search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் ரசிகர்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள்
    • தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும்

    சென்னை அடையாறில் முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன் அவரின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய வேல்முருகன், "சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியாது, ஆனால் அந்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். 50 லட்சம் பேர் அக்கட்சியில் இணைந்துள்ளதாக ஊடகத்தில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்

    தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும். நான் பேசி சென்று விட்ட பிறகு விஜய் ரசிகர்கள் ஒருவேளை என்னை கல்லால் அடிக்க கூட வாய்ப்பு உண்டு என்று கூறியுள்ளார்.

    அண்மையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சிகள் உறுப்பினர் ஆவதற்கு செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த செயலி மூலம் உறுப்பினர்கள் சேரலாம் என்று விஜய் அறிவித்த நிலையில் அந்த கட்சியில் 50 லட்சம் பேர் சேர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி TVK என சுருக்கமாக அழைக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகமும் TVK என அழைக்கப்படுகிறது. இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே எனது கட்சியை TVK என அழைக்கும் நிலையில் விஜய் கட்சிக்கு எப்படி TVK என அழைக்கலாம் என தேர்தல் ஆணையத்தில் அவர் முறையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தலைவரின் தமிழக வெற்றி கழகம் வருக வருக மிஷன் 2026 என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது.
    • கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றி மக்களை நேரில் சந்தித்து தெரிவிக்குமாறு விஜய் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது கட்சி பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

    கட்சியின் பெயரை அறிவித்ததை தொடர்ந்து தற்போது கட்சி கொடியை தயார் செய்யும் பணியில் நடிகர் விஜய் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

    இதற்கிடையே விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து கட்சியாக மாற்றப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பல்வேறு இடங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் அட்டகாசமான சுவரொட்டிகளையும் ஒட்டி வருகின்றனர்.

    மாநகர பகுதிகளில் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜகோபால் தலைமையில் திரளான இளைஞரணி நிர்வாகிகள் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் வசனங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் பாளை தியாகராஜ நகர் பகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூட வருகை தரும் தலைவர் தளபதியின் தமிழக வெற்றி கழகம் வருக வருக என போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

    இதேபோல் அரசனுக்கே இந்த அரியாசனம். தலைவரின் தமிழக வெற்றி கழகம் வருக வருக மிஷன் 2026 என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல் பாளை தலைமை இளைஞர் அணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் மாற்றம் உன்னிடம் இருந்து தொடங்கட்டும். நாளைய முதல்-அமைச்சரே என்றும், நாளைய தமிழகமே என்றும் பல்வேறு வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 

    இவ்வாறாக நெல்லை மாநகர இளைஞரணி சார்பில் பரவலாக அதிரடி வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றி மக்களை நேரில் சந்தித்து தெரிவிக்குமாறு விஜய் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதன்படி விஜய் ரசிகர்களும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், இளைஞர்கள், இளம்பெண்களை தங்கள் கட்சியில் இணைந்து பணியாற்றுவது குறித்து தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

    • . திருப்பூர் மாவட்டத்தில் லியோ திரைப்படம் மொத்தம் 56 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களில் இன்று காலை முதலே ரசிகர்கள் குவிந்தனர்.
    • முதல் காட்சியையொட்டி மேள தாளம் முழங்க ஆடி பாடி மகிழ்ந்தனர்

    திருப்பூர்:

    நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் லியோ திரைப்படம் மொத்தம் 56 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களில் இன்று காலை முதலே ரசிகர்கள் குவிந்தனர். காலை 9மணிக்கு படம் திரையிடப்பட்டது. மதியம் 12-30மணிக்கு படம் முடிந்து வெளியே வந்தனர். திருப்பூரில் உள்ள பிரபல தியேட்டரில் லியோ திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

    லியோ திரைப்படம் வேற லெவலாக உள்ளது. டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பட்டய கிளப்பியுள்ளார். இதற்காக அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஆரம்பம் முதல் கடைசி வரை படம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக லியோ இருக்கும். தொடர்ந்து விடுமுறை என்பதால் லியோ வசூலில் சாதனை படைப்பது உறுதி. இப்படத்தில் அரசியல் எதுவும் கிடையாது. தொடர்ந்து விடுமுறை என்பதால் மீண்டும் இந்த திரைப்படத்தை பார்ப்போம். அனிருத் இசை மிகவும் அருமை. வித்தியாசமாக இசையமைத்து மெய்சிலிர்க்க வைத்துள்ளார். நா ெரடி, அண்ணன் வரவா, பேடாஸ் உள்ளிட்ட பாடல்கள் புல்லரிப்பை ஏற்படுத்துகிறது. ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக அமைந்தது. பொதுமக்களுக்கு இது மிகவும் பிடிக்கும். லியோ திரைப்படம் சாதனை படைப்பது உறுதி என்றனர்.

    முன்னதாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் லியோ திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும் தியேட்டர்கள் முன்பு விஜய் பட கட்அவுட்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. முதல் காட்சியையொட்டி மேள தாளம் முழங்க ஆடி பாடி மகிழ்ந்தனர். இதனால் லியோ திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களும் களை கட்டி காணப்பட்டன. மேலும் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீசார் சரி செய்தனர்.

    • ஆக்‌ஷன் காட்சிகளில் அனைத்து தரப்பினரையும் நடிகர் விஜய் தன்வசப்படுத்தி விட்டார்.
    • லியோ படம் பார்த்த மதுரை ரசிகர்கள் நெகிழ்ச்சி பேட்டியளித்துள்ளனர்.

    மதுரை

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்த லியோ திரைப்படத்தின் முதல் காட்சியை காண ரசி கர்களிடம் இருந்த ஆர்வத் திற்கேற்ப படமும் சிறப்பாக வந்துள்ளதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் கள்.

    மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அள வுக்கு 41 தியேட்டர்களில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. அதிகாலை முதலே முதல் காட்சியான 9 மணிக்கு படம் திரையி டப்பட்டதும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு, மகிழ்ச்சி வெள்ளத்திற்கு அளவே இல்லை என்று கூறலாம். தியேட்டருக்கு வெளியே விஜய்யின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் திரையரங்கிற்கு உள்ளேயும் விஜயின் அறி முக காட்சியை பார்த்து மெய்சிலிர்த்தனர்.

    படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் நம்மிடம் கூறியதாவது:-

    சதீஷ் (விஜய் மக்கள் இயக்க மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர்): தளபதி விஜயை இதுவரை காதல் சப்ஜெக்ட் படங்களிலேயே அதிகம் பார்த்து வந்துள்ளோம். அதிலும் அவர் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்துள் ளார். காலம் மாற, மாற ரசிகர்கள், பொதுமக்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ற படங்களை கொடுத்து வரும் தளபதி விஜய் இந்த லியோ படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக மக்களையும் ஈர்த்துவிட்டார்.

    அதாவது இந்த சமுதாயத்தில் புரையோடிப்போய் இருக்கும், சமூகத்தை சீரழிக்கும் போதைப்ெபாருள் ஒழிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த லியோ திரைப்படம் அதனை ஒழிக்கும் விதத்தையும் தெள்ளத்தெளிவாக காட்டியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள போதைப்பொருள் குறித்த நெட் ஒர்க் குறித்து முழுமையாக காண்பித்து அனைத்து காட்சிகளிலும் விஜய் மிரட்டியுள்ளார்.

    ஆக்ஷன், காமெடி, பாடல், சென்டிமெண்ட் என்று அனைத்திலும் விஜய் ஜொலிக்கிறார். மாஸ் என்றால் தளபதி, தளபதி என்றால் மாஸ் என்பதை மீண்டும் ஒருமுறை விஜய் நிரூபித்துள்ளார். படத்தின் இறுதிகாட்சியில் மீண்டும் நீர வரவேண்டும் என்பது போல் முடிந்துள்ளது. எனவே லியோ படத்தின் 2-ம் பாகத்தை விரைவில் நாம் எதிர்பார்க்கலாம் என்றார்.

    சூர்யகுமார், விஜய் (திருப்பரங்குன்றம்): நடிகர் விஜய் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். தனது அசுரத்தனமான நடிப்பால் அனைத்து தரப்பினரையும் தன்வசப்படுத்தி இருக்கிறார். லியோ படம் வெளியான இன்றுதான் எங்களுக்கு தீபாவளி. படத்தில் அவரது கெட்அப், நடிப்பு, ஆக்ஷன், காமெடி என எதையும் ஒதுக்கிவிட முடியாது. அத்தனையும் சிறப்பாக இருக்கிறது. சமூகத்தை சீர்திருத்த அவர் எடுத்துள்ள முயற்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அழகாக இயக்கியுள்ளார். சிறியவர்கள், பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் என எல்லோரும் ரசித்து பார்க்கும் அளவிற்கு படம் வந்துள்ளது.

    பாலாஜி (ஆரப்பாளையம்): தளபதியின் 67-வது படமான லியோ அருமையாக வந்துள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிட படம் சூப்பர். மற்ற மாநிலங்களில் எல்லாம் படம் முன்கூட்டியே திரையிடப்பட்டாலும் படத்தை பார்த்ததும் அந்த ஏக்கம் மறந்து போனது. லோகேஷ் கனகராஜ் அருமையாக படம் எடுத்திருக்கிறார்.

    தமிழகத்தில் சிறப்பு காட்சி காலை 7 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. நீதிமன்றத்தை நாடினோம். ஆனால் அந்த கவலையெல்லாம் திரையில் தளபதியை பார்த்ததும் மறந்து போனது. தளபதியை பார்த்தோம், ரசித்தோம், என்ஜாய் பண்ணினோம். வரும் 6 நாட்கள் வசூல் பிரமாதமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லியோ படம் வெற்றி பெற இறைவனை வேண்டுவதாக பேட்டியளித்தார். அவருக்கு என் நெஞ்சார்த்த நன்றிகள்.

    கணேஷ்குமார் (திடீர்நகர்): தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிக பிரம்மாண்டமாக உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு ரசிகர்களாகிய நாங்கள் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தளபதி விஜய் இரண்டு வேடங்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க இரண்டும் ஒன்றுதான் என்று கதையில் பிரமிக்க வைக்கிறது.

    இறுதியாக கமலஹாசன் தளபதி விஜய்க்கு தொலைபேசி மூலம் நாம் இருவரும் இணைந்து இந்நாட்டுக்கு நல்லது செய்வோம் என்று அடுத்த படத்துக்கு தயாராகிறார்கள். இது அடுத்த படத்திற்கு மட்டுமல்லாது அரசியலிலும் இணைந்து செயல்படுவார்களா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அரசியலுக்கு ஆயத்தமாகும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை தனது மக்கள் இயக்கத்தின் மூலம் விஜய் செய்து வருகிறார்.
    • தமிழகத்திற்கு நல்லகாலம் பிறந்துவிட்டது என்று பொதுமக்கள் பேட்டி போன்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

    மதுரை:

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பல்வேறு சமூக சேவை தொடர்பான நடவடிக்கையிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். சமீபத்தில் இலவச சட்ட ஆலோசனை மையத்தையும் தொடங்கியுள்ள அவரது நடவடிக்கைகளை அரசியலுக்கான வருகையாகவே அவரது ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

    தற்போது விஜய் நடித்துள்ள "லியோ" படம் வருகிற 19-ந்தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான வேலைகள் மும்முரமாக ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு புறம் விஜய் அரசியலுக்கு தயாராகி வருவதாக, அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

    அரசியலுக்கு ஆயத்தமாகும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை தனது மக்கள் இயக்கத்தின் மூலம் விஜய் செய்து வருகிறார். தலைவர்களின் சிலைக்கு மாவட்ட நிர்வாகிகள் மூலம் மாலை அணிவிப்பது, தொகுதி வாரியாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு உட்பட பல நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கண் தானம் மற்றும் ரத்த தான முகாம்களை நடத்துவது, உலக பட்டினி தினத்தில் தொகுதி வாரியாக மக்களுக்கு உணவு வழங்குவது என தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் அரசியலுக்கு அடித்தளம் போட்டு வருகிறார் விஜய்.

    இந்த பரபரப்பை அதிகப்படுத்தும் விதமாக மதுரையில் ஒட்டப்படும் போஸ்டர்களும் கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. எப்போதுமே அரசியல் களமாக இருந்தாலும், ஆன்மீக விழாவாக இருந்தாலும் சரி மதுரையில் ஒட்டப்படும் போஸ்டர்களில் இடம் பெறும் வாசகங்கள் பெருமளவில் பேசப்படுவது வழக்கமான நிகழ்வாகி விட்டது.

    அந்த வகையில்தான் தினத்தந்தி செய்தித்தாள் வடிவில் மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் விஜய் தலைமையில் டி.டி.வி.தினகரன், அன்புமணி ராமதாஸ், ஓ.பி.எஸ்., அண்ணாமலை, ஜான்பாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செய்தி புகைப்படமாக அச்சிடப்பட்டுள்ளது.

    அதே போல் பிரதமர் மோடி தேர்தலில் விஜய் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவிப்பதாகவும், பதவி ஏற்பு விழாவில் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்து போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று பொதுமக்கள் பேட்டி போன்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ் டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • விம்பிள்டன் அமைப்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
    • ஜோகோவிச்சை வீழ்த்தி, ஸ்பெயினை சேர்ந்த 20 வயது வீரரான கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    விம்பிள்டன் தொடரின் ஆடவர் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, ஸ்பெயினை சேர்ந்த 20 வயது வீரரான கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    இந்நிலையில் விம்பிள்டன் அமைப்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸை வாழ்த்தி விம்பிள்டன் அமைப்பு ஒரு போஸ்டரை வடிவமைத்துள்ளது. அதில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்று, கருப்பு நிற சட்டை அணிந்த ஒரு குழுவிற்கு மத்தியில் அல்காரஸ் நின்று அமைதி என்று கூறுவது போல வாய் மீது வைரல் வைத்துள்ளார்.


    அந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்ட விம்பிள்டன் அமைப்பு, விம்பிள்டனின் புதிய சாம்பியன் எனவும், அல்காரஸை மாஸ்டர் என குறிப்பிட்டுள்ளது. அந்த போஸ்டரை, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெற்றிடத்தை நிரப்ப வரும் தமிழகத்தின் செல்ல பிள்ளை எங்கள் முதல்வரே.
    • தமிழக மக்களின் கனவை நினைவாக்க வரும் நாளைய தமிழக முதல்வரே'' என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன.

    தேனி:

    நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க வந்து நேற்றோடு 30 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியும், சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.

    தேனியில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நேற்று பல்வேறு இடங்களில் பரபரப்பான அரசியல் வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் அரசியல் கட்சிகளை விஜய் தலைமையிலான கூட்டணிக்கு அழைப்பது உள்பட பல்வேறு அரசியல் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

    ''தமிழக மக்களின் பேராதரவோடு 30 ஆண்டுகள் சினிமாவில் வெற்றி. அடுத்த 30 ஆண்டு அரசியல் வெற்றி. முதல்வராக தமிழக மக்களின் பேராதரவோடு எதிர்பார்ப்பு''. ''அரசியல் கட்சிகளுக்கு... கூட்டணி அழைப்புக்கு தளபதியாரின் தலைமையில் தயாராகுங்கள்''. ''வெற்றிடத்தை நிரப்ப வரும் தமிழகத்தின் செல்ல பிள்ளை எங்கள் முதல்வரே''.

    ''இன்று சினிமாவில் தளபதி. நாளைய தமிழகத்தின் முதல்வரே''. ''இன்றைய இளைஞர்களின் கனவு முதல்வரே. தமிழக மக்களின் கனவை நினைவாக்க வரும் நாளைய தமிழக முதல்வரே'' என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன.

    இந்த போஸ்டர்கள், தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நடிகர் விஜய் பற்றிய மதுரை ஆதீனம் பேச்சுக்கு மதுரை மாவட்ட ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது.
    • மதுரை ஆதீனம் அரசியல் ரீதியாக பேசி வரும் சில கருத்துகள், ஏற்கனவே பேசும்பொருளாகி வருகின்றன.

    மதுரை:

    மதுரை பழங்காநத்தத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடந்தது. இதில் மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மதுரை ஆதீனம், "கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால், என்னை சங்கி என்று சொல்கிறார்கள். அது பற்றி எனக்கு கவலை இல்லை.

    இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடிகர் விஜய் வசனம் பேசியுள்ளார். எனவே அவர் நடித்த படத்தை யாரும் பார்க்கக்கூடாது. சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும்போது, தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்கக்கூடாது?" என்று பேசினார்.

    நடிகர் விஜய் பற்றிய மதுரை ஆதீனம் பேச்சுக்கு மதுரை மாவட்ட ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மதுரை முழுவதும் மதுரை ஆதீனத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

    மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், "மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடும் நீங்கள், தளபதி விஜயை பத்தி தப்பா பேசலாமா? இது தப்பு இல்லையா? வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்துங்கள். எங்களுக்கு ஜாதி, மதம் எதுவும் இல்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை" என்ற வாசகங்கள் இடம்பெற்று உள்ளது.

    மதுரை ஆதீனம் அரசியல் ரீதியாக பேசி வரும் சில கருத்துகள், ஏற்கனவே பேசும்பொருளாகி வருகின்றன. இந்த நிலையில் மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள கண்டன சுவரொட்டிகள் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×