search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
    X

    சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி

    • சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலியானார்.
    • பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 70). இவர் லாலாபேட்டையில் இருந்து லா.கூடலூரில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, லா.கூடலூர் காலனியை சேர்ந்த குமார் மகன் ஆகாஷ் (19) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் பெரியதம்பி மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த பெரியதம்பி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×