என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே விடுதலை சிறுத்தைகள்  கட்சியினர்- போலீசார் வாக்குவாதம்
    X

    சங்கராபுரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்- போலீசார் வாக்குவாதம்

    • சங்கராபுரம் அருகே பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
    • வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எந்த வித பாரபட்சமும் இன்றி அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 34 பேர் மீது மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தனபால் கட்சி நிர்வாகிகளுடன் அம்பேத்கார் நகர் பகுதியை பார்வையிடுவதற்காக வந்தார்

    . அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தற்போது அம்பேத்கார் நகரை பார்வையிட செல்ல வேண்டாம் என்று கூறினர் அப்போது பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களு டைய கோரிக்கைகளை கேட்ப தற்காக மட்டுமே செல்கி றோம், எங்களை தடுக்க வேண்டாம் என்று கூறி அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர் இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு காவலர்கள் அனுமதி அளித்ததை தொடா்ந்து அவர்கள் அம்பேத்கர் நகர் பகுதிக்குள் சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் தனபால் கூறும்போது, வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எந்த வித பாரபட்சமும் இன்றி அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். அப்போது காட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×