search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
    X

    மின் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

    • விபத்து ஏற்படாமல் கவனுத் துடன் பணியாற்றுதல் உள் ளிட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினர்
    • வாடிக்கையாளர்கள் தெரிவித்த குறைகளை தீர்வு காணப்படும் என தெரிவித்தார்

    சோளிங்கர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற் றும் பகிர்மான கழகம் சார் பில் வருவாய் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு விழிப்பு ணர்வு கூட்டம் சோளிங்கரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சோளிங்கர் செயற்பொறியா ளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி செயற் பொறியாளர் உமாசந்திரா முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர் சங்கர் வரவேற்றார்.

    வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு வருவாய் மேம்ப டுத்துதல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பல் வேறு ஆலோசனை வழங்கினார்.

    மேலும் பணியின் போது தேவையான உபகர ணங்கள் வைத்திருத்தல், விபத்து ஏற்படாமல் கவனுத் துடன் பணியாற்றுதல் உள் ளிட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.

    உதவி பொறியாளர்கள், மதிப்பீட்டு அலுவலர், உதவி கணக்கு அலுவலர், வருவாய் மேற்பார்வையாளர்கள், கணக்கீட்டு கண்காணிப்பா ளர்கள், கணக்கீட்டாளர்கள் மற்றும் கோட்ட கண்காணிப் பாளர்கள் கலந்து கொண்ட னர்.

    முன்னதாக சோளிங்கர் மின் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் வேலூர் மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு குறைகளை கேட்ட றிந்தார். வாடிக்கையாளர்கள் தெரிவித்த குறைகளை தீர்வு காணப்படும் என தெரி வித்தார்.

    Next Story
    ×