என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு அருகே கல்லறை தோட்ட காம்பவுண்டு சுவர் இடிப்பு - 4 பேர் மீது வழக்கு
    X

    மண்டைக்காடு அருகே கல்லறை தோட்ட காம்பவுண்டு சுவர் இடிப்பு - 4 பேர் மீது வழக்கு

    • 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கல்லறைத்தோட்ட காம்பவுண்டு சுவரை இடித்ததுடன் ‘கேட்’டையும் எடுத்து சென்றார்கள்.

    மணவாளக்குறிச்சி ;

    மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலம் கோட்டவிளையை சேர்ந்தவர் ஜோஸ். டிம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்ப கல்லறை தோட்டம் செறுவன்தட்டுவிளையில் உள்ளது.

    இதன் பின் பக்கம் அப்பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் அம்மன்கோயில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு பாதை ஏற்படுத்த சசிகுமாரின் உறவினர் ராஜகுசேலன் மற்றும் கிருஷ்ணகுமார் என்ற காந்தி, மேலும் 2 பேர் கடப்பாறை, வெட்டுக்கத்தியுடன் சென்றனர். அப்போது அவர்கள் ஜோஸின் குடும்ப கல்லறைத்தோட்ட காம்பவுண்டு சுவரை இடித்ததுடன் 'கேட்'டையும் எடுத்து சென்றார்கள்.

    இதனை ஜோசின் உறவினர் ஒருவர் பார்த்து தட்டிக்கேட்டார். அப்போது அவர்கள் ஜோஸின் உறவினரை தகாத வார்த்தையால் திட்டி சென்றனர். இது குறித்து ஜோஸ் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜகுசேலன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×