search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை வனப்பகுதி கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டம்
    X

    உடுமலை வனப்பகுதி கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டம்

    • காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • கொழுமம் வனச்சரகர் மகேஷ் மற்றும் வனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    உடுமலை :

    கோடை காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் காரணமாகவும் அதிகப்படியான பனிப்பொழிவினாலும் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் கருக தொடங்குவதால் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதால்திருப்பூர் வனக்கோட்டத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ள தளிஞ்சி, மஞ்சம் பட்டி,கோடந்தூர்,பொருப்பாறு உட்பட்ட 17 செட்டில்மென்ட்டுகளிலும்,வன எல்லையில் உள்ள கிராமங்களிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி கோடந்தூர்,தளிஞ்சி மலைவாழ் மக்களுக்கும்,குதிரையாறு அணை தொடக்கப்பள்ளியிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.இதில் உடுமலைப்பேட்டை வனச்சரகர் சிவக்குமார், அமராவதி வனச்சரகர் சுரேஷ்,கொழுமம் வனச்சரகர் மகேஷ் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    Next Story
    ×