search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருதமலை முருகன் கோவில்"

    • தைப்பூசம் நெருங்கி வருவதாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • வனத்துறையினர் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் மருதமலையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் முருக பெருமானின் 7-வது வீடு என பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தற்போது மார்கழி மாதம் என்பதாலும், தைப்பூசம் நெருங்கி வருவதாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர்.

    ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில், இங்கு வந்து முருகபெருமானை தரிசித்து விட்டு ஐயப்ப பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.

    இதனால் தற்போது அனைத்து நாட்களிலுமே மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அண்மைக்காலமாக மருதமலை முருகன் கோவில் பகுதி மற்றும், அடிவார பகுதிகளில் வனவிலங்குகள் நடமா ட்டம் காணப்படுகிறது.

    குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வந்தனர்.

    நேற்று இரவு 7 மணிக்கு பக்தர் ஒருவர் மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் தனது காரில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அடிவார பகுதியில் அருகே வந்த போது 3-வது வளைவில் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று நின்றிருந்தது.

    இது காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை சற்று தூரத்தில் நிறுத்தினார். மேலும் தனது செல்போனை எடுத்து, அதில் சிறுத்தையை புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்தார்.

    இருளாக இருந்த இடத்தில் வெளிச்சம் ஏற்பட்டதை பார்த்ததும் சிறுத்தை வேகவேமாக ஓடி வனத்திற்குள் சென்று மறைந்து கொண்டது.

    இதையடுத்து பக்தர் தனது காரில் அங்கிருந்து புறப்பட்டு கீழே வந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    மேலும் கோவில் பகுதிக்கு சென்று அங்கிருந்த பக்தர்களை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். கடந்த ஆண்டு கோவில் பகுதியில் தேர் நிறுத்தி வைத்திருக்கும் இடம் மற்றும் மலைப்படிக்கட்டில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இது அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    தற்போது மீண்டும் மருதமலை முருகன் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தைப்பூசம் நெருங்கி வருவதால் கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள். இந்த நேரத்தில் இங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது அவர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. வனத்து றையினர் கோவிலு க்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, மருதமலை மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் கவன த்துடன் மலைக்கோவிலுக்கு செல்ல வேண்டும். மலைப்பாதையில் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவன த்துடன் வாகனங்களை இயக்கி செல்ல வேண்டும். சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

    இதற்கிடையே மருதமலை முருகன் கோவில் மலைப்பாதையில் சிறுத்தை சுற்றி திரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • வருகிற 5-ந் தேதி முதல் ஒரு மாதம் வரை வாகனங்களுக்கு அனுமதிக்கப்படமாட்டது.
    • முருக பெருமானின் 7-வது படைவீடாக அழைக்கப்பட்டு வருகிறது.

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் முருக பெருமானின் 7-வது படைவீடாக அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்ைட மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    குறிப்பாக விஷேச நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், கல்பாதை அமைக்கும் பணி, பார்க்கிங் பகுதியில் ஆண், பெண் இருபாலருக்கும் கழிவறை வசதி, தானியங்கி கருவி லிப்ட் அமைக்கும் பணி, தார்சாலை அமைக்கும் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் மலைக்கோவில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

    பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி முதல் ஒரு மாதம் வரை மலைக்கோவிலுக்கு மலைப்பாதை வழியாக இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் 

    • மருதமலை முருகன் கோவிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
    • கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க வேள்வி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    வடவள்ளி:

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் எப்போதுமே மருதமலை முருகன் கோவிலில் கூட்டம் அதிக மாக காணப்படும். குறிப்பாக விஷேச நாட்களில் அதிகளவிலான கூட்டம் காணப்படும்.

    இந்நிலையில் மருதமலை முருகன் கோவிலில் மின்தூக்கி(லிப்ட்) அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.5.20 கோடியில் லிப்ட் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று மருதமலை முருகன் கோவிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் மற்றும் ரூ.3.51 கோடியில் மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் உள்ள தார்சாலையை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது.

    பூமிபூஜையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். கோவையில் நடந்த விழாவில், கலெக்டர் கிரந்திகுமார், இந்து சமயஅறநிலையத்துறை துணை ஆணையர் தர்ஷினி, துணை மேயர் வெற்றிச் செல்வன், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    அதை தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க வேள்வி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    இதில் தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, வடவள்ளி பகுதி செயலாளர் வ.ம.சண்முக சுந்தரம், வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் , கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 29-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • பிப்ரவரி 4-ந்தேதி திருக்கல்யாணம், தேரோட்டம் நடக்கிறது.

    கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திரு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 29-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அன்று காலை 6.45 மணி முதல் 7.30 மணிக்குள் கோவில் முன்புறமுள்ள கொடி மரத்தில் கிருத்திகை சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்படுகிறது. இதை தொடர்ந்து கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருகிறார்.

    மாலை 4 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை தீபாரா தனை, மாலை 5 மணிக்கு அனந்த சயனத்தில் சுவாமி திருவீதி உலா, மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜை ஆகியவை நடை பெறுகிறது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

    பிப்ரவரி 3-ந் தேதி மாலை தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். அன்று இரவு 7.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தருகிறார்.

    தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாண விழா பிப்ரவரி 4-ந் தேதி காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 11 மணியளவில் வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.

    பகல் 12 மணி அளவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது. சுப்பிரமணியசாமி, வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்கிறார். தேரை பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். தம்பதி சமேதராக சுவாமி கோவிலை சுற்றி வீதி உலா வரு கிறார். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    5-ந் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12மணிக்கு ஆடுமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். இரவு 7.30 மணிக்கு தெப்பத் திருவிழா, 6-ந் தேதி 12 மணிக்கு மகா தரிசனம், சுவாமி திருவீதி உலா, மாலை 4.30 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 7- ந் தேதி வசந்த உற்சவம், மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி திருவீதி உலா வருகிறார். இத்துடன் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • சுப்பிரமணிய சுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 30-ந்தேதி சண்முகார்ச்சனை நடைபெறுகிறது.

    கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் உள்ளது. இது 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது.

    பின்னர் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வேடர் அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி காட்சிஅளித்தார்.

    இதை அடுத்து காலை 7 மணி அளவில் விநாயகர் பூஜை, புண்யாகம், விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல் முளைப்பாளிகை இடுதல் ஆகியவை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து கருவறையை அடுத்துள்ள மகா மண்டபத்தில் சுப்பிமணியசுவாமி வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளினார். இதை அடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து அர்த்தமண்டபத்தில் யாகசாலை பூஜை நடந்தது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி காப்பு கட்டிக் கொண்டனர். கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வருகிற 29-ந் தேதி வரை தினமும் காலையிலும் மாலையிலும் அர்த்தமண்டபத்தில் யாகசாலை பூஜை, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் நடைபெறுகிறது.

    30-ந் தேதி காலை 6மணி முதல் 7.30 மணி வரை சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் 12 மணி வரை உற்சவர் சண்முகார்ச்சனை நடக்கிறது.மதியம் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதல் மற்றும் சூரசம்காரத்திற்கு எழுந்தருளுதல், சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்கார விழா நடைபெறுகிறது. 31-ந் தேதிகாலை 9.30.மணி முதல் 10.30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்பபல்லக்கில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் துணை கமிஷனர் ஹர்ஷினி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இதுபோல் கோவை கோவில்பாளையத்தில் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்த காலகாலேஸ்வரர் கோவிலில்கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா நேற்று காலை 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    • செவ்வாய், வெள்ளி மற்றும் விழா நாட்களில் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
    • விடுமுறை நாட்கள் என்பதால் அதிகபடியான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய படி வழியாகவும் பேருந்து மூலமாகவும் மலைக் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    வடவள்ளி:

    கோவை மருதமலையில் பக்தர்களால் 7-ம் படை வீடு என அழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு தினந்தோறும் கோவை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் விழா நாட்களில் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    இன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோ பூஜை நடந்தது.

    தொடர்ந்து முருகனுக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி தங்கமயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    மதியம் உச்சி கால பூஜையை முன்னிட்டு அபிஷேகம் செய்து சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது‌. மேலும் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தங்கமயில் வாகனத்தில் திருவீதி உலா நடைெபற்றது.

    விடுமுறை நாட்கள் என்பதால் அதிகபடியான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய படி வழியாகவும் பேருந்து மூலமாகவும் மலைக் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த வடவள்ளி காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    • பன்னடுக்கு வாகன நிறுத்தகம் அமைக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
    • ஒரே நேரத்தில் 50 பேர் முடிகாணிக்கை அளிக்கு அளிக்கலாம்.

    கோவை:

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலும் ஒன்று.

    கோவை மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்க ளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் வர மலைப்பாதை மற்றும் படிக்கட்டுப்பாதை ஆகிய 2 வழித்தடங்கள் உள்ளன.

    பொதுபோக்குவரத்து வாகனங்களில் வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து கோவில் பஸ் மூலம் மேலே அழைத்து செல்லப்படுகின்றனர். சொந்த வாகனத்தில் வரும் பக்தர்கள் நேரடியாக கோவிலுக்கு செல்கின்றனர். தவிர படிக்கட்டுகள் வழியாக நடந்தும் பக்தர்கள் செல்கின்றனர்.

    மேலே சென்ற பிறகு 100க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் வயதான பக்தர்கள் சிரமப்படுகின்றனர். பக்தர்கள் கூறிய தாவது:-2.50 கிேலா மீட்டர் தூரம் கொண்ட மலைப்பாதை கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் சீரமைக்கப்பட்டது. தற்போது ஆங்காங்கே சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மலைப்பாதையை சீரமைக்க வேண்டும். கூடுதல் வாகனங்களை நிறுத்தும் வகையில் பல அடுக்கு வாகன நிறுத்தகம் ஏற்படுத்த வேண்டும்.முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தை விரிவுபடுத்த வேண்டும். வயதானவர்களுக்கு உதவும் வகையில் லிப்ட் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது தொடர்பாக மருதமலை முருகன் கோவிலின் இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஹர்சினி கூறியதாவது:-மருதமலையில் வயதான பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ரூ.6 கோடியே 45 லட்சம் மதிப்பில் லிப்ட் அமைக்க கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.ராஜகோபுரம் படிக்கட்டை ஒட்டி, வாகன நிறுத்த கம் அருகே 2 லிப்ட் அமை க்கப்படும். அங்கிருந்து 12 மீட்டர் உயரத்துக்கு லிப்ட் மேலே சென்ற பின்னர், அங்கிருந்து 40 மீட்டர் தூரம் பக்கவாட்டு பகுதியில் பக்தர்கள் நடந்து வந்து, மற்றொரு லிப்ட்டில் ஏறி 8 மீட்டர் தூரம் மேலே சென்று கோவிலுக்கு செல்லும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு லிப்டிலும் ஒரே சமயத்தில் தலா 20 பேர் செல்லாம். அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தகுந்த நிறுவனம் தேர்வு செய்யப்படடு பணிகள் ஒப்படைக்கப்படும்.கோவிலின் அடிவாரத்தில் 93 சென்ட் பரப்பளவில் ரூ.89 லட்சம் மதிப்பில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 50 பேர் முடிகாணிக்கை அளிக்கலாம். இதற்கான பணி ஆணை ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டும் பணி தொடங்கப்படும்.

    மருதமலை கோவிலின் மலைப்பாதை ரூ.3.56 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது. கோவிலில் இட நெருக்கடி இன்றி வாகனங்களை நிறுத்த ஏதுவாக மலையின் மீது ஒரே சமயத்தில் 200 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் பன்னடுக்கு வாகன நிறுத்தகம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. மலையில் பக்தர்களின் வசதிக்காக கழிப்பிடமும் கட்டப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

    • பன்னடுக்கு வாகன நிறுத்தகம் அமைக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
    • ரூ.89 லட்சம் மதிப்பில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட உள்ளது.

    கோவை:

    மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையிலும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட 22-வது வார்டு, 8-வது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை மிகவும் அதிகம் காணப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    விரிவுபடுத்தப்பட்ட கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தின் கீழ் சேரன் மாநகர், நேரு நகர், காளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு பல ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

    மேற்குறிப்பிட்ட இந்த பகுதிகளில் 10 அல்லது 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித் துள்ளனர்.

    தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வரும் நிலையில் அந்த தண்ணீர் வினியோகம் செய்யப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப் படாதது மக்கள் மத்தி யில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    குடிநீர் பிரச்சனை தொடர்பாக மக்கள் தினமும் புகார்களை தெரிவிப்பது வாடிக்கையான ஒன்றாக மாறி உள்ளது. பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடத்தும் முன் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:-கோவை மாநகராட்சி கிழக்கு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது உண்மைதான். சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 10,12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.நேரு நகர், காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் 7 நாட்களுக்கு ஒரு முறை சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளோம்.அதிகாரிகளும் தற்போது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறோம்.கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் முன்பு 52 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 36 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது.

    மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். விரைவில் வாரம் ஒரு முறை அனைத்து பகுதிகளுக்கும் சீரான சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கொரோனா பாதிப்பு காரணமாக பல மாதங்கள் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.
    • ஊரடங்குக்கு முன்பு வரை கோவில் இரவு 9 மணி வரை திறக்கப்பட்டிருந்தது.

    கோவை மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுகிறது. இங்கு யானை, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்கின்றன.

    இந்த வனவிலங்குகள், அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையிலும், படிக்கட்டுகளிலும் இரவு நேரங்களில் வன உயிரினங்கள் நடமாடுவது வழக்கம்.

    கொரோனா பாதிப்பு காரணமாக பல மாதங்கள் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கபடாமல் இருந்தனர். அந்த சமயங்களில் கோவில் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமானது.

    ஊரடங்குக்கு முன்பு வரை கோவில் இரவு 9 மணி வரை திறக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு விலக்கப்பட்ட பின் மீண்டும் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது காட்டு யானைகள் நடமாட்டத்தை காரணம் காட்டி கோவில் நடை திறப்பு நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது.

    கோவில் நடை மூடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே அடிவாரத்தில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் இரவு 7.30 மணிக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி அதிகாலை 3.45 மணியளவில் கோவிலுக்கு அருகே சிறுத்தை நடமாடுவது அங்கிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை பார்த்ததும் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில் யானை மற்றும் சிறுத்தை நடமாடுவதை கருத்தில் கொண்டு கோவிலுக்கு வருவதற்கு பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் பக்தர்கள் செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக பிளக்ஸ் பேனரும் மலையடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் 7 மணிக்கு பிறகு அனுமதிக்கப்படுவது கிடையாது. கோவில் நடை இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது.

    இதுபற்றி வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு தெரியவில்லை. பலர் மாலையில் கோவிலுக்கு வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, வனத்துறை அறிவுறுத்தலின் பேரில் தான் கோவில் நடை திறப்பு நேரம் குறைக்கப்பட்டது. படிக்கட்டுகள் வழியே பக்தர்களை அனுமதிக்காமல் இரவில் வாகனங்களில் மட்டும் அனுமதிப்பதற்கு மேலும் ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டு வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்படும் என்றனர்.

    ×