search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு கூட்டம்"

    • பீட்சா, பர்கர் போன்ற துரித உணவை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.
    • அன்னை பாத்திமா கல்லூரி முதல்வர் அறிவுரை வழங்கினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் நாட்டு நல பணித்திட்டம் மற்றும் திருமங்கலம் வட் டார ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சிப் பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் அனுமதி யின் பேரில் கல்லூரி முதல் வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற் றது.

    இதில் இளம் வயதில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய விட்டால் பிற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை தவிர்த்து சரிவிகித சத்தான உணவை மாணவ, மாணவிகள் உட் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழவேண்டும் என கூறினார்.

    மருத்துவ அலுவலர் ஹரிஷ் ஊட்டச்சத்து சரி விகித உணவு பற்றியும், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காந்திமதி ரத்த சோகை பற்றியும், வட்டார ஒருங்கிணைப்பாளர் பாரதி பெண்களுக்காக அரசு வழங்கும் சுகாதார திட்டங் கள் பற்றியும் எடுத்துரைத் தனர்.

    இறுதியில் ஊட்டச் சத்து பற்றி எழுப்பிய வினாக்க ளுக்கு சரியான விடை அளித்த மாணவ, மாணவிக ளான தமிழ் துறை யைச் சார்ந்த ஹரி சங்கர், துர்க்கா, வணிகவியல் துறையைச் சார்ந்த ஹேமஸ்ரீ, ரூபஸ்ரீ, நாகஜோதி ஆகியோ ருக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி னார். முன்னதாக தமிழ்த்து றைத் தலைவரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரு மான முனைவர் முனி யாண்டி வரவேற்றார்.

    கூட்டத்தில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் ராமுத்தாய், சிங்கராஜா, ராஜேஸ்வரி, இன்பமேரி, ஜோதி, ஆறுமுகஜோதி வர லாற்றுத்துறைத் தலை வர் மணிமேகலை, உதவிப்பேரா சிரியர் இருளாயி, வணிகவி யல் துறை உதவிப்பேராசி ரியர் சிவசுந்தரி, சகாய வாணி, முத்துலெட்சுமி, கதிரேசன் உள்ளிட்ட 20 பேராசிரியர்களும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை நாட்டு நல பணித்திட்ட தொண்டர் கள் செய்தனர். இறுதியில் வணிகவியல் துறைத்தலை வர் தனலெட்சுமி நன்றி கூறினார்.

    • கொள்ளை சம்பவங்கள் தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில்போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே முருங்கதொழுவு ஊராட்சி க்கு உட்பட்ட ஒட்டன் கொட்டை கரியாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள்.

    இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்ய ப்பட்டனர். மேலும் இவர்கள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டது தெரிய வந்தது.

    இதையொட்டி பொது மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யிலும் கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் சென்னிமலை அருகே அம்மன் கோவில் புதூரில் உள்ள வாகை த்தொழுவு அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் தலைமை தாங்கினார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சர வணன் முன்னிலை வகி த்தார்.

    இந்த கூட்டத்தில் தனியாக தோட்ட பகுதி களில் குடியிருப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி தலைவர்கள், போலீசார் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • சத்தியமங்கலம் காவல்துறை அதிகாரிகள் சார்பில் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • இக்கூட்டத்தில் சுமார் 700 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் சத்தியமங்கலம் காவ ல்துறை அதிகாரிகள் சார் பில் ஒருங்கிணைந்து விழி ப்புணர்வு கூட்டம் நடந்தது.

    இக்கூட்டத்திற்கு கல்லூ ரியின் முதல்வர் ராதாகி ருஷ்ணன் தலைமை தாங்கி னார். மாணவர்கள் சமுதா யத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விரிவாக எடுத்துரைத்தார்.

    இக்கூட்டத்தில் சத்தி யமங்கலம் அனைத்து மக ளிர் இன் ஸ்பெக்டர் இந்தி ராணி சோ பியா கல்லூரி மாணவ, மாணவிகள் இளம் வயதில் அடையும் பாதிப்புகள், போக்சோ தண்டனைகளை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.

    சத்தியமங்கலம் போக்குவரத்துதுறை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், மாண வர்கள் கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகளை பற்றி எடுத்துரைத்தார்.

    சத்தியமங்கலம் சட்டம் ஒழுங்கு முருகேசன் மாணவ சமுதாயம் போதை, குடிப்பழக்கம் மற்றும் தவறான பழக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இக்கூட்டத்தில் சுமார் 700 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ் துறை பேராசிரியர் பழனி சாமி வரவேற்றார். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

    • நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • நெசவாளர்களுக்கான முத்ரா கடன் மேளா மற்றும் அரசு நல்வாழ்வு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது.

    விருதுநகர்

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை வட்டார மருத்துவ அலுவலர் கருணாகர பிரபு ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி துணை சேர்மன் செல்வமணி, விருதுநகர் கைத்தறித்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயசுதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    முகாமில் நெசவாளர்களுக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், ரத்த சர்க்கரை அளவ பரிசோதனை, நவீன இசிஜி பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தேவைப்படுவோருக்கு மருந்துகளும் வழங்கப்பட்டன. யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 229 நெசவாளர்கள் பங்கேற்றனர். நெசவாளர்களுக்கான முத்ரா கடன் மேளா மற்றும் அரசு நல்வாழ்வு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது.

    • கூட்டத்திற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.டி.சி.ஆர்.சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார்.
    • பாம்புகளின் குணங்கள் குறித்து விளக்கம் அளிக்கபட்டது.

    கிருஷ்ணகிரி,

    பாம்பு இனங்களை பாதுகாக்கும் நோக்கிலும், பாம்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக பாம்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு நேற்று முன்தினம் கிருஷ்ண கிரியில் உள்ள டி.சி.ஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில், பாம்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.டி.சி.ஆர்.சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். டி.சி.ஆர். பஸ் உரிமையாளர் முருகேசன், சங்கீதா சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை டாக்டர்.சின்னராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

    இதில் சிறப்பு விருந்தி னர்களாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செல்லக்குமார், சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை யாற்றினார்கள்.

    நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்கள் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகள் நல்ல பாம்பு, கட்டு வீரியன், கண்ணாடி வீரியன், சுருட்டை வீரியன், பூ பாம்பு ஆகியவையாகும் என கூறிய அவர்கள், பாம்புகளின் குணங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம், வக்கீல் காசிலிங்கம், டாக்டர்கள் அறிவுச்செல்வன், ராஜா, உமாபதி, பர்கூர் விஜய் வித்யாலயா நர்சிங் கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவி தலைமையில் மாணவ, மாணவிகள், ஜீவா நர்சிங் கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமையில் மாணவ, மாணவிகள், டி.சி.ஆர். கல்லூரி முதல்வர் சுமதி தலைமையில் மாணவ, மாணவிகள், நாளந்தா சர்வதேச பொதுப்பணி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.சி.ஆர். மருத்துவமனை மருத்துவர்கள் ரஞ்சனா, உதயசந்திரிகா, கெமிலா, பவித்ரா, யுவதாரணி, சையத் மோகித் உசைன், முதன்மை செயல் அலுவலர் அனிதா, நிர்வாக அலுவலர் சாவீர்பாஷா ஆகியோர் செய்திருந்தனர்.

    • அன்னப்பராஜா பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
    • மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு மன்றத்தின் சார்பில், போதை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடை பெற்றது. தலைமையாசிரியர் நல்லாசிரியர் ரமேஷ் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் பேசுகையில், இன்றைய நாளில் மாணவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால், கல்வியில் நாட்டமின்மை, ஒழுக்கக்கேடுகள், சமூகவிரோதச் செயல்பாடுகள், சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    இவைகளிலிருந்து மாணவர்கள் விடுபடவேண்டும் என்றார். கூட்டத்தில் போதை தடுப்பு மன்ற உறுப்பினர்களும் மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார். 

    • போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது
    • மாலை 7 மணிக்கு மேல் பொருட்களை இறக்குவது குறித்து ஆலோசனை

    நெமிலி:

    ராணிப்பேட்டைமாவட்டம்,காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தீபிகா முருகன் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் பள்ளி, கல்லூரி அலுவலக வேலை நேரங்களான காலை 8 முதல் 11 மணிவரையிலும் மற்றும் மாலை 4 முதல் 7 மணி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

    ஆதலால் வணிக பொருட்களை ஏற்றிவரும் லாரிகளுக்கு போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள நேரங்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மற்றும் மாலை 7 மணிக்கு மேல் பொருட்களை இறக்குதல் பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், போலீசார்,வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • இம்மூன்று இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும்.
    • ஜவுளித் தொழில்முனைவோர்கள் அரசு மானியம் ரூ.2.50 கோடியுடன் கூடிய இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், துணிநூல் துறை சார்பாக சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைத்தல் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டட தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும்.

    இவ்வாறு அமைய உள்ள ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.

    இத்தகைய சிறிய ஜவுளிப் பூங்காவின் அமைப்பு, நிலம், உட்கட்டமைப்பு வசதிகள் (சாலை வசதி, சுற்றுச்சுவர், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், நீர் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவு நீரை சுத்திரிகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி போன்றவைகள்), ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள், இயந்திரகள் மற்றும் தளவாடங்கள் ஆகிய உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்.

    சிறிய ஜவுளிப் பூங்காவிற்கான அரசு மனியம் பெறுதவற்கான திட்ட மதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்ட உட்கட்டமைப்பு வசதிகள், ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள் ஆகிய இனங்கள் சேர்ந்து ஆகும்.

    எனவே, இம்மூன்று இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும். இத்திட்டத்தின் கீழ் அதிகப்படியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மேலும், ஜவுளித் தொழில்முனைவோர்கள் அரசு மானியம் ரூ.2.50 கோடியுடன் கூடிய இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் அனுப்புவது மற்றும் இதர தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறை, 1ஏ-2/1, சங்ககிரி மெயின் ரோடு, குகை, செல்- 636 006 (தொலைபேசி எண். 0427-2913006), இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில், துணிநூல் துறையின் சேலம் மண்டல துணை இயக்குநர் அம்சவேணி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி, ஊரக வாழ்வாதார இயக்கம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • விபத்து ஏற்படாமல் கவனுத் துடன் பணியாற்றுதல் உள் ளிட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினர்
    • வாடிக்கையாளர்கள் தெரிவித்த குறைகளை தீர்வு காணப்படும் என தெரிவித்தார்

    சோளிங்கர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற் றும் பகிர்மான கழகம் சார் பில் வருவாய் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு விழிப்பு ணர்வு கூட்டம் சோளிங்கரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சோளிங்கர் செயற்பொறியா ளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி செயற் பொறியாளர் உமாசந்திரா முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர் சங்கர் வரவேற்றார்.

    வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு வருவாய் மேம்ப டுத்துதல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பல் வேறு ஆலோசனை வழங்கினார்.

    மேலும் பணியின் போது தேவையான உபகர ணங்கள் வைத்திருத்தல், விபத்து ஏற்படாமல் கவனுத் துடன் பணியாற்றுதல் உள் ளிட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.

    உதவி பொறியாளர்கள், மதிப்பீட்டு அலுவலர், உதவி கணக்கு அலுவலர், வருவாய் மேற்பார்வையாளர்கள், கணக்கீட்டு கண்காணிப்பா ளர்கள், கணக்கீட்டாளர்கள் மற்றும் கோட்ட கண்காணிப் பாளர்கள் கலந்து கொண்ட னர்.

    முன்னதாக சோளிங்கர் மின் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் வேலூர் மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு குறைகளை கேட்ட றிந்தார். வாடிக்கையாளர்கள் தெரிவித்த குறைகளை தீர்வு காணப்படும் என தெரி வித்தார்.

    • வாகனங்களுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அதற்கான உரிமம் வழங்கப்பட உள்ளது.
    • விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதோடு உரிமமும் ரத்து செய்யப்படும்.

    காங்கயம் :

    கழிவுநீர் அகற்றும் வாகனங்களைப்பதிவு செய்வது மற்றும் கழிவுகளை முறையாக அகற்றுவது குறித்து காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன் தலைமை தாங்கி பேசியதாவது:- மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அதற்கான உரிமம் வழங்கப்பட உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் மட்–டுமே. உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டிடங்களில் இருந்து மனிதக்கழிவுகள் மற்றும் கழிவுநீரை சேகரித்துக்கொண்டு செல்வது விதிகளுக்கு முரணானது. உரிமை பெற்றவரின் வாகனத்தில் மட்டுமே கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும்.

    மேலும் உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி, ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், அந்தக்கருவி செயல்படுவதையும், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகளை அனுப்புவதையும் உறுதி செய்யவேண்டும். கழிவுநீர் அகற்றும் நேரம், வழி ஆகியவற்றைப் பின்பற்றி குறிப்பிட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    இந்த விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், முதல் முறை குற்றத்திற்கு ரூ.25 ஆயிரமும், 2-வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கப்படுவதோடு உரிமமும் ரத்து செய்யப்படும். எனவே காங்கயம் பகுதிகளில் அகற்றப்படும் கழிவுகளை சென்னிமலை சாலையில் உள்ள நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கழிவு நீரைக்கொட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் எம்.பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ் மற்றும் காங்கயம் பகுதியைச்சேர்ந்த கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள் கலந்துகொண்டனர்.

    • திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்தது
    • வாகனங்கள் இயக்கும் முறை, பாதுகாப்பான வேகத்தில் செல்வது குறித்து அறிவுரை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காலை பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தி இருந்தார்.

    இதனை தொடர்ந்து திருப்பத்தூர் அரசு கலைக் கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    விழிப்புணர்வு கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர். டாக்டர் விஜயராஜ் தலைமை வகித்தார் மற்றும் கல்லூர் பேராசிரியர்கள்.

    மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் வாணியம்பாடி போக்கு வரத்து அலுவலர்.ராமகிருஷ்ணன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முரளி சாலை பாதுகாப்பு குறித்த குறும்படம் மற்றும் விபத்துக்கள் குறித்த புள்ளி விவரங்களை திரையிட்டு மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும், சாலையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வாகனங்க ள்இயக்கும் முறை சரியான பாதுகாப்பான வேகத்தில் செல்லுதல், சாலையில் செய்யக்கூடாத தவறுகள், குறித்து எடுத்துரை க்கப்பட்டது.

    மாணவர்கள் அவர்கள் எதிர்காலம் கருதி மிகவும் பாதுகாப்பான முறையில் சாலையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    • காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • கொழுமம் வனச்சரகர் மகேஷ் மற்றும் வனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    உடுமலை :

    கோடை காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் காரணமாகவும் அதிகப்படியான பனிப்பொழிவினாலும் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் கருக தொடங்குவதால் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதால்திருப்பூர் வனக்கோட்டத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ள தளிஞ்சி, மஞ்சம் பட்டி,கோடந்தூர்,பொருப்பாறு உட்பட்ட 17 செட்டில்மென்ட்டுகளிலும்,வன எல்லையில் உள்ள கிராமங்களிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி கோடந்தூர்,தளிஞ்சி மலைவாழ் மக்களுக்கும்,குதிரையாறு அணை தொடக்கப்பள்ளியிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.இதில் உடுமலைப்பேட்டை வனச்சரகர் சிவக்குமார், அமராவதி வனச்சரகர் சுரேஷ்,கொழுமம் வனச்சரகர் மகேஷ் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    ×