search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு போட்டி"

    • 100 மீட்டர் ஓட்டம்.45 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம்.
    • காலை 8 மணிக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஆஜராகி போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - சர்வதேச அளவில் இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த இந்திய ஹாக்கி ஒலிம்பியன் மேஜர் தயான்சந் தை கவுரவிக்கும் வகையில், அவரின் பிறந்தநாளினை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டு 29 -ந்தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவதால், அதனை நினைவு கூறும் வகையில் கீழ்கண்டவாறு விளையாட்டுப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும்.

    இதில் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி மற்றும் 100 மீட்டர் ஓட்டம்.25 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர்கூடைப்பந்து மற்றும் 100 மீட்டர் ஓட்டம்.45 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் குழு விளையாட்டிற்கு ஒரு குழுவாகவும், தனிநபர் போட்டிக்கு தனியாகவும் தங்களது நுழைவு விண்ணப்பத்தினை 28 -ந்தேதி பிற்பகல் 5 மணிக்குள் கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அனுப்பிவைத்து, போட்டி நடைபெறும் அன்று காலை 8 மணிக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஆஜராகி போட்டிகளில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 9 மற்றும் 10-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டி நடக்கிறது
    • இறுதி கட்ட போட்டித் தேர்வு 23-ந் தேதி நடைபெறுகிறது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா ஈஷா புத்துணர்வு கோப்பை முதல் கட்ட போட்டிகள் நேற்று நடைபெற்றது.

    இதில் மாவட்ட முழுவதும் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு முதல் கட்ட கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்களுக்கான கைப்பந்து போட்டி அணியினர் போட்டியில் பங்கேற்றனர்.

    இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.

    மேலும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு இறுதி கட்ட போட்டித் தேர்வு கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் ஆதியோகி முன்பு சத்குருவும் விருந்தினர்கள் முன்னிலையில் செப்டம்பர் 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    • வாடிப்பட்டியில் மரபு வழி விளையாட்டு போட்டிகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
    • சுதந்திர தினவிழாவையொட்டி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் பல்வேறு போட்டிகள் நடந்தன.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூர் மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழாவையொட்டி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் காலம் மாற்றத்தால் மறக்கப் பட்டு வரும் மரபு வழி விளையாட்டுகள் அறிமுக விழாவும் மற்றும் மரபு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் மாணவர்களுக்கு பச்சை குதிரை, 7-கல், கிட்டிப்புல் போன்ற விளை யாட்டுகளும், மாணவிகளுக்கு பாண்டியாட்டம் (நொண்டி), கிச்சுகிச்சு தாம்பூலம் மற்றும் பல்லாங்குழி ஆகிய விளை யாட்டு போட்டிகளும் நடத்தப் பட்டது. இந்த விளையாட்டு போட்டிக்கு தலைமையாசிரியர் சந்திரன் தலைமை தாங்கி னார். ஊராட்சி மன்றத்தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரெங்கநாயகி, பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் பரம சிவம், உணவுப்பொருள் பாது காப்பு அலுவலர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்மரபு அறக்கட்டளை மதுரை கிளை பொறுப்பாளர் சுலேகா பானு தமிழ் மரபு அறக்கட்டளை அறிமுகவுரையாற்றினார். மரபு விளையாட்டுகள் குறித்து மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி பேராசிரியை பாப்பா விளக்கி பேசினார்.

    இப்போட்டியின் நடுவர்க ளாக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் வெற்றியாளர் களை தேர்வு செய்தனர்.இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் சரவணக்குமார், மோசஸ், நஜ்மூதீன், பேராசிரியை.இறைவாணி, முத்துக்குமார், தாமரைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜன் நன்றி கூறினார்.

    • 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறயுள்ளது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல் நிலை பள்ளி வளாகத்தில் வட்ட அளவிலான செஸ், கேரம், வாலிபால், இறகு பந்து போட்டி, கபாடி போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறயுள்ளது.

    இதில் அரசு பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கின்றனர்.

    இப்போட்டி வருகிற செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி ஆய்வாளர் குணசுந்தரி பள்ளி மாணவ, மாணவி களுக்கு இடையே நடைபெறும் செஸ் போட்டியை தொடங்கி வைத்தார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக துணை தலைவர் ம.அன்பழகன், நகர மன்ற துணை தலைவர் இந்திராபெரியார்தாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விளையாட்டு போட்டியில் நகர மன்ற கவுன்சிலர் புன்னகை கமலசேகரன், பெற்றோர் ஆசிரியர் சங்கம் துணை தலைவர் முகிலன், சங்க இணை செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் சண்முகம், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மதன் குமார் நன்றி கூறினார்.

    • செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வர் சரோ தனராஜன் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
    • சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட CISCE (Counsil for Indian School Certificate Examinations) பள்ளிகளுக்கு இடையிலான 2013-ம் ஆண்டிற்கான மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் கோவையில் சத்குருவால் தொடங்கப்பட்ட ஈஷா ஹோம் ஸ்கூலில் சிறப்பாக நடைபெற்றன.

    இதில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விளையாட்டு போட்டிக்கான கொடியை ஏற்றி வைத்தார். செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வர் சரோ தனராஜன் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

    ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து 65 பள்ளிகள் மற்றும் 1,400 தடகள வீரர்கள் பங்கேற்றனர். வயதுகளின் அடிப்படையில் சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

    சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் லே மார்கரேட் ராஜீவ் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் பிரிவில் தன்வந்த் ராஜா, ஐயன் அமன்னா, பிரச்சனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

    ஜூனியர் பெண்கள் பிரிவில் நெல்சி செர்லின் மற்றும் சாதனா ரவி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் ருத்ரேஷ் பாலாஜி தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.

    சீனியர் பெண்கள் பிரிவில் சஞ்சனா, சக்தி ராஜாராம் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் சவன் எஸ் ரெஜினால்ட் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்த விளையாட்டு போட்டிகளின் தரத்தை உறுதி செய்யும் விதமாக, கோவை மாவட்ட தடகள சங்கத்தின் தொழில்நுட்ப குழு தலைவர் ஸ்ரீநிவாசன் மற்றும் துணைத் தலைவர் சிவகுமார் ஆகியோரின் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக, போட்டியின் தொடக்க விழாவில் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் களரிப் பயட்டு போட்டியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    • பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் உட்பட 608 பேர் பங்கேற்றனர்.
    • மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றிய திருப்பூர் மாவட்டம் 20வது இடம் பெற்றது.

    திருப்பூர்:

    மாநில முதல்வர் கோப்பைக்கான போட்டி சென்னையில் ஜூன் 30-ந்தேதி துவங்கியது. ஜூலை, 25 வரை ஒரு மாதம் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் உட்பட 608 பேர் பங்கேற்றனர்.

    துவக்கத்தில் வெற்றி புள்ளிகளை பெற்று முதல் 10 மாவட்டங்களுக்குள் இருந்த திருப்பூர் பின்னர் பின்தங்கியது. இருப்பினும் போட்டி நிறைவில் 38 மாவட்டங்கள் பட்டியலில் 20வது இடத்தை தக்க வைத்துள்ளது.

    டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் ஸ்ரீ சைலேஸ்வரி, ஸ்ரீ சாஸ்தாயினி ஜோடி தங்கம், தனிநபர் பிரிவில் ஸ்ரீ சைலீஸ்வரி வெள்ளி வென்றார். பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் பிரவந்திகா தங்கம், இரட்டை பிரிவில் பிரவந்திகா - பிரசித்தா ஜோடி தங்கம் வென்றனர். தனிநபர் பிரிவில் சுதன் வெள்ளி வென்றார்.

    ஒற்றை சுருள்வாள் சிலம்பம் போட்டியில் சபரிநாதன் வெண்கலம், 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வைஷாலி வெண்கலம், அரசு ஊழியர் பிரிவில் சதுரங்க போட்டியில் நித்யா, பாஸ்கர் இருவரும் வெண்கலம் வென்றனர். மாநில போட்டியில் 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றிய திருப்பூர் மாவட்டம் 20வது இடம் பெற்றது.

    • ஆக்கி ஆகிய விளையாட்டுப் போட்டிகளில், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது.
    • 35 பள்ளிகளில் இருந்து 350 மாணவர்களும், 300 மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி அடுத்த மகராஜகடை அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று சரக அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மேரிரோசலின் தொடங்கி வைத்தார். இதில், கால்பந்து, கைப்பந்து, டென்னிஸ், கேரம் மற்றும் ஆக்கி ஆகிய விளையாட்டுப் போட்டிகளில், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது.

    அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி என மொத்தம் 35 பள்ளிகளில் இருந்து 350 மாணவர்களும், 300 மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    • மாவட்ட அளவிலான போட்டிகளில் 3,76,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
    • மாநில அளவிலான இறுதிப் போட்டிகளில் 27,000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

    சென்னை:

    சென்னை. ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் "முதலமைச்சர் கோப்பை 2023" மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அதிக பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாவட்ட அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளையும், 27-வது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு அணியைச் சார்ந்த 22 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 60 இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் நமது பாரம்பரிய விளையாட்டான கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகளையும், பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இப்போட்டிகளை நடத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். 

    இரண்டாம் பரிசு பெற்ற செங்கல்பட்டு அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கிய முதலமைச்சர்.
    இரண்டாம் பரிசு பெற்ற செங்கல்பட்டு அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கிய முதலமைச்சர்.

    அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் மாதம் முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் 3,76,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 27,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் ஜுலை 1-ந் தேதி முதல் ஜுலை மாதம் 25-ந் தேதி வரை 17 இடங்களில் நடத்தப்பட்டது.

    மாநில அளவிலான இறுதிப் போட்டிகளில் தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த 27,000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். 

    மூன்றாம் இடம்பிடித்த கோவை அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கிய முதலமைச்சர்.
    மூன்றாம் இடம்பிடித்த கோவை அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கிய முதலமைச்சர்.

    இதில் சென்னை மாவட்டம், 61 தங்கம், 33 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் முதல் இடத்தையும், செங்கல்பட்டு மாவட்டம், 18 தங்கம், 19 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்கள் வென்று இரண்டாம் இடத்தையும், கோயம்புத்தூர் மாவட்டம் 15 தங்கம், 13 வெள்ளி மற்றும் 24 வெண்கலப் பதக்கங்கள் வென்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "முதலமைச்சர் கோப்பை – 2023"ல் முதல் மூன்று இடங்களை பெற்ற சென்னை, செங்கல்பட்டு. கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இப்பரிசுக் கோப்பைகளை முதலிடத்தை பெற்ற சென்னை மாவட்ட அணியின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா, இரண்டாமிடத்தை பெற்ற செங்கல்பட்டு மாவட்ட அணியின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல்நாத், மூன்றாமிடத்தை பெற்ற கோயம்புத்தூர் மாவட்ட அணியின் சார்பாக கோயம்புத்தூர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் கே. செல்வம், மற்றும் விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகள், மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், பயிற்சியாளர்கள் பெற்று கொண்டார்கள்.


    அதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஜூன் 12 முதல் 28 வரை நடைபெற்ற 27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில், முதலிடம் பெற்று தங்கப் கோப்பையை வென்று சாதனை படைத்த தமிழ்நாடு அணியை சார்ந்த டி.தேவி. என்.சௌமியா, பி. தனலட்சுமி, எஸ்.கௌசல்யா. என்.லாவண்யா. எம்.பவித்ரா. பி.துர்கா. எஸ்.சண்முகப்பிரியா, எம்.சுபாஷிணி, எம். பரமேஸ்வரி, எஸ். பிரியதர்ஷினி, எம்.மாளவிகா, எம்.நந்தினி, ஏ. கார்த்திகா, கே. இந்துமதி, ஆர். வினோதினி, எஸ். ஐஸ்வர்யா, ஆர். சந்தியா, பி.சந்தியா, எஸ். சண்முகப்பிரியா, ஆர். யுவராணி, என். அம்சவள்ளி ஆகிய 22 வீராங்கனைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் 55 இலட்சம் ரூபாயும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TN Champions Foundation) சார்பில் 5 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 60 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை உயரிய ஊக்கத்தொகையாக முதலமைச்சர் வழங்கினார்.

    விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 26.6.2021 முதல் 12.07.2023 வரை சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 1684 விளையாட்டு வீரர்களுக்கு 49 கோடியே 15 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநாகராட்சி மேயர் ஆர். பிரியா, பாராளுளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மு. மகேஷ் குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் வரும் ஜூலை 22 மற்றும் 23ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
    • சப்ஜுனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். சப்ஜுனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான ரோல் பால் விளையாட்டு போட்டி பர்கூர் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வேளாங்கண்ணிபள்ளி தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். இதில் மாநில மேற்பார்வையாளர் அசோக்குமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சக்தி குமார் ஆகியோர் மேற்பார்வையில் மூன்று பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மினி, சப் -ஜூனியர், ஜூனியர் ஆகிய மூன்று பிரிவுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கி பாராட்டப்பட்டன.

    மேலும் இதில் மினி பிரிவில் வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் வரும் ஜூலை 22 மற்றும் 23ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    மேலும் சப்ஜுனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    • கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரியில் மாநில விளையாட்டு போட்டி நடந்தது.
    • இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பேரை–யூர் நம்மாழ்வார் வேளாண் மை தொழில்நுட்பக் கல் லூரியில் வேளாண்மை கல்லூரிக–ளுக்கு இடையே–யான மாநில அளவிலான விளை–யாட்டுப் போட்டி நடை–பெற்றது.

    இதில் சென்னை, கோவை உட்பட மாநில முழுவதிலும் இருந்து 14 வேளாண்மை கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கடந்த 14, 15 ஆம் தேதிகளில் கிரிக்கெட் போட்டிகளும், பூப்பந்து கூடைப்பந்து, மேஜைப்பந்து, கேரம், எரி–பந்து உள்ளிட்ட போட்டி–கள் நடைபெற்றன.

    நேற்று நடைபெற்ற போட்டிகளை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைதியை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்கள் பறக்க–விடப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு நம் மாழ்வார் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி–யின் தாளாளர் அகமது யாசின் தலைமை தாங்கி–னார். கமுதி வட்டாட்சியர் சேதுராமன், முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் இளவரசு, தி.மு.க. மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் பெருநாழி போஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் தனிக்கொடி, முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் போகர் துரைசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன–தாக கல்லூரி முதல் வர் ஜெயக்குமார் வர–வேற் றார். துணை முதல்வர் திருவேணி நன்றி கூறினார்.

    • பங்கேற்க 650 பேர் சென்னை பயணம்
    • கலெக்டர் வழியனுப்பி வைத்தார்

    ராணிப்பேட்டை:

    மாணவிகள், பொதுமக்கள் ஜூன்.30- மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 12,943 பேர் கலந்து 2,079 பேர் வெற்றி பெற்றனர். இதில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ- சென்னையில் இன்று ராணிப்பேட்டைமாவட்டத் தில் கடந்த 15.2.2023 முதல் கொண்டனர். அவர்களில் 3.3.2023 வரை முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகள் நடை பெற்றது. இப்போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 650 பேர் வெள்ளிகிழமை முதல் 14-ந் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளார்கள்.

    அவர்களை ராணிப் பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வாழ்த்தி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து பஸ் மூலம் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற் றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வெற்றி பெற்ற 2.79 ஆயிரம் பேருக்கு பரிசு, சான்றிதழ்
    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 2 ஆயிரத்து 79 வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத்.தேவி பென்ஸ் பாண்டியன், முகமது அமீன், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×