search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு ஒத்திகை நிகழ்ச்சி
    X

    ஊட்டியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு ஒத்திகை நிகழ்ச்சி

    • பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வர வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஊட்டி சி.எஸ்.ஐ. எம்.எம் மேல்நிலைப்பள்ளி, ஒய்.எம்.சி.ஏ. அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு ஒத்திகை நிகழ்ச்சியினையும், ஸ்டோன்ஹவுஸ், அண்ணாகாலனி ஆகிய பகுதியில் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு -வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியினையும், மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர், முகாம் அலுவலர்களிடம் இணையதள வசதி உள்ளதா என்பதை முன்கூட்டியே சரி பார்த்து கொள்ள வேண்டும் எனவும், முகாம்களில் பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் எனவும், அனைவரின் விண்ணப்பங்களும் சரியான முறையில் பதிவு செய்யப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் ஸ்டோன்ஹவுஸ், அண்ணாகாலனி பகுதியில் ரேஷன்கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்குவதை பார்வையிட்டு, பொதுமக்களிடம் விண்ணப்பபதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வருமாறு கலெக்டர் தெரிவித்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 204 சிறப்பு முகாம்களும், இரண்டாம் கட்டமாக 200 சிறப்பு முகாம்களும் என மொத்தம் 404 சிறப்பு முகாம்கள் நடை பெற உள்ளது. முதற்கட்ட முகாமானது வருகிற 24-ந் தேதி முதல் 04-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாமானது 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விண்ணப்பங்கள் பதிவு முகாம்களான மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, வாழைத்தோட்டம் சமுதாய கூடம் ஆகிய இடங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ஊட்டி சி.எஸ்.ஐ.சி.எம்.எம் மேல்நிலைப்பள்ளி, ஒய்எம்சிஏ, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதனை பார்வையிட்டு, பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி வட்டாட்சியர் சரவணக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×