search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிப்ட்"

    • சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய கொள்ளையன் உருவம்
    • போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பள்ளி விளை ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 59 )டிரைவர். இவர் நேற்று வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு டிப் டாப் உடையில் வந்த வாலிபர் குமரேசனிடம் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டுள்ளார்.

    இதையடுத்து குமரேசன் அவரை வடசேரி பஸ் நிலையத்தில் விடுவதற்காக அழைத்து வந்தார். வெள்ளா ளர் தெரு பகுதியில் வந்த போது அந்த வாலிபர் தன்னை இங்கேயே இறக்கி விடுமாறு கூறினார். உடனே குமரேசன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது திடீரென குமரேசன் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துவிட்டு அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து குமரேசன் திருடன்... திருடன்....என கூச்சலிட்டார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து மறைந்து விட்டார். இது குறித்து குமரேசன் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் குமரேசன் மோட்டார் சைக்கிள் செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் முழு வீச்சில் பணிகள் நடந்து வருகின்றன.
    • மூத்த குடிமக்கள் பிளாட்பாரங்களுக்கு எளிதாக செல்ல வசதியாக லிப்ட் வசதி செய்யப்படுகிறது.

    சென்னை புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு அடிப்படையான வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் தங்கள் உடமைகளுடன் நடை மேம்பாலத்தை கடந்து செல்ல சிரமப்படுகிறார்கள்.

    அவர்கள் எளிதாக பிளாட்பாரங்களுக்கு செல்ல வசதியாக லிப்ட் வசதி செய்யப்படுகிறது. அரக்கோணம், வில்லிவாக்கம், பேசின்பாலம், வியாசர்பாடி, ஆவடி, கொரட்டூர், வண்ணாரப் பேட்டை, கொருக்குப் பேட்டை உள்ளிட்ட 20 ரெயில் நிலையங்களில் லிப்ட் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

    புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் முழு வீச்சில் இப்பணிகள் நடந்து வருகின்றன.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஏழுமலை கூறியதாவது:-

    புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. ரெயில் நிலையங்கள் தூய்மைப் பணி, குடிநீர், கழிப்பிடம் மற்றும் லிப்ட் வசதி போன்றவை படிப்படியாக மேம்படுத்தப் படுகின்றன. இந்த பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும். மூத்த குடிமக்கள் பிளாட்பாரங்களுக்கு எளிதாக செல்ல வசதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண் தனியாக நிற்பதை அறிந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு லிப்டுக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
    • 31 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பொது இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    அப்படி தன்னிடம் அத்துமீறிய வாலிபரை பெண் ஒருவர் தாக்கி நிலைகுலைய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    லிப்டில் பெண் ஒருவர் தனியாக பயணம் செய்கிறார். அதே லிப்டுக்குள் வாலிபர் ஒருவரும் நின்று கொண்டிருக்கிறார். பெண் தனியாக நிற்பதை அறிந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு லிப்டுக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார்.

    தனது அருகில் வாலிபர் வருவதால் அந்த பெண் சற்று தள்ளி நிற்கிறார். ஆனால் அந்த வாலிபரோ பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க மீண்டும் நெருங்கினார்.

    இதனால் அந்த பெண் திடீரென்று வாலிபரின் கன்னத்தில் பளார் என்று அறைவிட்டார். அத்துடன் நிற்காமல் அந்த நபரின் மர்ம உறுப்பில் எட்டி உதைத்தார். இதில் அந்த வாலிபர் அப்படியே நிலை குலைந்தார். இந்த சம்பவம் லிப்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது.

    31 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த வீடியோவை 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் தைரியத்தையும் பாராட்டி உள்ளனர்.

    • இரும்பு கம்பியுடன் மின்வயரும் அறுந்ததால் தரைதளம் வரை செல்லாமல் முதல் மாடியிலேயே ‘லிப்ட்’ நின்றுவிட்டது.
    • அருகில் இருந்தவர்கள் ‘லிப்ட்’டின் கதவை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3-வது தளத்தில் உள்ள 'லிப்ட்'டை நோயாளிகள், டாக்டர்கள், ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 4½ மணியளவில் 3-வது மாடியில் இருந்து ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் உள்ளிட்ட 12 பேர் 'லிப்ட்'டில் ஏறினர். அப்போது திடீரென 'லிப்ட்'டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி அறுந்து மளமளவென முதல் தளத்தில் இறங்கி நின்றது. மேலும் இரும்பு கம்பியுடன் மின்வயரும் அறுந்ததால் தரைதளம் வரை செல்லாமல் முதல் மாடியிலேயே 'லிப்ட்' நின்றுவிட்டது. இதனால் 'லிப்ட்'டில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அருகில் இருந்தவர்கள் 'லிப்ட்'டின் கதவை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதுபோன்ற சம்பவம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 4-வது முறையாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீயணைக்கும் படை வீரர்கள் மீட்டனர்
    • 4 நபர்கள் மட்டும் செல்லக்கூடிய அந்த லிப்டில் அதிகப்படியாக 9 நபர்கள் ஏறி மேல் மாடிக்கு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வடக்குத் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்த வட மாநில சுற்றுலா பயணிகள் 9 பேர் இன்று அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியைக் காண கன்னியாகுமரி கடற்கரைக்கு சென்றனர்.

    அவர்கள் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு காலை 6.30 மணிக்கு அவர்கள் தங்கி இருக்கும் லாட்ஜுக்கு திரும்பி வந்தனர். இந்த லாட்ஜில் 4 நபர்கள் மட்டும் செல்லக்கூடிய "லிப்ட்" அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அதிகப்படியாக 9 நபர்கள் அந்த லிப்டில் ஏறி மேல் மாடிக்கு சென்றனர்.அப்போது"லிப்ட்" பழுதாகி பாதிவழியில் நின்றது.

    இதனால் அவர்கள் 9 பேரும் அந்த லிப்டில் சுற்றி தவித்துக் கொண்டிருந்தனர். இது பற்றி தகவல் அறிந்த லாட்ஜ் ஊழியர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கியதாஸ் தலைமையில் தீயனைக்கும் படை வீரர்கள் அந்த லாட்ஜுக்கு விரைந்து வந்தனர்.

    தீயணைக்கும் படை வீரர்கள் மீட்பு கருவி மூலம் லிப்டில் சிக்கி இருந்த 9 வடமாநில சுற்றுலா பயணிகளை சுமார் 1 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

    கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் முடிவடைந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை புறப்பட்டு சென்றார்.

    இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விழா நிறைவடைந்ததும் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார். பயனாளிகள் உள்ளிட்டோர் விழா நடைபெற்ற இரண்டாவது மாடியில் இருந்து லிப்ட் மூலம் கீழே இறங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

    முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் இந்த லிப்டில் 6 பெண்கள் உள்பட 10 பேர் ஏறினர். இரண்டாவது மாடியில் இருந்து தரை தளத்திற்கு வந்த லிப்ட் வேகமாக நின்றது. இதையடுத்து கதவை திறக்க முற்பட்டபோது அதனை திறக்கமுடியவில்லை.

    லிப்டுக்குள் இருந்தவர்கள் பல்வேறு முயற்சிகளை செய்தபோதும் லிப்ட் பழுதாகி செயலிழந்து போய் இருந்தது. நிமிடங்கள் செல்லச் செல்ல உள்ளே சிக்கியிருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். தங்களை காப்பாற்றுமாறு கூச்சல் போட்டனர். உடனடியாக விழாவுக்கு வந்திருந்தவர்கள் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் திரண்டு வந்து லிப்டை திறக்க போராடினார்கள். ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.

    இதற்கிடையே லிப்டுக்குள் இருந்தவர்கள் தங்களுக்கு மூச்சுத்திணறுவதாக கூறினர். வெளியே நின்றிருந்தவர்கள் அவர்களிடம் ஆறுதல் வார்த்தைகளை கூறி ஆசுவாசப்படுத்தினர்.

    இதற்கிடையே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அதிரடி நடவடிக்கையாக லிப்ட் கதவை உடைத்து உள்ளே இருந்த 10 பேரையும் பத்திரமாக மீட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதில் சிக்கியிருந்தவர்கள் வெளியே வந்து நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    இதற்கிடையே லிப்டில் இருந்த மூதாட்டி ஒருவர் மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது. கலெக்டர் அலுவலகத்தில் தயார் நிலையில் 108 ஆம்புலன்சு மூலம் அந்த மூதாட்டி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறிது ஓய்வுக்கு பிறகு அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    • பன்னடுக்கு வாகன நிறுத்தகம் அமைக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
    • ரூ.89 லட்சம் மதிப்பில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட உள்ளது.

    கோவை:

    மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையிலும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட 22-வது வார்டு, 8-வது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை மிகவும் அதிகம் காணப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    விரிவுபடுத்தப்பட்ட கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தின் கீழ் சேரன் மாநகர், நேரு நகர், காளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு பல ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

    மேற்குறிப்பிட்ட இந்த பகுதிகளில் 10 அல்லது 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித் துள்ளனர்.

    தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வரும் நிலையில் அந்த தண்ணீர் வினியோகம் செய்யப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப் படாதது மக்கள் மத்தி யில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    குடிநீர் பிரச்சனை தொடர்பாக மக்கள் தினமும் புகார்களை தெரிவிப்பது வாடிக்கையான ஒன்றாக மாறி உள்ளது. பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடத்தும் முன் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:-கோவை மாநகராட்சி கிழக்கு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது உண்மைதான். சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 10,12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.நேரு நகர், காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் 7 நாட்களுக்கு ஒரு முறை சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளோம்.அதிகாரிகளும் தற்போது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறோம்.கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் முன்பு 52 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 36 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது.

    மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். விரைவில் வாரம் ஒரு முறை அனைத்து பகுதிகளுக்கும் சீரான சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×