search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண்மை விரிவாக்கம் மையம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    வேளாண்மை விரிவாக்கம் மையம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • இடு பொருட்களை வாங்க உரக்கடை உரிமையாளர்கள், கட்டாயப்படுத்துவதாக புகார்
    • விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பெரணமல்லூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு. விவசாயிகள் சங்கம் சார்பில்நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    விவசாய பயன்பாட்டிற்கு தனியார் உரக்கடைகளில் யூரியா, வாங்க செல்லும்போது கூடுதலாக விவசாய இடு பொருட்களை வாங்க உரக்கடை உரிமையாளர்கள், கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கூடுதலாக அவர்கள் சொல்லக்கூடிய பொருட்களை வாங்கினால் மட்டுமே யூரியா தரப்படும் என விவசாயிகளை கட்டாயப்படுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்.

    வேளாண்மை அதிகாரிகளுக்கு விவசாய சங்க செயலாளர்கள், விவசாய சங்க, பொறுப்பாளர்கள், விவசாயிகள், பலமுறை நடவடிக்கை எடுக்க கூறியும் நடவடிக்கை எடுக்காததால்.

    வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு நூதன முறையில் ஆடு, புலி, ஆட்டம் கட்டங்கள் வரையப்பட்டு, முகமூடி அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க செயலாளர் புருஷோத்தமன், தலைமை தாங்கினார்.

    இதில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×