிமியாவை ரஷ்யா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக அதிபர் புதின் பிறப்பித்த ஆணை செல்லாது என்று உக்ரைனும் அறிவித்தது. அதன்பின்னர் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா நேற்று கைப்பற்றியது. கிரிமியா அருகே உள்ள கெர்ச் ஜலசந்தியை உக்ரைன் கப்பல்கள் கடந்தபோது, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்துள்ளது. 


    ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறந்து கண்காணித்தபடி உள்ளது.

    உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதுபற்றி விவாதிப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. #Crimea #RussiaSeizesShips
    கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை.

    ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.

    இந்த நிலையில் இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை வெள்ளை மாளிகையும், கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதில் 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய நாடான பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என தற்போது முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பு அடுத்த மாதம் (ஜூலை) 16-ந்தேதி நடப்பதாக இருதரப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

    முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கும் அவர்கள், கூட்டு பிரகடனம் ஒன்றையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் என அமெரிக்கா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ‘கிரிமியாவை தங்கள் நாட்டுடன் ரஷியா இணைத்து கொண்டதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவுமில்லை. எனவே, கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும்வரை ரஷியா மீதான பொருளாதார தடைகளை விலக்கிகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

    1991-ல் சோவியத் யூனியன் என்ற அமைப்பு உடைந்து பல சிறிய நாடுகளாக பிளவுபட்ட பின்னர் கடந்த 2014-ல் உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

    உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே தங்கள் நாட்டுடன் இணைந்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது.

    கிரிமியாவை ரஷியா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்து கொள்வது தொடர்பாக அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்திருந்த உத்தரவு செல்லாது என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. கிரிமியாவை இணைத்தது தொடர்பான ரஷ்யாவின் ஆணையை தள்ளுபடி செய்வதாக உக்ரைன் நாட்டின் ஐ.நா தூதர் வோலோடைமர் எல்சென்கோ தெரிவித்துள்ளார்.

    உக்ரைனில் இருந்து கிரிமியா என்ற தனிநாட்டை பிரித்து உருவாக்க நடைபெற்ற போரில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியான நிலையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பூசல்கள் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்தே குரல் எழுப்பி வந்துள்ளது நினைவிருக்கலாம். #Crimea annexation #WhiteHouse
    ×