search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காய்க்கு விலை நிர்ணயம் கோரி ஆர்ப்பாட்டம்
    X

    தேங்காய்க்கு விலை நிர்ணயம் கோரி ஆர்ப்பாட்டம்

    • தமிழகம் முழுவதும் நாம் அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தேங்காயையும், தேங்காய் எண்ணையையும் தமிழக அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

    கோவை:

    தமிழகம் முழுவதும் நாம் அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் மாநில தலைவர் பிரபுராஜா தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காயையும், தேங்காய் எண்ணையையும் தமிழக அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதல் ஒரு கிலோ ரூ.130-க்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சோப்பு தயாரிப்புக்கு தேங்காய் எண்ணையை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் விவசாயிகள் உள்பட பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×