search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம் மோதல்"

    • மதுரை அருகே வாகனம் மோதி முதியவர் பலியானார்.
    • இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் சமயநல்லூரில் திண்டுக்கல்- திருமங்கலம் தேசிய 4 வழிச்சாலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார்.

    வெள்ளை சட்டையும், காவி வேட்டியும் அணிந்திருந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.

    இது சம்பந்தமாக சமயநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முத்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலியானார்.
    • பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 70). இவர் லாலாபேட்டையில் இருந்து லா.கூடலூரில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, லா.கூடலூர் காலனியை சேர்ந்த குமார் மகன் ஆகாஷ் (19) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் பெரியதம்பி மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த பெரியதம்பி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடலூர் பீச்ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் பலியானார்.
    • கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் பீச்ரோட்டில் வள்ளலார் கோவில் அருகே நடந்து சென்ற 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர்நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். இதில் படுகாயம் அடைந்த அந்த நபர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார்.
    • டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் நால்ரோடு அருகே நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார். அக்கம் -பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீசார் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பூபாதர் தாஸ் மகன் சக்தி தாஸ்(28) என்பதும் வெள்ளகோயில் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது. கோடங்கிபாளையத்தில் வசிக்கும் தனது சித்தப்பா ஜெகபந்து தாஸை பார்க்க வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது சித்தப்பா ஜெகபந்து தாஸ் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • ஆம்னி பஸ் பலத்த சேதம் அடைந்தது.
    • விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனத்தையும் டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    காங்கேயம் :

    நெல்லையில் இருந்து இன்று ஆம்னி பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. குண்டடம் நால்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் நேருக்கு நேர் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் ஆம்னி பஸ் பலத்த சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணித்த திருப்பூர் முதலிப்பாளையத்தை சேர்ந்த சிவசுப்ரமணி (வயது42) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டடம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும் டிரைவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×