என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காய்ந்து போன கரும்புக்கு நஷ்டஈடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நடந்தது
- கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனரிடம் மனு வழங்கினர்
செய்யாறு:
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழக உழவர் பேரவை சார்பில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு உழவர் பேரவை மாநில செய்தி தொடர்பாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரமேஷ், அய்யப்பன், தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புருஷோத்தமன் பேசுகையில், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள் பயிரிட்டிருந்த கரும்புகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததால் அவை காய்ந்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும், அரவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் கடந்த 5 நாட்களாக ஆலையில் கரும்பு பாரத்துடன் நிறுத்தி வைத்திருந்த லாரி, டிராக்டர்களுக்கு வாடகை தர வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அதன்பின் கோரிக்கைகள் குறித்து உழவர் பேரவையினருடன் சென்று கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனரிடம் மனு வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்