search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.வினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 16 பேர் மீது வழக்கு
    X

    தி.மு.க.வினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 16 பேர் மீது வழக்கு

    • தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 6 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 30 -ந் தேதி கல் குவாரி உரிமம் கோரி ஏலம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அரசு அலுவலர்கள், காவல்துறையினரை தாக்கியும், அரசு அலுவலகங்களில் உள்ள தளவாடப் பொருள்களை அடித்து, உடைத்து சேதப்படுத்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போலீசாரிடம் உரிய அனுமதி பெறாமல், போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், கட்சியின் அமைப்புச் செயலாளர் அருணாசலம், எம்ஜிஆர் அணி மாவட்டச் செயலாளர் எம்.என். ராஜாராம், முன்னாள் அமைச்சர் மோகன், நகரச் செயலாளர் ராஜபூபதி உள்பட 16 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    Next Story
    ×