search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் கிராமிய விளையாட்டு போட்டி
    X

    ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் கிராமிய விளையாட்டு போட்டி

    • 9 மற்றும் 10-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டி நடக்கிறது
    • இறுதி கட்ட போட்டித் தேர்வு 23-ந் தேதி நடைபெறுகிறது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா ஈஷா புத்துணர்வு கோப்பை முதல் கட்ட போட்டிகள் நேற்று நடைபெற்றது.

    இதில் மாவட்ட முழுவதும் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு முதல் கட்ட கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்களுக்கான கைப்பந்து போட்டி அணியினர் போட்டியில் பங்கேற்றனர்.

    இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.

    மேலும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு இறுதி கட்ட போட்டித் தேர்வு கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் ஆதியோகி முன்பு சத்குருவும் விருந்தினர்கள் முன்னிலையில் செப்டம்பர் 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    Next Story
    ×