search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் அரிசி"

    • பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
    • பிடிபட்ட 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    ஆழ்வார்குறிச்சியில் இருந்து சிவசைலம் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 22 மூட்டைகளில் தலா 50 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து பிடிபட்ட 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை காருடன் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடையம் செக்கடியூர் கீழத்தெருவை சேர்ந்த கனகராஜ்(வயது 29), கீழக்கடையத்தை சேர்ந்த நவநீதன்(41), சதீஷ்குமார்(35) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    • சரக்கு ஆட்டோவில் இருந்து 1,850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
    • கோவை மாவட்டம், மாதம்பட்டியை அடுத்த குப்பனூரை சோ்ந்த ஜி.காா்த்திகேயன் (வயது 32) என்பவரை கைது செய்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகரில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய கோவையை சோ்ந்த வாலிபர் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

    இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா், பல்லடம் சாலையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினா் கடந்த 10 ந் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் சரக்கு ஆட்டோவில் இருந்து 1,850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

    இதுதொடா்பாக கோவை மாவட்டம், மாதம்பட்டியை அடுத்த குப்பனூரை சோ்ந்த ஜி.காா்த்திகேயன் (வயது 32) என்பவரை கைது செய்தனா். இவா் தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கும்படி மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காா்த்திகேயனிடம் காவல் துறையினா் நேரில் வழங்கினா் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது. 

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்
    • ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு இங்கிருந்து கடத்துவதற்கு வசதியாக இருக்கிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் மட்டுமின்றி ரேஷன் அரிசியும் கடத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக-கேரள எல்லையில் உள்ள ஊரம்பு பகுதி வழியாக அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வரும் நிலையில், இதற்காக அங்கு கடை அமைக்கப்பட்டு அங்கிருந்து அரிசி கடத்தப் படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மாவட்டத் தின் பல பகுதிகளில் இருந்து வாகனங்களில் கொண்டு வரப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு இங்கிருந்து கடத்துவதற்கு வசதியாக இருக்கிறது. ஆகவே இந்த கடத்தல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 நபர்கள் வீடு வீடாக வந்து ரேசன் அரிசி இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர்.
    • சோதனை மேற்கொண்டதில் அவர்கள் 220 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைபுதூர் ஊராட்சி அருள்புரம் பகுதியில் 2 நபர்கள் வீடு வீடாக வந்து ரேசன் அரிசி இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கோவிந்தராஜுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் இது குறித்து திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் அருள்புரம் பகுதியில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் வந்த அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்(வயது 40), பிரேம்குமார்,(19) ஆகிய இருவரையும் பிடித்து சோதனை மேற்கொண்டதில் அவர்கள் 220 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வாகனத்தினை சாலையில் விட்டுவிட்டு அருகில் உள்ள வாழைத் தோப்புக்குள் இறங்கி ஓட்டம் பிடித்தனர்
    • அரிசி தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகம் உடையார்விளை கிடங்கில் ஒப்படைக்கபடும்

    கன்னியாகுமரி :

    தக்கலையில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் ரேசன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பணியில் இருந்த போது இன்று அதிகாலை சுமார் 5.30 மணிக்கு குறும்பனை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு கார் நிறுத்த முற்பட்டபோது நிற்காமல் அதிவேகமாக சென்றது.

    வாகனத்தினை பின் தொடர்ந்து துரத்தி சென்ற போது ஆலஞ்சி, கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட விழுந்தயம்பலம், கிள்ளியூர், தொலையாவட்டம், வழியாக விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட கொல்லஞ்சி, இலவு விளை, விரிகோடு மற்றும் அதன் அருகில் உள்ள குக்கிராமங்களுக்கிடையே உள்ள உள் சாலைகள் வழியாக வந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் கடந்து மார்த்தாண்டம் அருகே உள்ள கீழக்காஞ்சிரங்கோடு என்னும் ஊரில் வைத்து வழிமறித்த போது அந்த வாகனத்தினை ஓட்டி வந்த ஓட்டுநர்  மற்றும் வாகனத்தில் இருந்த பெண் ஒருவரும் சேர்ந்து வாகனத்தினை சாலையில் விட்டுவிட்டு அருகில் உள்ள வாழைத் தோப்புக்குள் இறங்கி ஓட்டம் பிடித்தனர். பின்னர் வாகனத்தினை சோதனை செய்த போது அந்த வாகனத்தில் இருக்கைகள் இல்லாமல் நூதன முறையில் ரகசிய அறைகள் அமைத்து, மறைத்து வைத்திருந்த சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    பின்னர் அரிசியுடன் வாகனத்தினை பறிமுதல் செய்து, கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரிசி தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகம் உடையார் விளை கிடங்கில் ஒப்படைக்கபடும். மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

    • கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தலில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து சமீப காலமாக கர்நாடகா மாநிலத்திற்கும், ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருக்கும் வெளி மாநிலத்தவர்களுக்கும் ரேஷன் அரிசியை அதிகளவில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    எனவே இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலையில் ஏரகனஹள்ளி -திகினாரை சாலையில் தாளவாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் மூட்டையுடன் வந்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அருகில் இருந்த புதரில் சென்று தப்பி சென்று விட்டனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது ரேஷன் அரிசி கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தலில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

    மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்டது திகினாரையை சேர்ந்த மாதேவா, ஜெயலட்சுமி என தெரிய வந்தது. தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • குன்னம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி சென்ற 1,800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரக்கு வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், பேரளியில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக குன்னம் வட்டார வழங்கல் அலுவலர் சீனிவாசனுக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் பெரம்பலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் பேரளிக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் வட்ட வழங்கல் அலுவலரின் உதவியாளர் அருள்முருகன், குன்னம் தனி வருவாய் ஆய்வாளர் ஏகாம்பரம், பேரளி கிராம உதவியாளர் பெரியசாமி ஆகியோருடன் ரேஷன் அரிசி கடத்தி சென்றதாக கூறப்பட்ட சரக்கு வாகனத்தை போலீசார் தேடி கொண்டிருந்தனர். அப்போது பேரளியில் மருவத்தூர் பிரிவு சாலையில் சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை நோக்கி அவர்கள் சென்றனர். அவர்களை கண்டவுடன் சரக்கு வாகன டிரைவர் வாகனத்தை விட்டு இறங்கி தப்பி ஓடினார்.

    போலீசார் துரத்தி சென்றும் டிரைவரை பிடிக்க முடியவில்லை. பின்னர் சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரக்கு வாகனத்தில் தலா 40 கிலோ எடையுள்ள 45 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது. பின்னர் அந்த சரக்கு வாகனத்தை கைப்பற்றிய குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் 1,800 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பெரம்பலூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரக்கு வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • நெல்லிக்குப்பம் ரோடு குறவன்பாளையம் அருகில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் அதிகாரிகள் அதிரடியாக சோதனையிட்டனர்.
    • ரைஸ் மில்லின் உரிமையாளர் தாட்சாயணியிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.

    கடலூர்:

    ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படும் இலவச அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலூர் மாவட்ட உணவு பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர் உதயகுமார், தனி தாசில்தார் பூபாலச்சந்திரன், பறக்கும் படை அரவிந்தன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், ஏழுமலை மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நெல்லிக்குப்பம் ரோடு குறவன்பாளையம் அருகில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் அதிரடியாக சோதனையிட்டனர். இதில் 1600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து ரைஸ் மில்லின் உரிமையாளர் தாட்சாயணியிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர். மேலும், பதுக்கி வைத்திருந்த 1600 கிலோ ரேஷன் அரிசியினை பறிமுதல் செய்தனர்.

    • மந்திபாளையம் கிராமத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
    • 2 மினி லாரி, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் புதுப்பேட்டை மந்திபாளையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் தீவிரமா கஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அடுத்த மந்திபாளையம் கிராமத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி எடுத்துச்செல்வது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து அவரிடம் துருவித்துருவி விசாரித்தனர். விசாரணையில் அவர் வேலூரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 45), என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த பழனியும் (55) கைது செய்யப்பட்டார். 2 பேரும் வேலூரை சேர்ந்தவர் ஆவார்.

    இவர்கள் ரேஷன் அரிசி, துவரம் பருப்பு ஆகியவை கேரளாவுக்கு அனுப்பும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் அருகில் சாலையோரத்தில் இருட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மினி லாரி, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைதான 2 பேரும் மினி லாரியில் பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றி அதற்குள் ரேஷன் அரிசி, பருப்பு மூட்டைகளை கடத்தி சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதாக தெரிவித்தார்.
    • சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

    நாகர்கோவில், ஜூன்.24-

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், வரு வாய் துறை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பொறுப்பு கலா, சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகலாம்பாள் தலைமையிலான போலீசார் படந்தாலுமூடு சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சொகுசு காரையும், காரில் இருந்த 1 டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிப்பட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் களியக்காவிளை ஓட்ட மரம்நெடுவிளை பகுதியை சேர்ந்த சதாம் உசைன் (வயது 29) என்பது தெரிய வந்தது.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நாகர்கோவிலில் உள்ள உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். சதாம்உசைனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட னர். ரேசன் அரிசி கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட் டது. இதைத்தொடர்ந்து போலீசார் சதாம்உசைனை ஜே.எம்.-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ரேஷன் கடைகள், நுகர்வோர் வாணிப கழக கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    அதன்படி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி பெருந்துறையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் ரேஷன் அரிசி சரியான அளவில் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அவர் பார்வையிட்டார்.

    மேலும் தண்ணீர்பந்தல், மயிலாடி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டதையும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் அரிசி மூட்டைகளை எடை போட்டு அவர் சரிபார்த்தார்.

    இந்த ஆய்வின்போது போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ரேஷன் அரிசி பறிமுதல் செய்தவரை கைது செய்தனர்.
    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் குறிப்பிட்ட இடத்தில் சோதனை மேற்கொண்ட போது தலைமைறைவான பகுதியில் பதுக்கி வைத்திருந்த 24 மூடை(1200 கிலோ) பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மதுரை காமராஜ புரம் பகுதியை சேர்ந்த வீரபத்திரன் (வயது33) என்பவர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து திருமங்கலம் நகர் போலீசார் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரியிடம் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வீரபத்திரனை கைது செய்தனர்.
    ×