search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள அபாய எச்சரிக்கை"

    • ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • இரவில் யாரும் ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ கூடாது

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணை களுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. குறிப்பாக ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 1042 கனஅடியாக இருந்தது.

    கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், நேற்று காலை கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 2209 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளவான 42.64 அடியில் 42.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து

    பாசன கால்வாய்கள், ஆற்றிலும் 2020 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் அலியாளம், எண்ணே கொல்புதூர் உட்பட 11 தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. இதே போல், வேப்பனப்பள்ளி அருகே கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரும், கிருஷ்ணகிரி அணைக்கு வந்துக் கொண்டிருக்கிறது.

    கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 6300 கனஅடி வந்துக் கொண்டிருந்த தண்ணீர், நேற்று காலை 5735 கனஅடியாகவும், பிற்பகலில் 4760 கனஅடியாக சரிந்தது. இதனால் அணையில் திறந்துவிடப்படும் நீரின் அளவு 7549 கனஅடியில் இருந்து 5100 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும், அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 49.40 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இரவில் யாரும் ஆற்றைக் . கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று பொதுப்ப ணித்துறை யினர், வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

    மேலும், அணையின் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    • கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 1042 கனஅடியாக இருந்தது.
    • 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. குறிப்பாக ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 1042 கனஅடியாக இருந்தது.

    கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், நேற்று காலை கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 2209 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளவான 42.64 அடியில் 42.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் 2020 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் அலியாளம், எண்ணேகொல்புதூர் உட்பட 11 தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. இதே போல், வேப்பனப்பள்ளி அருகே கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரும், கிருஷ்ணகிரி அணைக்கு வந்துக் கொண்டிருக்கிறது.

    கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 6300 கனஅடி வந்துக் கொண்டிருந்த தண்ணீர், நேற்று காலை 5735 கனஅடியாகவும், பிற்பகலில் 4760 கனஅடியாக சரிந்தது. இதனால் அணையில் திறந்துவிடப்படும் நீரின் அளவு 7549 கனஅடியில் இருந்து 5100 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும், அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 49.40 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இரவில் யாரும் ஆற்றைக் . கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அணையின் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    • காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • நீரில் அளவு மேலும் அதிகரிக்கப்படும்.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர மக்களுக்கு கலெக்டர் த.பிரபுசங்கர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம் ஏற்கனவே 120 அடி இருப்பில் உள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தற்போதைய நிலையில் 1.20 லட்சம் கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திறக்கப்படும் நீரில் அளவு மேலும் அதிகரிக்கப்படும்.

    எனவே, காவிரி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் தனியாகவோ, கால்நடைகளுடனோ ஆற்றில் இறங்கவேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும், காவிரி கரையோர பகுதிகளில் தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • அணையின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் திறந்துவிடப் படுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் கொட்டிவரும் கனமழையினால் பழனியில் உள்ள பாலாறு, பொருந்தலாறு, குதிரையாறு, வரதமாநதி ஆகிய அணைகள் நிரம்பி வருகின்றன.

    65 அடி உயரம் உள்ள பாலாறு பொருந்தலாறு அணையில் தற்போது 61 அடி நீர்மட்டம் உள்ளது. இதனால் அணையின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. குதிரயைாறு அணை அதன் முழுகொள்ளளவான 72 அடியை எட்டியுள்ளது. வரதமாநதி அணை நிரம்பி உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 80 அடி உயரம் உள்ள பரப்பலாறு அணையிலும் நீர்வரத்து அதிகரிப்பால் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மேலும் நீர்வரத்து வர வாய்ப்புள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • தென்மேற்கு பருவமழையால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரம் கன அடி நீர் வருகிறது.

    சேலம்:

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையின் பாதுகாப்பை கருதி, தமிழகத்திற்கு நேற்று வினாடிக்கு1,20,000 கன அடி அளவிற்க்கு காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது.

    கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் ஒரு லட்சத்து 9 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று பகல் 12 மணிக்கு 113.96 அடியிலிருந்து 114.81 அடியாக உயர்ந்தது.

    தற்பொழுது நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை இன்று நள்ளிரவுக்குள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.
    • காவிரி நீர் வரத்து அதிகரிப்பதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு.

    மாண்டியா:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன.

    அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது. கே.ஆர்.எஸ்., அணைக்கு வினாடிக்கு, 49 ஆயிரத்து 244 கன அடி தண்ணீர் வரும் நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 74 ஆயிரத்து 356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் வெளியேறும் மதகுகள் பகுதியில் மூவர்ண கொடியின் நிறத்தில் விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன. இது காண்போரை கவர்ந்து வருகிறது.

    இதுபோன்று, கபினி அணைக்கு வினாடிக்கு, 26 ஆயிரத்து 847 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளிலிருந்தும், தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 4,356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்த தண்ணீர் இன்று இரவு தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை வந்தடையும் என தெரிகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து அதிகபட்ச தண்ணீர் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அபாயம் உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.

    • தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு.
    • கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழையால் அம்மாநில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 34,304 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

    இதேபோல் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.நேற்று மாலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 15,727 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 23,511 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×