search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம் இந்தியா தொடர்"

    • வங்காளதேசம் முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் குவித்தது.
    • இந்திய தரப்பில் அக்‌ஷர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    thaசட்டோகிராம்:

    இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடை பெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 404 ரன் குவித்தது. வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 254 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதனால் வங்காள தேசத்துக்கு 513 ரன் இலக்காக இருந்தது. தொடக்க வீரர் சுப்மன் கில்லும் (110 ரன்), புஜாரா வும் (102 ரன்) சதம் அடித்தனர். 513 ரன் எடுத்தால் வெற்றி கடினமான இலக்குடன் ஆடிய வங்காள தேசம் நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்து இருந்தது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடந்தது.

    வங்காள தேசம் அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் நஜிமுல் உசேன், ஜாகிர் உசேன் நிதானமாக ஆடினார்கள். இருவரும் அரை சதம் அடித்து இந்திய பந்து வீச்சை திணறடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் குவித்தது.

    இந்த ஜோடியை உமேஷ் யாதவ் பிரித்தார். அடுத்து வந்த யாசீர் அலி 5 ரன்னிலும் தாஸ் 19 ரன்னிலும் ரஹிம் 23 ரன்னிலும் யாசர் 3 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 6 விக்கெட்டை இழந்து 272 ரன்கள் சேர்த்தது.

    இந்திய அணி தரப்பில் அக்‌ஷர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நாளை கடைசி நாள் இந்திய வெற்றி பெற 4 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

    • இருவரும் அரை சதம் அடித்து இந்திய பந்து வீச்சை திணறடித்தனர்.
    • நஜிமுல் உசேன் 63 ரன்னும், ஜாகிர் உசேன் 50 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    சட்டோகிராம்:

    இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடை பெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 404 ரன் குவித்தது. வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    254 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் வங்காள தேசத்துக்கு 513 ரன் இலக்காக இருந்தது. தொடக்க வீரர் சுப்மன் கில்லும் (110 ரன்), புஜாரா வும் (102 ரன்) சதம் அடித்தனர்.

    513 ரன் எடுத்தால் வெற்றி கடினமான இலக்குடன் ஆடிய வங்காள தேசம் நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்து இருந்தது.

    4-வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. வங்காள தேசம் அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் நஜிமுல் உசேன், ஜாகிர் உசேன் நிதானமாக ஆடினார்கள்.

    இருவரும் அரை சதம் அடித்து இந்திய பந்து வீச்சை திணறடித்தனர். 40 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது வங்காளதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 113 ரன் எடுத்து இருந்தது. நஜிமுல் உசேன் 63 ரன்னும், ஜாகிர் உசேன் 50 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    • அஸ்வின் 58 ரன்னிலும், குல்தீப் யாதவ் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • வங்காள தேசம் தரப்பில் மெகிடி, இஸ்மால் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    சட்டோகிராம்:

    இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று தொடங்கியது.

    முதலில் ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 90 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும் (அவுட் இல்லை), ரிஷப்பண்ட் 46 ரன்னும் எடுத்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்ரேயாஸ் அய்யருடன், அஸ்வின் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். சதம் அடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 'அவுட்' ஆனார்.

    மேலும் 4 ரன்களே அவர் சேர்த்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி அடங்கும். எபாதத் உசேன் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியாவின் 7-வது விக்கெட் 293 ரன்னில் விழுந்தது.

    8-வது விக்கெட்டான அஸ்வின்-குல்தீப் யாதவ் ஜோடி நிதானமாக ஆடியது. இந்திய அணி 102.2 ஓவரில் 300 ரன்னை தொட்டது.

    மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 348 ரன் எடுத்து இருந்தது.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அஸ்வின் அரைசதம் அடித்தார். 91 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். 87-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 13-வது அரைசதமாகும்.

    இருவரும் சிறப்பாக ஆடியதால் இந்தியா தொடர்ந்து ரன்களை குவித்தது. 131 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 384 ரன் குவித்து இருந்தது. அஸ்வின் 58 ரன்னிலும், குல்தீப் யாதவ் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த சிராஜ் 4 ரன்னில் வெளியேற இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    வங்காள தேசம் தரப்பில் மெகிடி, இஸ்மால் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • சுப்மன்கில் 20 ரன்னில் தய்ஜுல் இஸ்லாம் பந்தில் ஆட்டம் இழந்தார்.
    • ராகுல் 22 ரன்னில் காலத் அகமது பந்தில் அவுட் ஆனார்.

    சிட்டகாங்:

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இரு அணிகள் இடையே 2 டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

    இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சிட்டாகாங்கில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணி 3 சுழற்பந்து வீரர்களுடனும், இரண்டு வேகப்பந்து வீரர்களுடனும் களம் இறங்கியது. இரு அணியில் விளையாடும் 11 வீரர்கள் வருமாறு:-

    இந்தியா:-லோகேஷ் ராகுல் (கேப்டன்), சுப்மன்கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்

    சகீப் அல்-ஹசன் (கேப்டன்), நஜிமுல் உசேன், ஜாகீர் உசேன், யாசிர் அலி, முஷ்பிகுர் ரகீம், லிட்டன் தாஸ், நூருல் ஹசன், மெகிதி ஹசன் மிராஸ், தய்ஜுல் இஸ்லாம், காலெத் அகமது, எபாதத் உசேன்

    இந்திய அணி பொறுப்பு கேப்டன் லோகேஷ் ராகுல் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அவரும், சுப்மன்கில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் தொடக்கமே ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

    சுப்மன்கில் 20 ரன்னில் தய்ஜுல் இஸ்லாம் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 41 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ராகுலுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார்.

    ராகுல் 22 ரன்னில் காலத் அகமது பந்தில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 45 ஆக இருந்தது. அடுத்து வந்த விராட் கோலி(1 ரன்) வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

    • ஒருநாள் போட்டியின்போது உம்ரான் மாலிக் பந்தில் காயம் அடைந்தார்
    • எக்ஸ்-ரே எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை இடம் பிடிப்பது குறித்து முடிவு தெரியும்.

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 1-2 என இழந்தது. நாளை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

    இந்திய அணியில் ரோகித் சர்மா காயத்தால் விலகியுள்ளார். இதனால் கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புஜாரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவுக்குப் பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நாளை போட்டி தொடங்கும் நிலையில் வங்காளதேச அணி கேப்டன் சாகிப் அல் ஹசன் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டியில் உம்ரான் மாலிக் வீசிய பந்து, சாகிப் அல் ஹசன் விலா எழும்பில் தாக்கியது. உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது, அப்போது ஆபத்து ஏதும் இல்லை எனத் தெரியவந்தது.

    இன்று பயிற்சி மேற்கொண்டபோது, வலி இருப்பதாக உணர்ந்தார். இதனால் பயிற்சியில் இருந்து விலகி எக்ஸ்-ரே எடுப்பதற்கான மருத்துவமனை சென்றுள்ளார். இன்று மாலைதான் முடிவு தெரியும். அதன்பின் சாகிப் அல் ஹசன் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என வங்காளதேச அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    • சட்டோகிராம் மைதானத்தில் நாளை காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
    • ரோகித் சர்மா விலகியதால் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் பங்கேற்க மாட்டார் என்றும் 2வது டெஸ்ட்டில் அவர் இடம் பெறுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் கேப்டனாக கே.எல். ராகுலும், துணை கேப்டனாக புஜாராவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுப்மான் கில்லுடன் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அபிமன்யு ஈஸ்வரன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்த டெல்லி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அல்லது சௌராஷ்டிரா அணி வீரர் ஜெய்தேவ் உன்கட் அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உத்தரபிரதேச இடது கை சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமாரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னேற, வங்காளதேசத்துடனான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணித் தலைவர் கே.எல்.ராகுல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றை எட்டுவதற்கு நாங்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டிய நிலையில் இருக்கிறோம், இறுதி சுற்றை எட்ட என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். களத்தில் ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட பகுதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.
    • அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடித்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    மும்பை:

    இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை வங்காளதேசம் 2-1 என கைப்பற்றியுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 14ம் தேதி சட்டோகிராமில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

    அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடித்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    • ஒருநாள் போட்டியில் கிரிஸ் கெயில் சாதனையை முறியடித்தார் இஷான் கிஷன்.
    • அதிவேக 150 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    வங்காளதேசம் அணிக்கு எதிராக சிட்டாகாங்கில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷன் 210 ரன்கள் குவித்தார். இதில் 126 பந்துகளில் அவர் இரட்டை சதம் அடித்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாக பதிவானது.

    இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிஸ் கெயில் ஒரு நாள் போட்டியில் 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதை கிஷன் முறியடித்துள்ளார். மேலும் கடந்த 2011 ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 112 பந்துகளில் இந்திய வீரர் சேவாக் 150 ரன்கள் அடித்திருந்தார். 


    இதன் மூலம் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக 150 ரன்கள் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். தற்போது அதை முறிடித்துள்ள கிஷன், நேற்றைய போட்டியில் 103 பந்துகளை எதிர்கொண்டு 150 ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஷான் கிஷன் கூறியுள்ளதாவது:

    இந்திய அணியில் பெரிய வீரர்கள் வெவ்வேறு பேட்டிங் வரிசையில் விளையாடுகின்றனர். அதனால் இந்த நிலையில்தான் நான் பேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்று என்னால் சொல்ல முடியாது. உங்கள் திறமையை வெளிப்படுத்த நீங்கள் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே இடம் பெறுவீர்கள்,

    ஏனெனில் இது ஒரு வாய்ப்பு, நீங்கள் பெரிய ஸ்கோரைப் பெற வேண்டும், ஒரு பெரிய வீரர் இப்படித்தான் உருவாகிறார், அவர் தனக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். அடுத்த போட்டியில் விளையாடுவேனா இல்லையா என்பது குறித்து நான் யோசிப்பதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக விளையாடுவதே எனது வேலை. நான் அதிகம் பேசுவதில்லை, எனது பேட் தான் பேச வேண்டும் என நினைக்கிறேன். 


    நான் விராட் கோலி அல்லது ஹர்திக் பாண்ட்யாவின் அர்ப்பணிப்பைப் பார்த்து, அவர்கள் வழியில் என்னுடைய 100 சதவீத பங்களிப்பை கொடுக்க முயற்சிக்கிறேன். நாங்கள் எந்த லீக் ஆட்டத்திலும் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல, எங்கள் நாட்டிற்காக விளையாடுகிறோம்.

    கோலியுடன் இணைந்து பேட் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனால் அந்த நேரத்தில் அது என் மனதில் இல்லை. அவருடன் பேட்டிங் செய்ய நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்து இந்திய அணி சாதனை படைத்தது.
    • தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்தார்.

    சிட்டகாங்:

    இந்தியா, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்தார். அவர் 131 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 91 பந்துகளில் 113 ரன்களுக்கு வெளியேறினார்.

    இந்நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

    மேலும், அதிக முறை 400 ரன்கள் எடுத்த பட்டியலில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்துள்ள இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் 182 ரன்களில் ஆல் அவுட்டானது.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெற்றது. டாஸ்வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும். அவருக்கு பக்கபலமாக ஆடிய விராட் கோலி சதமடித்தார். 2-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.

    இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது, எபாட் ஹொசைன், ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 29 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் 43 ரன்னில் வெளியேறினார். யாசிர் அலி 25 ரன்னும்,

    மகமதுல்லா 20 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வங்காளதேச அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டும், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்காளதேச அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது..
    • இஷான் கிஷன் இரட்டைச் சதமடித்தார். விராட் கோலி சதமடித்தார்.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது.

    டாஸ்வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும்.

    இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

    அவருக்கு பக்கபலமாக விராட் கோலியும் விளையாடினார். கோலி சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.

    இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் அய்யர் 3 ரன்னும், கே.எல்.ராகுல் 8 ரன்னும், அக்சர் படேல் 20 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது.

    இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்க உள்ளது.

    • உள்நாட்டு கிரிக்கெட்டில் 353 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்
    • ரஞ்சி கோப்பையில் ஒரு சீசனில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்

    இந்திய அணியில் அறிமுகமாகி அதன்பின் காணாமல் போன வீரர்களில் ஏராளமானோர். அதில் ஒருவர் ஜெய்தேவ் உனத்கட்டும் ஒருவர். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக செஞ்சூரியனில் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர் ஜெய்தேவ் உனத்கட். அப்போது அவருக்கு 19 வயது. அதன் பிறகுடெஸ்ட் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    சவுராஷ்டிரா அணிக்காக விளையாடும் அவர், உள்நாட்டு தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் அணியில் நிரந்த இடம் அவருக்கு கிடைக்கவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து இவரை அணிகள் வாங்கின.

    இதுவரை ஒரு டெஸ்ட், ஏழு ஒருநாள், 10 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால், இதுவரை ரஞ்சி டிராபியில் 353 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

    2019-2020 ரஞ்சி தொடரில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தி சவுராஷ்டிரா அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தார்.

    வங்காளதேச அணிக்கெதிராக இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் முகமது சமி இடம் பிடித்திருந்தார். அவர் காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதனால் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2010-ம் ஆண்டு டெஸ்ட் அணியில் விளையாடி அதன்பின் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது 12 ஆண்டுகள் கழித்து அணியில் இடம் கிடைத்துள்ளது. ஒருவேளை ஆடும் லெவன் அணியில் இடம் கிடைத்தால் அறிமுக போட்டிக்குப்பின் 12 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்.

    ×