search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.
    • அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3,850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது.

    இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.

    கோவை வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி–னையும் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது விவசாயிகளை பாதிக்கும் எந்தொரு திட்டத்தையும் செயல்படுத்தப் போவதில்லை என முதல்வர் உறுதி அளித்தாக விவசாயிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூரில் சிட்கோ அமைப்பதற்காக 3731 ஏக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தொடர்ந்து நமது நிலம் நமதே போராட்ட குழுவின் சார்பில் அன்னூரை அடுத்துள்ள குழியூரில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணி நடந்தது.

    இதன் தொடர்ச்சியாக இன்று காலை 10 மணியளவில் அன்னூர் தாலுகா அலுவலகம் முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போரா–ட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள், எங்களுக்கான நிரந்தர தீர்வை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

    விவசாயிகள் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தலை–மையில், மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வராஜ்,அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா, காரமடை இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் துகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டம் காரணமாக அன்னூரில் இருந்து சக்தி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாநில தலைவர் வேணுகோபால், நமது நிலம் நமது தலைவர் ரவிக்குமார், நமது நிலம் நமது செயலாளர் ராஜன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×