search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் வேளாங்கண்ணி பள்ளியில் ரோல்பால் விளையாட்டு போட்டி
    X

    பர்கூர் வேளாங்கண்ணி பள்ளியில் ரோல்பால் விளையாட்டு போட்டி

    • வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் வரும் ஜூலை 22 மற்றும் 23ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
    • சப்ஜுனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். சப்ஜுனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான ரோல் பால் விளையாட்டு போட்டி பர்கூர் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வேளாங்கண்ணிபள்ளி தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். இதில் மாநில மேற்பார்வையாளர் அசோக்குமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சக்தி குமார் ஆகியோர் மேற்பார்வையில் மூன்று பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மினி, சப் -ஜூனியர், ஜூனியர் ஆகிய மூன்று பிரிவுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கி பாராட்டப்பட்டன.

    மேலும் இதில் மினி பிரிவில் வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் வரும் ஜூலை 22 மற்றும் 23ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    மேலும் சப்ஜுனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    Next Story
    ×