search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழை எதிரொலி பழனியில் அனைத்து அணைகளும் நிரம்பியது வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    கோப்பு படம்

    தொடர் மழை எதிரொலி பழனியில் அனைத்து அணைகளும் நிரம்பியது வெள்ள அபாய எச்சரிக்கை

    • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • அணையின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் திறந்துவிடப் படுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் கொட்டிவரும் கனமழையினால் பழனியில் உள்ள பாலாறு, பொருந்தலாறு, குதிரையாறு, வரதமாநதி ஆகிய அணைகள் நிரம்பி வருகின்றன.

    65 அடி உயரம் உள்ள பாலாறு பொருந்தலாறு அணையில் தற்போது 61 அடி நீர்மட்டம் உள்ளது. இதனால் அணையின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. குதிரயைாறு அணை அதன் முழுகொள்ளளவான 72 அடியை எட்டியுள்ளது. வரதமாநதி அணை நிரம்பி உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 80 அடி உயரம் உள்ள பரப்பலாறு அணையிலும் நீர்வரத்து அதிகரிப்பால் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மேலும் நீர்வரத்து வர வாய்ப்புள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×