search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குபதிவு"

    • தருமபுரி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மான் கறி வாங்கி வந்து சமைத்ததாக தெரிவித்தனர்.
    • 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வேப்பில அள்ளி கிராமத்தில் மான் கறி சமைத்து சாப்பிடுவதாக பாலக்கோடு வனச்சரகர் நடராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் வேப்பில அள்ளி கிராமத்துக்கு சென்றனர்.

    அப்போது அங்கு 10 பேர் மான் கறி சமைத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தருமபுரி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மான் கறி வாங்கி வந்து சமைத்ததாக தெரிவித்தனர்.

    இதையடுதது அவர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தலைமறைவான மான் கறி விற்ற நபரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • இந்த நிலம் தங்களுக்கு சொந்தமான நிலம் எனக்கூறி அளவீடு செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • போலீசார், தேவரச ம்பட்டியை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தேவரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபா (வயது42) மற்றும் முனியம்மா (58).

    இந்த இரு குடும்பத்தை சேர்ந்தவர்க ளுக்குமிடையே நிலப்பிரச்சினை முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று ஒரு தரப்பினரது நிலத்தை, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் இந்த நிலம் தங்களுக்கு சொந்தமான நிலம் எனக்கூறி அளவீடு செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் இருதரப்பை சேர்ந்த குடும்பத்தினரிடையே வாய் தகராறு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை போலீசார், தேவரச ம்பட்டியை சேர்ந்த முனியம்மாள், முனியப்பன், மணிகண்டன் மற்றும் பிரபா, வேல்விழி, கிருஷ்ணம்மாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கார் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து காரை தீ வைத்து எரித்தவர்களை தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் வடகுடி வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று தனக்கு சொந்தமான காரை பட்டினச்சேரி புயல் பாதுகாப்பு மையம் அருகே நிறுத்தி வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

    அப்போது நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் காருக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர். கார் பற்றி எரிந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் காரின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமானது.

    இது குறித்து செல்வமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கார் எரிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரை தீ வைத்து எரித்தவர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுவாதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்தார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் கரு கலைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் அருகே எ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் சுந்தர்(31). அதேபகுதியை சேர்ந்த சுவாதி என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுந்தரை 2-வது திருமணம் செய்து கொண்டார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுவாதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்தார்.

    மேலும் மதுகுடித்துவந்து சுவாதி மற்றும் அவரது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். சம்பவத்தன்றும் இதேபோல் அவர் சுவாதியை தாக்கியதால் படுகாயமடைந்தார். இந்நிலையில் திடீரென வயிற்றுவலி அதிகமாகவே சுவாதியை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கரு கலைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் சுவாதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

    • தமிழகத்தில் உள்ளூர் கோவில் பண்டிகையின் போது பல்வேறு நிகழ்ச்சிக ளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
    • இந்த நிகழ்ச்சிகள் நடத்து வதற்கு அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் அனுமதி பெறவேண்டும். ஒரு சில இடங்களில் அனு மதி பெறாமல், உள்ளூர் செல்வாக்கை பயன்படுத்தி நடத்தப்பட்டு வருகிறது.

    பரமத்திவேலூர்:

    தமிழகத்தில் உள்ளூர் கோவில் பண்டிகையின் போது பல்வேறு நிகழ்ச்சிக ளுக்கு ஏற்பாடு செய்யப்படும். கரகாட்டம், நையாண்டி மேளம், ஒயிலாட்டம் மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

    இந்த நிகழ்ச்சிகள் நடத்து வதற்கு அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் அனுமதி பெறவேண்டும். ஒரு சில இடங்களில் அனு மதி பெறாமல், உள்ளூர் செல்வாக்கை பயன்படுத்தி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், ஒருவந்துார் ஊராட்சி செல்லிபாளை யத்தில், மதுரை வீரன் திருவிழா, நேற்று தொடங்கி 2 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து விழா தொடங்குவதற்கு முதல் நாள், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் அனுமதி பெறவில்லை என தெரிகிறது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் மோகனுார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்திய கோவில் தர்கர்த்தா மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் இது போன்று அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • பண்ருட்டி அடுத்த பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி . இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மேல்மாம்பட்டு அருள்செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து பாலாஜியை தாக்கியுள்ளனர்.
    • இதனால் காயம் அடைந்த பாலாஜி பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவர் கடந்த 6-ந்தேதி பண்ருட்டியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேல்மாம்பட்டு அருள்செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து பாலாஜியை தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த பாலாஜி பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விஜயகுமாருக்கும், எட்டிகுழி பகுதி யை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
    • அந்த பெண்ணை விஜயகுமார் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அடுத்துள்ள எட்டிகுழி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். கட்டிட மேஸ்திரியான இவரும், ஆயாமரத்துப்பட்டியை சேர்ந்த காமாட்சி என்கிற ரேவதி என்பரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் இருவரை வீட்டை விட்டு வெளியேறி பழனியில் திருமணம் செய்து திருப்பூரில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் விஜயகு மாருக்கும், எட்டிகுழி பகுதி யை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணை விஜயகுமார் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.

    இந்த சம்பவம் பெண்ணின் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் விஜயகுமார், கோவி ந்தராஜ், கயலநாதன் மற்றும் எதிர்தரப்பினர் மாயமான இளம் பெண்ணின் உறவினர்களும் மோதி கொண்டு தாக்கியுள்ளனர்.

    இது தொடர்பாக பெரும்பாலை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கட்டிட மேஸ்திரி கோவிந்தராஜ், விஜயகுமார், கயலநாதன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர்.

    • விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
    • இந்த விபத்தில் விஜயகுமார் கால் மற்றும் விலா எலும்புகள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது.34). இவரது நண்பரான தர்மராஜ் உடன் சேர்ந்து இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் மங்கலம்பேட்டையில் இருந்து கர்ணத்தம் பகுதிக்கு சென்றனர். அப்போது கும்பகோணத்திலிருந்து மங்கலம்பேட்டை பைபாஸ் வழியாக கார் ஒன்று வந்தது. இந்த காரை சுரேஷ் (34) என்பவர் ஓட்டி வந்தார்.  இந்நிலையில் கர்ணத்தம் பைபாஸ் சாலை அருகே கார் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது

    . இந்த விபத்தில் விஜயகுமார் கால் மற்றும் விலா எலும்புகள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து விஜயகுமாரை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்க்ள், விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் விஜயகுமாரின் அண்ணன் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சுரேஷ் மீது மங்கலம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • சங்கராபுரம் அருகே பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
    • வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எந்த வித பாரபட்சமும் இன்றி அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.  இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 34 பேர் மீது மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தனபால் கட்சி நிர்வாகிகளுடன் அம்பேத்கார் நகர் பகுதியை பார்வையிடுவதற்காக வந்தார்

    . அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தற்போது அம்பேத்கார் நகரை பார்வையிட செல்ல வேண்டாம் என்று கூறினர்  அப்போது பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களு டைய கோரிக்கைகளை கேட்ப தற்காக மட்டுமே செல்கி றோம், எங்களை தடுக்க வேண்டாம் என்று கூறி அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்  இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு காவலர்கள் அனுமதி அளித்ததை தொடா்ந்து அவர்கள் அம்பேத்கர் நகர் பகுதிக்குள் சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் தனபால் கூறும்போது, வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எந்த வித பாரபட்சமும் இன்றி அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். அப்போது காட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி பொதுமக்களை மிரட்டல்.
    • 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாரிக்குளம் சுடுகாட்டில் சிலர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி அந்த வழியாக சென்ற பொது மக்களை மிரட்டி அச்சுறுத்தி கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிவாள் காட்டி மிரட்டிய தஞ்சை விளார் ரோடு காயிதே மில்லத் நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 30), மோகன் (42), அண்ணா நகரை சேர்ந்த கதிரவன் (30), மூலை அனுமார் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினகுமார் (40), ரவிச்சந்திரன் ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • தனது மோட்டார் சைக்கிளில் பூண்டு வியாபாரம் செய்வதற்காக திருக்கோவிலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • சுயநினைவு இழந்ததால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விவரம் தெரியவில்லை .

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 52). பூண்டு வியாபாரி. இவர் நேற்று மாலை ஏழுமலை தனது மோட்டார் சைக்கிள் பூண்டு வியாபாரம் செய்வதற்காக திருக்கோவிலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். பெரியசெவலை அருகே செல்லும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஏழுமலை மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஏழுமலை பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

    எதிரே மோதிய 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் அடிபட்டு சுயநினைவு இழந்ததால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விவரம் தெரியவில்லை .அவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • சதீஷ்குமாரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறச்சி:

    ரிஷிவந்தியம் அருகே வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது27). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித்குமார் உள்பட 4 பேர் சேர்ந்து சதீஷ்குமாரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரஞ்சித்குமார், கருணாநிதி, விஜயகுமார், குமார் ஆகிய 4 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×