search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்கு"

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு

     வேலாயுதம் பாளையம்,  

    கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா ,பான்பராக் ,ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு விரைந்து சென்று சோதனை செய்த போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது .

    இதன் பேரில் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த பாலத்துறை பகுதியை சேர்ந்த மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிராமிய பாடகரை தாக்கிய 4 பேர் மீது வன்கொடுமை வழக்கு

    கறம்பக்குடி,  

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்ைச பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் செல்லமுத்து (வயது 35). கடந்த 12-ந் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் பூபதி (20) உட்பட 4 பேர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியது குறித்து தட்டி கேட்ட அண்ணாமலை என்பவரை பூபதி தரப்பினர் தாக்கியுள்ளனர்.

    இதை தடுக்கச் சென்ற செல்லமுத்து மற்றும் சிலரை பூபதி தரப்பினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பூபதி, கண்ணு மகன் சுப்ரமணியன், ஏழுமலை மகன் வெங்கடேசன், வேலு மகன் கோவிந்தராஜ் ஆகிய 4 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூபதியை கைது செய்தனர்.

    • 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கல்லறைத்தோட்ட காம்பவுண்டு சுவரை இடித்ததுடன் ‘கேட்’டையும் எடுத்து சென்றார்கள்.

    மணவாளக்குறிச்சி ;

    மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலம் கோட்டவிளையை சேர்ந்தவர் ஜோஸ். டிம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்ப கல்லறை தோட்டம் செறுவன்தட்டுவிளையில் உள்ளது.

    இதன் பின் பக்கம் அப்பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் அம்மன்கோயில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு பாதை ஏற்படுத்த சசிகுமாரின் உறவினர் ராஜகுசேலன் மற்றும் கிருஷ்ணகுமார் என்ற காந்தி, மேலும் 2 பேர் கடப்பாறை, வெட்டுக்கத்தியுடன் சென்றனர். அப்போது அவர்கள் ஜோஸின் குடும்ப கல்லறைத்தோட்ட காம்பவுண்டு சுவரை இடித்ததுடன் 'கேட்'டையும் எடுத்து சென்றார்கள்.

    இதனை ஜோசின் உறவினர் ஒருவர் பார்த்து தட்டிக்கேட்டார். அப்போது அவர்கள் ஜோஸின் உறவினரை தகாத வார்த்தையால் திட்டி சென்றனர். இது குறித்து ஜோஸ் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜகுசேலன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலாயுதம்பாளையத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த விவசாயி மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
    • காலை 8 மணிக்கு மேல் பட்டாசுகளை வைத்து நீண்ட நேரமாக வெடித்துக் கொண்டிருந்ததால் போலீசார் நடவடிக்கை

    கரூர், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நொய்யல்-வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கந்தம்பாளையம் பகுதியில் உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த நேரத்திற்கு பிறகும் காலை 8 மணிக்கு மேல் பட்டாசுகளை வைத்து நீண்ட நேரமாக வெடித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த போலீசார் நீண்ட நேரமாக அரசு அனுமதியின்றி பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (59) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார்.
    • விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் நகர தெற்கு தி.மு.க செயலாளராக இருந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சுனோதா. இவர் கம்பம் நகர்மன்ற தலைவியாக உள்ளார். செல்வக்குமார் நியோமேக்ஸ் தனியார் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்து கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் அதிகளவில் முதலீடுகளை பெற்றார்.

    மேலும் தனியார் பல்பொருள் அங்காடி, பேஷன்ஸ் கடை ஆகிய நிறுவனங்களையும் கம்பத்தில் நடத்தி வந்தார். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பெற்ற வைப்புத்தொகையை திருப்பித்தராமல் இழுத்தடிப்பு செய்வதாக தேனி, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.

    இதனிடையே செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார். இவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நவம்பர் 8-ந்தேதி விசாரித்து வாக்குமூலம் பெற்று அதனடிப்படையில் கம்பத்தில் உள்ள அவரது வீட்டில் துணை கண்காணிப்பாளர் மணிஷா தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரூ.5.50 லட்சம் ரொக்கம், 46.200 கிராம் தங்கம், 139.800 கிராம் வெள்ளி ஆகியவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5.80 லட்சமாகும். விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 6 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 30 -ந் தேதி கல் குவாரி உரிமம் கோரி ஏலம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அரசு அலுவலர்கள், காவல்துறையினரை தாக்கியும், அரசு அலுவலகங்களில் உள்ள தளவாடப் பொருள்களை அடித்து, உடைத்து சேதப்படுத்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போலீசாரிடம் உரிய அனுமதி பெறாமல், போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், கட்சியின் அமைப்புச் செயலாளர் அருணாசலம், எம்ஜிஆர் அணி மாவட்டச் செயலாளர் எம்.என். ராஜாராம், முன்னாள் அமைச்சர் மோகன், நகரச் செயலாளர் ராஜபூபதி உள்பட 16 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு
    • சிறுமி தற்போது, 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

    கரூர்,நவ. 9-

    க.பரமத்தி அருகே, சிறுமியை திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கிய வாலிபர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கரூர் மாவட்டம், க.பரமத்தி காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த அழகிரி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 23). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த சிறுமி தற்போது, 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

    இதுகுறித்து, க.பரமத்தி பஞ்., யூனியன் பெண்கள் நல அலுவலர் பத்மாதேவி கொடுத்த புகார்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார், மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதே பகுதி யைச் சேர்ந்த பாவாடை என்ப வர் குடிசை வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.
    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிர மிப்பு அகற்றுவது தொடர் பாக குறித்து மனு கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மந்தி பாளையம் பகுதியில் புதி தாக அமைக்கப்பட்ட மனைப்பி ரிவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்ற னர். இவர்க ளுக்கு குடிநீர் தொட்டி அங்க ன்வாடி மையம் அமைப்ப தற்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தினை அதே பகுதி யைச் சேர்ந்த பாவாடை என்ப வர் குடிசை வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இதுகுறித்து அதே பகுதி யைச் சேர்ந்த திருஞான மூர்த்தி மனைவி செந்தாமரை (வயது34) தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிர மிப்பு அகற்றுவது தொடர்பாக குறித்து மனு கொடுத்தார்.

    இதன் காரண மாக ஆத்திரமடைந்த பாவா டை மற்றும் அவரது ஆதர வாளர்க ளுடன் செந்தா மரை வீட்டிற்கு சென்று செந்தா மரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த செந்தா மரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டு பின் மேல்சிகிச் சைக்கு கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செந்தாமரை புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பாவாடை, நாகராஜ், துரைராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

    • நாய் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்த சிறுவன் மீது திடீரென ஆக்ரோஷம் அடைந்து பாய்ந்து கடித்தது.
    • சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து காரமடை போலீசில் புகார் அளித்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் அபி கார்த்திக் (வயது 6). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர்களது வீட்டின் அருகில் கார்த்திக் லெனின், இவரது மனைவி திவ்யா ஆகியோர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டில் ஜெர்மன் நாட்டு இன ராட்வீலர் வகையை சேர்ந்த நாயை வளர்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று சிறுவன் அபி கார்த்திக், தனது வீட்டு முன்பு சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்தான். அப்போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இன நாயை கட்டிப்போடாமல் அவிழ்த்து விட்டு இருந்தனர்.

    நாய் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்த சிறுவன் மீது திடீரென ஆக்ரோஷம் அடைந்து பாய்ந்து கடித்தது. அதிர்ச்சியடைந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டான். அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று நாயிடம் இருந்து சிறுவனை மீட்டனர். நாய் கடித்ததில் சிறுவனின் கழுத்து, மார்பு, கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.

    உடனடியாக சிறுவனின் பெற்றோர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    பின்னர் சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து காரமடை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நாயின் உரிமையாளர்களான கார்த்திக் லெனின், அவரது மனைவி திவ்யா ஆகியோர் மீது கவனக்குறைவாக செயல்படுதல், தனி நபருக்கு காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஜவுளி கடையில் வாடிக்கையாளரிடம் திருடப்பட்டது.
    • தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் பொதுமக்கள் புத்தாடைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருடுவது அதிகரித்துள்ளது.

    மதுரை அனுப்பானடி டீச்சர் காலனி தியாகராஜர் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி தேன்மொழி (33). இவர் சம்பவத்தன்று புத்தாடை வாங்க தெற்குமாசி வீதியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு சென்றிருந்தார். அங்கு கூட்டம் அலைமோதியது. அதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் தேன்மொழி வைத்திருந்த பர்சை திருடி சென்றனர். அதில் ரூ.1000 ரொக்கம், 1 ஜோடி வெள்ளி கொலுசு, வெள்ளி நகைகள் இருந்தன.

    இதுகுறித்து அவர் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பெண்கள் தேன்மொ ழியிடம் திருடியது தெரிய வந்தது.

    தொடர் விசாரணையில் அவர்கள் ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரத்தை சேர்ந்த சுமதி (35), கோயம்புத்தூர் மதுக்கரையை சேர்ந்த லெட்சுமி (30) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பாஸ்கருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதுண்டு.
    • அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் பாஸ்கர்(50) பெயிண்டர். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதுண்டு. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாஸ்கர வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் பாஸ்கரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×