search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் ஆர்ப்பாட்டம்"

    • குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்
    • 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே நேற்று மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட செயலாளர் வஜ்ஜிரவேலு தலைமை தாங்கினார். மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைதியாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்துள்ள அனைத்து பொய் வழக்குகளையும், போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் மீது உள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

    இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பரமேஸ்வரன், புருஷோத்தமன், ஞானவேல் உட்பட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • காங்கேயம் டி.எஸ்.பி., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    பிஏபி., வாய்க்காலுக்கு இடம் கொடுத்த விவசாயிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 16-ந்தேதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது , போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது காங்கேயம் டிஎஸ்பி., பார்த்திபன் விவசாயிகளை தாக்கியதாகவும், இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி ஈஸ்வரன் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    எனவே காங்கேயம் டி.எஸ்.பி., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு மலை கிராமங்க ளில் பன்றி, காட்டெருமை, யானைகள் ஆகியவற்றால் பயிர்கள் சேதப்படுத்த ப்பட்டு வருகிறது.
    • பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு மலை கிராமங்களில் பன்றி, காட்டெருமை, யானைகள் ஆகியவற்றால் பயிர்கள் சேதப்படுத்த ப்பட்டு வருகிறது.

    இந்த பயிர்களுக்கு முழு இழப்பீடு தொகை வழங்க வேண்டும், வன விலங்குகளால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வன விலங்குகளால் பாதிக்க ப்பட்டு காயம் அடைந்த வர்களுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும். கேரள அரசை போல பன்றிகளை ஒழித்திட அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முன்னாள் எம்.எல்.ஏ. டில்லி பாபு தலைமை வகித்தார். நிர்வாகிகள் பெருமாள், ராமசாமி, தயாளன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    • தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • தமிழகத்திற்கு கேட்டதை விட மிக குறைந்த அளவு தண்ணீரை திறந்து விட உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டம் தொடங்கும் முன்னர் , காவிரி நீர் பிரச்னை தொடர்பாக மத்திய, கர்நாடக அரசுகளைக் கண்டித்து விவசாய சங்க நிர்வாகிகள் என்.வி. கண்ணன், செந்தில்குமார், ஜீவகுமார் உள்பட ஏராளமான விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி நீர் பிரச்னை தொடர்பாக மத்திய, கர்நாடக அரசுகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தரை நீக்கக் கோரியும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற கோரியும் , தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் தமிழகத்திற்கு கேட்டதை விட மிக குறைந்த அளவு தண்ணீரை திறந்து விட உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கமன மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள், குறுவை பயிரைக் காப்பாற்ற காவிரி நீர் கோரி பானைகளை காவடியாகத் தூக்கி வந்து கலெக்டரிடம் மனு அளித்து முறையிட்டனர்.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • உரிய தண்ணீரை திறந்து விடக்கோரியும், கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி இருந்தது. இதனால் இம்முறை குறுவை பாசனத்தில் நல்ல விளைச்சல் பெறலாம் என விவசாயிகள் நம்பி இருந்தனர்.

    ஆனால் அணை திறக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. மேலும் தமிழகத்திற்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களுக்கான தண்ணீரையும் கர்நாடக அரசு திறந்து விடவில்லை. மிக குறைந்த அளவே தண்ணீரை திறந்து விட்டது. இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீரும் வரவில்லை. கர்நாடக அரசின் இந்த வஞ்சிக்கும் செயலால் தண்ணீர் இன்றி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் காயத் தொடங்கின.

    தமிழக அரசும் கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற பல கட்டங்களாக கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. ஆனால் அப்படியும் கர்நாடக அரசு தமிழகத்திற்கான தண்ணீரை திறந்து விடவில்லை. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை உச்சத்திற்கு சென்றனர்.

    உரிய தண்ணீரை திறந்து விடக்கோரியும், கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்தன. பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    அந்த வகையில் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார்.

    பொருளாளர் மணிமொழியன், துரை. ரமேசு, நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஹீமாயூன் கபீர், மணி செந்தில், தமிழ் தேசிய பேரியக்கம் மாவட்ட செயலாளர் வைகறை, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுலாப்தீன் , தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் தலைவர் கார்த்திகேயன், மனிதநேய ஜனநாயக கட்சி அகமது கபீர், தமிழர் தேசிய களம் தலைவர் கலைச்செல்வம், ஆழ்துளைக் கிணற்று பாசன விவசாயிகள் சங்கம் தலைவர் புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி, இயக்க, விவசாய சங்க நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும். செயல்படாத காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தரை நீக்கி நடுநிலை உள்ள புதிய ஆணையம் அமைக்க வேண்டும். குறுவை, சம்பா, தாளடி நெற்பயிர்களை காக்க உடனடியாக தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். கர்நாடகத்திற்கு ஆய்வு குழு அனுப்பி காவிரி நீர் தேக்கங்களில் உள்ள நீரின் அளவு, மழை பொழிவு அளவு ஆகியவற்றின் உண்மை நிலையை அறிந்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் காவிரி உரிமை மீட்பு குழு செந்தில் வேலன், தனசேகரன், தமிழ் தேசிய பேரியக்கம் பழ. ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல செயலாளர் வீர. பிரபாகரன் மற்றும் பல்வேறு கட்சி, இயக்கம், விவசாய சங்க நிர்வாகிகள், டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் அபிமன்னன், மாநகர செயலாளர் வடிவேலன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • வரும் காலங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடையின்றி கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய காவிரி தண்ணீரை வழங்காத கர்நாடக மாநில அரசை கண்டித்தும், கருகும் குறுவைப் பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தியும் இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் அபிமன்னன், மாநகர செயலாளர் வடிவேலன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கர்நாடக அரசை கண்டித்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வலியுறுத்தியும் பேசினர்.

    இதில் தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், வரும் காலங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடையின்றி கர்நாடக அரசு வழங்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்காமல் காவிரி நீரை வழங்க கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு நிர்வாகிகள் குருசாமி, இளங்கோவன், சரவணன், வசந்தி , விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி கரும்புகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டகுடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையை நிர்வாகம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.115 கோடி வழங்கவில்லை. மேலும் 2018 ஆம் ஆண்டு இந்த ஆலை நிர்வாகம் ஆலையை நிரந்தரமாக மூடியது. மேலும் ஆலை நிர்வாகம், விவசாயிகளின் பெயரில் மோசடியாக வங்கிகளில் சுமார் பல கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.

    எனவே ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரியும் கடந்த 8 மாதங்களாக அந்த ஆலை முன்பு தொடர் போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி இன்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க காசிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் முன்னிலை வகித்தார்.

    இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன், கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி கரும்புகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மாட்டு கொட்டகைக்கு வேண்டி மனு கொடுத்தும் பலன் இல்லை
    • என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்திற்கான விவசாயிகள் குறை தீர்வுகூட்டம் கீழ் புதுப்பாக்கம் கிராமத்தில் சமுதாயக் கூடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் ஆர். அனாமிகா தலைமை தாங்கினார்.

    தாசில்தார்கள் முரளி, ராஜலட்சுமி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். செய்யாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் வரவேற்றார். கூட்டத்தில் வேளாண் பயிர்க் காப்பீட்டில் தனியார் நிறுவனத்தை சேர்க்க கூடாது என்றும், மாட்டு கொட்டகைக்கு வேண்டி மனு கொடுத்தும் பலன் இல்லை எனவும், கூட்டத்தை செய்யாறு தாசில்தார் அலுவலகத்தில் நடத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    அப்போது விவசாயிகள் கழுத்தில் என்எல்சி என்ற விளம்பர பதாகை தொங்கவிட்டபடி நெல் பயிர்களை அழித்துவிட்டு என்னதான் நீங்கள் சாப்பிட போகிறீர்கள் என கேள்வி கேட்கும் விதமாக விவசாயிகள் மாடுகள் போல வேடமிட்டு அரிசி, தவிடு கலந்துள்ள தண்ணீரை மாடுகள் போல மண்டியிட்டு குடித்தும், அகத்திக்கீரை தழை சாப்பிட்டும், என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாளிகைப்பட்டு ராஜ், பெருங்களத்தூர் ரகுபதி, சிருங்கட்டூர் முருகன், ஏனாதவாடி கஜேந்திரன், பில்லாந்தி தட்சிணாமூர்த்தி, திருபூண்டி ரகுபதி, அகத்தேரிபட்டு கிருஷ்ணன் ,கீழ் புதுப்பாக்கம் முனிரத்தினம் ஆகிய உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்:

    செஞ்சிஅருகே உள்ள பாலப்பாடி கூட்ரோட்டு செம்மேடு தனியார் சர்க்கரை ஆலை எதிரில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை தாங்கினார். ஆலை மட்ட தலைவர் தினேஷ்குமார் பொருளாளர் விநாயகம் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர் முருகன் ,மாவட்ட துணைத் தலைவர் மாதவன், செஞ்சி வட்ட தலைவர் சிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் கோட்ட நிர்வாகிகள் ஏழுமலை, வெங்கடேசன், நரசிம்ம ராஜன், சீத்தராமன், ராஜேந்திரன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துரைராஜ் நன்றி கூறினார்

    • சாயபட்டறை தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.
    • விவசாயிகள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோ கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் கரையில் தனியார் நிறுவனம் சார்பில் 35 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி மதிப்பில் சாயபட்டறை தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று கோபி-சத்தி மெயின் ரோடு கொடிவேரி அணை பிரிவு பகுதியில் சாயபட்டறை தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து காலை 10 மணி முதலே விவசாயிகள் கொடிவேரி அணை பிரிவு பகுதிக்கு கையில் பதாகைகளுடன் திரண்டு வந்தனர். பின்னர் காலை 10.50 மணி அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தளபதி தலைமை தாங்கினார். கீழ்பவானி பாசன சபை தலைவர் ராமசாமி வரவேற்றார். இதில் காலிங்கராயன் பாசன பகுதி சங்கத் தலைவர் வேலாயுதம் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோ கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    • குறை தீர்வு கூட்டம் நடந்தது
    • 8 கொள்முதல் மையங்கள் செயல்பட வேண்டிய இடத்தில் 2 மட்டுமே செயல்படுகிறது

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் வேளாண் விரிவாக்க மையத்தில் உதவி திட்ட அலுவலர் திருமால் தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது திடீரென விவசாயிகள் ஏர்கலப்பை போன்று செய்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குறிப்பாக கலசபாக்கம் பகுதியில் தான் அதிக அளவு விளைச்சல் உள்ளது. ஆனால் இங்கு 2 நெல் கொள்முதல் மையங்கள் தான் செயல்படுகிறது. 8 கொள்முதல் மையங்கள் செயல்பட வேண்டிய இடத்தில் 2 செயல்பட்டால் விவசாயிகள் எப்படி முழுமையாக பயன்பெறுவார்கள்.

    இதனால் கலசப்பாக்கம் பகுதியில் அதிக இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் உதவி திட்ட அலுவலர் திருமால் உங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக தான் இந்த கூட்டமே நடக்கிறது. உங்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்று கூறினார்.

    பின்னர் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் வேளாண் அலுவலகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. குறைவு தீர்வு கூட்டத்தில் தாசில்தார் ராஜேஸ்வரி, வேளாண் அலுவலர் கோபாலகிருஷ்ணன், பிடிஓ முருகன் உட்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கன்னிப்பூ சாகுபடிக்காக ஜூன் மாதம் 1-ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
    • தண்ணீர் இல்லாததால் வில்லுக்குறி, பாறையடி பகுதிகளில் நாற்றுகள் கருகும் நிலைக்கு வந்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், அருமநல்லூர், பூதப்பாண்டி, வில்லுக்குறி பகுதிகளில் நடவு பணிக்காக நாற்று பாவப்பட்டு உள்ளது. பி.பி.சானலுக்கு வராத தண்ணீர்ஒ வ்வொரு ஆண்டும் கன்னிப்பூ சாகுபடிக்காக ஜூன் மாதம் 1-ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அதுபோல இந்த ஆண்டும் கடந்த 1-ந்தேதி பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் தண்ணீர் திறக்கப்பட்டு 6 நாட்கள் ஆன நிலையில் வில்லுக்குறி அருகே உள்ள பி.பி. சானலில் தண்ணீர் விடவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தண்ணீர் இல்லாததால் வில்லுக்குறி, பாறையடி பகுதிகளில் நாற்றுகள் கருகும் நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கருகிய நாற்றுகளுடன் இன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் பொ துப்பணித்துறை அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் விஜி தலைமை தாங்கினார். வின்ஸ் ஆன்றோ, செல்லப்பா ஆகியோர் சானலில் தண்ணீர் திறந்து விடுவது பற்றி பேசினர். செண்பக சேகரப்பிள்ளை, ராதா கிருஷ்ணன், தங்கப்பன், ரவி, சேகர், முருகேசன், சைமன் சைலஸ், ஆறுமுகம் பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், கருகிய நாற்றுடன் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் கூறுகையில், அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 6 நாட்களாகியும் பி.பி. சானலில் தண்ணீர் திறந்து விடவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளை பலமுறை சந்தித்து மனு அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு சானல்கள் தூர்வா ரப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தண்ணீர் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டத்திலுள்ள அனைத்து கால்வாய்களையும், சானல்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×