என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரேசன் அரிசியை பதுக்கிய 2 பேர் கைது
- 2 நபர்கள் வீடு வீடாக வந்து ரேசன் அரிசி இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர்.
- சோதனை மேற்கொண்டதில் அவர்கள் 220 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைபுதூர் ஊராட்சி அருள்புரம் பகுதியில் 2 நபர்கள் வீடு வீடாக வந்து ரேசன் அரிசி இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கோவிந்தராஜுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் இது குறித்து திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் அருள்புரம் பகுதியில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் வந்த அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்(வயது 40), பிரேம்குமார்,(19) ஆகிய இருவரையும் பிடித்து சோதனை மேற்கொண்டதில் அவர்கள் 220 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்