search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ்- பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டம்
    X

    போலீஸ்- பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டம்

    • கொள்ளை சம்பவங்கள் தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில்போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே முருங்கதொழுவு ஊராட்சி க்கு உட்பட்ட ஒட்டன் கொட்டை கரியாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள்.

    இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்ய ப்பட்டனர். மேலும் இவர்கள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டது தெரிய வந்தது.

    இதையொட்டி பொது மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யிலும் கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் சென்னிமலை அருகே அம்மன் கோவில் புதூரில் உள்ள வாகை த்தொழுவு அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் தலைமை தாங்கினார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சர வணன் முன்னிலை வகி த்தார்.

    இந்த கூட்டத்தில் தனியாக தோட்ட பகுதி களில் குடியிருப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி தலைவர்கள், போலீசார் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×