search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு
    X

    வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு

    • சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு
    • சிறுமி தற்போது, 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

    கரூர்,நவ. 9-

    க.பரமத்தி அருகே, சிறுமியை திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கிய வாலிபர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கரூர் மாவட்டம், க.பரமத்தி காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த அழகிரி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 23). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த சிறுமி தற்போது, 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

    இதுகுறித்து, க.பரமத்தி பஞ்., யூனியன் பெண்கள் நல அலுவலர் பத்மாதேவி கொடுத்த புகார்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார், மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    Next Story
    ×