search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்ப பதிவு"

    • அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன.
    • 1 லட்சத்து 61 ஆயிரத்து 977 பேர் விண்ணப்ப பதிவு கட்டணம் செலுத்தி உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

    உயர்கல்வியை தொடர விரும்பும் ஏழை, எளிய மாணவிகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக விண்ணப் பித்து வருகின்றனர்.

    இதுவரை விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை கடந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 லட்சத்து 7 ஆயிரத்து 532 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 1 லட்சத்து 61 ஆயிரத்து 977 பேர் விண்ணப்ப பதிவு கட்டணம் செலுத்தி உள்ளனர்.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க 2 நாட்கள் இருப்பதால் இன்றும் நாளையும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

    பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு அடுத்த மாதம் 6-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல் அரசு கலை அறிவியல் கல்லூரி களுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

    2 வார காலம் போதுமானதல்ல. மேலும் 10 நாட்கள் வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் விண்ணப்பிக்கப்படுகிறது. அதனால் விண்ணப்பிப்ப தற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    • ஜூலை 10-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
    • கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பி.இ. மற்றும் பி.டெக். என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பபதிவு இன்று தொடங்கியது.

    மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்தனர். விண்ணப்பங்களை நிரப்பி, அசல் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 6-ந்தேதி கடைசி நாள் ஆகும். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12-ந்தேதி ஆகும்.

    அன்றே ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது. மாணவ-மாணவிகள் ஜூன் 13-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை சேவை மையம் வாயிலாக இணையதளம் மூலம் சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    இதையடுத்து ஜூலை 10-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சேவை மையம் மூலம் மாணவ-மாணவிகள் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    அதன்பிறகு என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. முதலில் அரசு பள்ளிகளில் படித்த சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.

    அதன் பிறகு பொது பிரிவில் சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.

    அதனை தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுக்கல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது. அதன் பிறகு துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    பின்னர் எஸ்.சி.ஏ. காலியிடம் எஸ்.சி. வகுப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

    • மாநிலத்தில், 109 கலை அறிவியல் கல்லூரிகளில், 24 ஆயிரத்து 341 இடங்கள் முதுநிலை பிரிவில் உள்ளன.
    • கோவை அரசு கலைக்கல்லூரியில் எம்.சி.ஏ., பிரிவு தவிர்த்து, 20 முதுநிலை பிரிவுகளில், 557 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

    கோவை,

    தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளுக்கு, முதலாண்டு மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்களை, இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என, கல்லூரி கல்வி இயக்குனர் கீதா தெரிவித்தார்.

    மாநிலத்தில், 109 கலை அறிவியல் கல்லூரிகளில், 24 ஆயிரத்து 341 இடங்கள் முதுநிலை பிரிவில் உள்ளன. மாணவர்கள் விண்ணப்பங்களை www.tngasa.in/ www.tngase.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவை அரசு கலைக்கல்லூரியில் எம்.சி.ஏ., பிரிவு தவிர்த்து, 20 முதுநிலை பிரிவுகளில், 557 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இக்கல்லூரியில் உதவி மையங்கள், 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை, காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குநர் கீதா கூறுகையில், உதவி மையங்கள் செயல்படும் கல்லூரி விபரங்களை, மாணவர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம் என்றார்.

    • வருகிற 5-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது
    • தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000-ம் வழங்கும் திட்டத்துக்கான முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த 24-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதற்கட்ட பதிவு முகாமில் விண்ணப்பம் பதிவு செய்யாதவர்கள் வருகிற 3, 4-ந்தேதிகளில் தங்கள் நியாய விலைக்கடை முகாம்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

    2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம், வருகிற 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. 2-ம் கட்ட முகாமில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்ய முடியாமல் போனவர்கள், வருகிற 15-ந்தேதி, 16-ந்தேதிகளில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். இரு கட்ட முகாம்கள் அரசு விடுமுறை நாட்களிலும் நடைபெறும்.

    அதன்படி முதற்கட்ட முகாமிற்கான நாட்களில் இன்று (29-ந்தேதி), நாளை (30-ந்தேதி) ஆகிய நாட்களில் அகஸ்தீஸ்வரம், தோவாளை ஆகிய வட்டங்களில் அனைத்து நியாய விலை கடைகள் மற்றும் கல்குளம் வட்டத்தில் 126 நியாய விலை கடைகள் இயங்கும்.

    இதேபோல் 2-ம் கட்ட முகாம் நடைபெறும் நாட்களில் வருகிற 5-ந்தேதி (சனி), 6-ந்தேதி (ஞாயிறு), 12-ந்தேதி (சனி), 13-ந்தேதி (ஞாயிறு), 15-ந்தேதி (சுதந்திர தினம்), 16-ந்தேதி (உள்ளூர் விடுமுறை) திருவட்டார், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் வட்டங்களில் அனைத்து நியாய விலைக்கடைகள் மற்றும் கல்குளம் வட்டத்தில் 49 நியாய விலை கடைகள் செயல்படும். முகாம் நடைபெறும் நாட்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வர வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஊட்டி சி.எஸ்.ஐ. எம்.எம் மேல்நிலைப்பள்ளி, ஒய்.எம்.சி.ஏ. அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு ஒத்திகை நிகழ்ச்சியினையும், ஸ்டோன்ஹவுஸ், அண்ணாகாலனி ஆகிய பகுதியில் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு -வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியினையும், மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர், முகாம் அலுவலர்களிடம் இணையதள வசதி உள்ளதா என்பதை முன்கூட்டியே சரி பார்த்து கொள்ள வேண்டும் எனவும், முகாம்களில் பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் எனவும், அனைவரின் விண்ணப்பங்களும் சரியான முறையில் பதிவு செய்யப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் ஸ்டோன்ஹவுஸ், அண்ணாகாலனி பகுதியில் ரேஷன்கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்குவதை பார்வையிட்டு, பொதுமக்களிடம் விண்ணப்பபதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வருமாறு கலெக்டர் தெரிவித்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 204 சிறப்பு முகாம்களும், இரண்டாம் கட்டமாக 200 சிறப்பு முகாம்களும் என மொத்தம் 404 சிறப்பு முகாம்கள் நடை பெற உள்ளது. முதற்கட்ட முகாமானது வருகிற 24-ந் தேதி முதல் 04-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாமானது 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விண்ணப்பங்கள் பதிவு முகாம்களான மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, வாழைத்தோட்டம் சமுதாய கூடம் ஆகிய இடங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ஊட்டி சி.எஸ்.ஐ.சி.எம்.எம் மேல்நிலைப்பள்ளி, ஒய்எம்சிஏ, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதனை பார்வையிட்டு, பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி வட்டாட்சியர் சரவணக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    ×