search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    செஞ்சி அருகே கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்:

    செஞ்சிஅருகே உள்ள பாலப்பாடி கூட்ரோட்டு செம்மேடு தனியார் சர்க்கரை ஆலை எதிரில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை தாங்கினார். ஆலை மட்ட தலைவர் தினேஷ்குமார் பொருளாளர் விநாயகம் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர் முருகன் ,மாவட்ட துணைத் தலைவர் மாதவன், செஞ்சி வட்ட தலைவர் சிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் கோட்ட நிர்வாகிகள் ஏழுமலை, வெங்கடேசன், நரசிம்ம ராஜன், சீத்தராமன், ராஜேந்திரன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துரைராஜ் நன்றி கூறினார்

    Next Story
    ×