என் மலர்
உள்ளூர் செய்திகள்

சரக அளவிலான குழு விளையாட்டு போட்டி
- ஆக்கி ஆகிய விளையாட்டுப் போட்டிகளில், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது.
- 35 பள்ளிகளில் இருந்து 350 மாணவர்களும், 300 மாணவிகளும் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த மகராஜகடை அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று சரக அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மேரிரோசலின் தொடங்கி வைத்தார். இதில், கால்பந்து, கைப்பந்து, டென்னிஸ், கேரம் மற்றும் ஆக்கி ஆகிய விளையாட்டுப் போட்டிகளில், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது.
அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி என மொத்தம் 35 பள்ளிகளில் இருந்து 350 மாணவர்களும், 300 மாணவிகளும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
Next Story






