search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் ஆர்ப்பாட்டம்"

    • உழவர் சந்தை வாசலிலேயே ஏராள மானோர் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்துள்ளனர். தற்போது பழனி காந்தி மார்க்கெட் கடைகள் அகற்றப்பட்டு அவர்களுக்கும் உழவர் சந்தையிலேயே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • உழவர் சந்தை வாசலில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தினந்தோறும் காலை 6 மணி முதல் 9 மணி வரை வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று விவசாயிகள் கடை அமை க்காமல் உழவர் சந்தை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் உயர்மட்டக்குகுழு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் தெரிவிக்கையில், உழவர் சந்தை வாசலிலேயே ஏராள மானோர் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்துள்ளனர். தற்போது பழனி காந்தி மார்க்கெட் கடைகள் அகற்றப்பட்டு அவர்களு க்கும் உழவர் சந்தையிலேயே இடங்கள் ஒதுக்கப்பட்டு ள்ளது.

    மேலும் உழவர் சந்தை வாசலில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

    எனவே உழவர் சந்தை வாசலில் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்து வியாபாரம் செய்பவர்களை அகற்ற வேண்டும். அது வரை தாங்கள் கடைகளை திறக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    இது குறித்து ஓரிரு நாளில் வியாபாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்ப தாக அதிகாரிகள் உறுதிமொழியளித்ததால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் உழவர் சந்தை முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • கீழ்பவானி வாய்க்கால்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டம் 2020-ம் ஆண்டு அரசாணை எண் 276-ன் படி அறிவிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு முதல் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. மற்றொரு விவசாய சங்கத்தினர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சீரமைப்பு பணிகள் பாதியில் நின்றது.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி தலைமையில் 2 தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    இதற்கிடையே சீரமைப்பு பாசன பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பாசன சபைகள் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அரசாணை எண் 276-ன் படி கால்வாய் சீரமைப்பு பணிகளை மே மாதம் 1-ந் தேதி முதல் தொடங்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி தெளிவாக ஆணையிட்டது.

    மேலும் கடந்த ஆண்டு ஒப்பந்ததாரர்கள் போட்ட வழக்கில் சீரமைப்பு பணி களை செய்யும்போது ஒப்பந்த தாரர்கள் ஊழியர்களுக்கும், எந்திரங்களுக்கும் தக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஒரு ஆணையையும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

    இதன் அடிப்படையில் கடந்த 1-ந் தேதி முதல் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. எனினும் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் முழுமையாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி கீழ்பவானி ஆயகட்டு நில உரிமையாளர்கள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்த ப்பட்டது.

    இல்லையென்றால் இன்று முதல் கோண வாய்க்கால் பகுதியில் உள்ள பொதுப்ப ணித்துறை அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணா விரத போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதே நாளில் எதிர் தரப்பை சேர்ந்த விவசாய சங்கங்களும் பொதுப்ப ணித்துறை அலுவலகத்தில் வந்து மனு கொடுப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் இன்று பொது பணித்துறை அலுவலகம் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமை யாளர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, செயலாளர் பொன்னையன், பொருளாளர் சிவ சபாபதி, தமிழக விவசாய சங்கத்தின் செயலாளர் சுப்பு ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவ லகத்திற்கு உண்ணாவிரத போராட்டத்திற்காக திரண்டு வந்தனர்.

    உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் கீழ்பவானி வாய்க்கால்களில் முழுமையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம். பழனிச்சாமி ஆகியோரும் உடன் இருந்தனர்

    பின்னர் விவசாய சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.அதன்படி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எம்.பழனிசாமியும் உடன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். செயற் பொறி யாளர் கண்ணன் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது சீரமைப்பு பணிகள் எங்கெங்கு நடைபெறுகிறது என்ற விவரத்தை செயற்பொ றியாளர் அவர்களிடம் தெரிவித்தார். இதனை விவசாய சங்க பிரதி நிதிகளும் ஏற்றுக் கொண்டனர். இதனை அடுத்து உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    • பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.52 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
    • பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை ரோட்டில் ஊற்றி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணாபுரம்,

    பால் விலையை உயர்த்தக்கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கம்பைநல்லூர் அருகே உள்ள திப்பம்பட்டி கூட்ரோட்டில் பாலை ரோட்டில் ஊற்றி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.52 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் இந்த விலை உயர்வை தாமதம் இன்றி இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பின்னர் பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை ரோட்டில் ஊற்றி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், செந்தில்குமார், மாநில செயலாளர் சின்னசாமி, டிராக்டர் உரிமையாளர் சங்க தலைவர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தருமபுரி மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார். மேலும் தமிழக விவசாய சங்க தருமபுரி மாவட்ட செயலாளர் குப்புசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சென்னைய நாயுடு, தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் அண்ணாமலை, வெங்கடேசன், சிவலிங்கம், ராஜா , நாகராஜ், சுப்பிரமணியன், லோகநாதன், குமார்,யு.பழனி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய நிர்வாகி முனுசாமி நன்றி கூறினார்.

    • செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நடந்தது
    • கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனரிடம் மனு வழங்கினர்

    செய்யாறு:

    செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழக உழவர் பேரவை சார்பில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு உழவர் பேரவை மாநில செய்தி தொடர்பாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரமேஷ், அய்யப்பன், தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புருஷோத்தமன் பேசுகையில், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள் பயிரிட்டிருந்த கரும்புகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததால் அவை காய்ந்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும், அரவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் கடந்த 5 நாட்களாக ஆலையில் கரும்பு பாரத்துடன் நிறுத்தி வைத்திருந்த லாரி, டிராக்டர்களுக்கு வாடகை தர வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    அதன்பின் கோரிக்கைகள் குறித்து உழவர் பேரவையினருடன் சென்று கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனரிடம் மனு வழங்கினர்.

    • நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    • இணை உரத்தை கட்டாயப்படுத்தி விற்பதாக புகார்

    வந்தவாசி:

    வந்தவாசி பகுதியில் உள்ள சில தனியார் உரக் கடைகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து விற்கப்படுவதாக கூறிவந்தவாசி தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில செய்தி தொடர்பாளர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தார். பின்னர் விவசாயிகள் கூறுகையில், "வந்தவாசி பகுதியில் உள்ள சில தனியார் உரக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகள் யூரியா உரம் வாங்கும்போது, அதனுடன் சுமார் ரூ.1,500 மதிப்புள்ள இணை உரத்தை கட்டாயப்படுத்தி விற்கின்றனர்.

    இது குறித்து வேளாண் துறையிடம் புகார் செய்தால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. எனவே இதனை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுள்ளோம்" என்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது சிலுவை போன்று அமைத்த ஒன்றை தூக்கிக்கொண்டும்,ஒருவர் கிறிஸ்துமஸ்தாத்தா போன்று வேடமிட்டும் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

    இது தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் துணை தாசில் தார் சதீஷிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

    • விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.
    • அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3,850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது.

    இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.

    கோவை வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி–னையும் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது விவசாயிகளை பாதிக்கும் எந்தொரு திட்டத்தையும் செயல்படுத்தப் போவதில்லை என முதல்வர் உறுதி அளித்தாக விவசாயிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூரில் சிட்கோ அமைப்பதற்காக 3731 ஏக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தொடர்ந்து நமது நிலம் நமதே போராட்ட குழுவின் சார்பில் அன்னூரை அடுத்துள்ள குழியூரில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணி நடந்தது.

    இதன் தொடர்ச்சியாக இன்று காலை 10 மணியளவில் அன்னூர் தாலுகா அலுவலகம் முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போரா–ட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள், எங்களுக்கான நிரந்தர தீர்வை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

    விவசாயிகள் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தலை–மையில், மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வராஜ்,அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா, காரமடை இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் துகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டம் காரணமாக அன்னூரில் இருந்து சக்தி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாநில தலைவர் வேணுகோபால், நமது நிலம் நமது தலைவர் ரவிக்குமார், நமது நிலம் நமது செயலாளர் ராஜன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் நாம் அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தேங்காயையும், தேங்காய் எண்ணையையும் தமிழக அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

    கோவை:

    தமிழகம் முழுவதும் நாம் அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் மாநில தலைவர் பிரபுராஜா தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காயையும், தேங்காய் எண்ணையையும் தமிழக அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதல் ஒரு கிலோ ரூ.130-க்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சோப்பு தயாரிப்புக்கு தேங்காய் எண்ணையை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் விவசாயிகள் உள்பட பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

    • சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பச்சை தேயிலை கிலோ ரூ.13-க்கும் கீழ் குறைந்து உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சை தேயிலை கிலோ ரூ.13-க்கும் கீழ் குறைந்து உள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனால் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த நாக்குபெட்டா விவசாயிகள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த மாதம் கோத்தகிரி ஜக்கலோடை, நாரகிரி கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தநிலையில் நேற்று 3-வது கிராமமாக மிளிதேனில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்ணயம் செய்ய வேண்டும் ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊர் தலைவர் பில்லன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். படுகர் இன மக்களை ஆதிவாசி பட்டியலில் சேர்க்க வேண்டும். விவசாய நிலங்களை அழித்து சொகுசு விடுதிகள், பங்களாக்கள் கட்டுவதை தடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலை நம்பியுள்ள விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேயிலை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். முடிவில் ராமதாஸ் நன்றி கூறினார்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்
    • குறை தீர்வு கூட்டத்தை புறக்கணித்தனர்

    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீவு நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். இதில் தாலுகாவில் உட்பட்ட பல்வேறு பகுதி சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது தனித்தனியாக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர் இதற்கிடையில் திடீரென கூட்டத்திற்கு பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் வரவில்லை என்று விவசாயிகள் திடீரென கூட்டத்தை புறக்கணித்து அலுவலகம் நுழைவாயில் முன்பு கருப்பு துண்டு அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு நார்த்தாமுண்டி சிவகுமார் தலைமை தாங்கினார். இதில் வழக்கமாக மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமையில் நடைபெறும் தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டத்திற்கு பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் சரிவர வருவதில்லை என்றும் வருவாய் துறை சார்பில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைந்து கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு 7 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது.
    • பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால், பல்வேறு இன்னல்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

    அரவேணு:

    கோத்தகிரி அருகே நாரிகிரி கிராமத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் 30 ரூபாயை நிர்ணயம் செய்ய கோரி நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊர் தலைவர் சந்திரன், ஊர் நிர்வாகி தங்கராஜ், காமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.30 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த தேயிலை செடிகளை கையில் எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு 7 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால் கூலி, தோட்டங்களை பராமரிக்கவே போதுமானதாக இல்லை.

    குடும்ப செலவுக்கு விவசாயிகள் திணறி வருகின்றனர். பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால், பல்வேறு இன்னல்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

    எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேயிலை விவசாயிகளுக்கு மானியத்தொகை வழங்க வேண்டும். அரசு தேயிலை ஏல மையத்தில் குறைந்தபட்சம் 150-க்கு மேல் ஏலம் எடுக்க வேண்டும் என வியாபாரியிடம் வலியுறுத்த வேண்டும்.

    விவசாய பயிர்களை அழித்து வரும் காட்டு பன்றிகளை சுட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காட்டு எருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    • இடு பொருட்களை வாங்க உரக்கடை உரிமையாளர்கள், கட்டாயப்படுத்துவதாக புகார்
    • விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பெரணமல்லூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு. விவசாயிகள் சங்கம் சார்பில்நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    விவசாய பயன்பாட்டிற்கு தனியார் உரக்கடைகளில் யூரியா, வாங்க செல்லும்போது கூடுதலாக விவசாய இடு பொருட்களை வாங்க உரக்கடை உரிமையாளர்கள், கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கூடுதலாக அவர்கள் சொல்லக்கூடிய பொருட்களை வாங்கினால் மட்டுமே யூரியா தரப்படும் என விவசாயிகளை கட்டாயப்படுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்.

    வேளாண்மை அதிகாரிகளுக்கு விவசாய சங்க செயலாளர்கள், விவசாய சங்க, பொறுப்பாளர்கள், விவசாயிகள், பலமுறை நடவடிக்கை எடுக்க கூறியும் நடவடிக்கை எடுக்காததால்.

    வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு நூதன முறையில் ஆடு, புலி, ஆட்டம் கட்டங்கள் வரையப்பட்டு, முகமூடி அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க செயலாளர் புருஷோத்தமன், தலைமை தாங்கினார்.

    இதில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • பணம் தராமல் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
    • ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

    செய்யாறு:

    செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சங்க மாவட்ட தலைவர் ஹரிதாஸ் தலைமையில் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் 2021-2022 பருவ ஆண்டில் சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கு கடந்த 5 மாதங்களாக பணம் தராமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

    ஆலையின் இருப்பில் உள்ள சர்க்கரையை விற்க அனுமதி வழங்கவில்லை, ஆலையிலிருந்து பெற்ற 22 கோடி மதிப்பிலான இணை மின்சாரத்திற்கு உரிய பணம் வழங்கவில்லை எனவும், கடன் பெற அனுமதிக்காமல் காலம் தாழ்த்துகின்றனர் எனவும், கரும்புக்கு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் வெட்டுக் கூலியை ஆலய நிர்வாகமே வழங்க வேண்டும், நுழைவு வாயிலில் எடை மேடை அமைக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×