என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்"
- மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த முரசு பயன்பாடு இல்லாமல் முடங்கி போய் கிடக்கின்றது
- ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுபோல் ராமேசுவரம் கோவிலில் மன்னர்கள் காலத்தில் இருந்தே தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கும் போதும், அது போல் மாலை 3 மணிக்கு நடை திறக்கும் போதும் முரசு ஒலிக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த முரசு பயன்பாடு இல்லாமல் முடங்கி போய் கிடக்கின்றது.
குறிப்பாக அதிகாலையில் மற்றும் பகலில் கோவில் நடை திறக்கும்போது இந்த முரசு அடிப்பதற்கு கோவில் நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர். இதனால் இந்த முரசும் பயன்பாடு இல்லாமல் சேதமடைந்து போய் விட்டது.
தற்போது மன்னர் காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட இந்த முரசானது வடக்கு நந்தவன தோட்டத்தில் உடைந்து போன பொருட்களோடு சேர்த்து குப்பைகளோடு குப்பையாக வைக்கப்பட்டுள்ளன.
ராமேசுவரம் கோவிலில் பாரம்பரியமாக இருந்து வந்த கோவில் நடை திறக்கும்போது அடிக்கப்பட்டு வந்த முரசை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ஒலிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
- மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
- ராமநாத சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
குறிப்பாக மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அன்றைய நாளில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள்.
அதன்படி இன்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்தனர். அங்கு அவர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதன்பின் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடிய பக்தர்கள் ராமநாத சுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்தனர்.
அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை, கோவில், ரத வீதி உள்பட பல்வேறு இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக காட்சியளித்தது.
பக்தர்களின் வருகையை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை நகராட்சி, கோவில் நிர்வாகம் செய்திருந்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமநாத சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை மேல் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் செல்ல கடந்த 15-ந்தேதி முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டி ருந்தது.
அமாவாசையான இன்று அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிப் பாறையில் பெண்கள் உள்பட ஏராளமானோர் திரண்டனர். காலை 7 மணிக்கு வனத்துறையினரின் சோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். அமாவாசையை முன்னிட்டு சந்தன, சுந்தர மகாலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
- அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
- பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தக்கிணறுகளில் புனித நீராட குவிந்திருந்தனர்.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடைகால விடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி முதல் விடப்பட்டது. கோடைகால விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்து வந்தது. இதேபோல் ராமேசுவரம் கோவில் மற்றும் தனுஷ்கோடி பகுதியிலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கோடைகால விடுமுறை முடிந்து இன்று(திங்கட்கிழமை) முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுகின்றது.
இதனிடையே கோடைகால விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக அக்னி தீர்த்த கடலில் புனித நீராட காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தக்கிணறுகளில் புனித நீராட குவிந்திருந்தனர்.
இவ்வாறு தீர்த்த கிணறுகளில் புனித நீராடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் 3-ம் பிரகாரம் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது.
குறிப்பாக 2 கடல் சேருமிடமான அரிச்சல் முனை கடற்கரை சாலை வளைவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் ராமேசுவரம் கோவிலில் பக்தர்களின் வருகை இனி சற்று குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
- ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றது.
- நாளை தீர்த்த கிணறுகளில் நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றது. திருவிழாவின் முதல் நாளான இன்று(சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திட்டக்குடி சந்திப்பு சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே 10 தலை கொண்ட ராவணனை ராமபிரான் தங்க கேடயத்தில் எழுந்தருளி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
இதை தொடர்ந்து திருவிழாவில் 2-வது நாளான நாளை பகல் 1:30 மணிக்கு தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் வைத்து இலங்கை மன்னராக ராவணன் தம்பி விபிஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 3-வது நாளான 29-ந் தேதி அன்று பகல் 1 மணிக்கு கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகின்றது.
திருவிழாவின் 2-வது நாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் வைத்து பட்டாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு ராமர் மற்றும் விபீஷ்ணர் கோவிலிலிருந்து கோதண்டராமர் கோவிலுக்கு எழுந்தளுகிறார்கள். இதனால் நாளை கோவில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை கோவில் நடையானது அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்பட்டு 3 மணியிலிருந்து 4 மணி வரையிலும் ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று பின்னர் கால பூஜை நடைபெறுகின்றது
இதை தொடர்ந்து காலை 7 மணிக்கு ராமர் மற்றும் விபிஷ்ணர் கோவிலில் இருந்து புறப்பட்ட பின்னர் கோவில் நடையானது சாத்தப்படுகின்றது. நாளை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா 27-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடக்கிறது.
- 29-ந்தேதி கோவிலில் ராமலிங்க பிரஷ்டை திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றாகும். அதுபோல் இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுபோல் ஆண்டுதோறும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தல வரலாற்றை விளக்கும் வகையில் ராமலிங்கம் பிரதிஷ்டை திருவிழா மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.
அது போல் ராமேசுவரம் கோவில் உருவாக காரணமான மிக முக்கிய திருவிழாவான ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கோவில் உருவான காலத்தில் இருந்து 10 நா29-ந்தேதி அன்று கோவிலில் ராமலிங்க பிரஷ்டை திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.ட்கள் திருவிழாவாக நடைபெற்று வந்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளாகவே ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தல வரலாற்றை விளக்கக்கூடிய திருவிழாவானது 3 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது. அதில் முதல் நாள் ராவண சம்ஹாரமும், இரண்டாவது நாள் விபிஷ்ணர் பட்டாபிஷேகமும், 3-வது நாள் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவுடன் நிறைவு பெறுகின்றது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா வருகின்ற 27-ந் தேதி அன்று தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெறுகின்றது. திருவிழாவின் முதல் நாளான 27-ந்தேதி அன்று மாலை 5 மணி அளவில் திட்டக்குடி சந்திப்பு சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே ராமபிரான் பத்துதலை கொண்ட ராவணனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
விழாவில் 2-வது நாளான 28-ந் தேதி அன்று கோதண்டராமர் கோவிலில் வைத்து இலங்கை மன்னராக ராவணன் தம்பி விபிஷணர் பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மூன்றாவது நாளான வருகின்ற
உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு மாதத்திற்கு உண்டியல் வருமானம், தீர்த்தம், தரிசனம் தங்கும் விடுதி என பல வழிகளிலும் பக்தர்கள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானத்தை கொடுக்கும் இந்த கோவிலில் தல வரலாற்றை விளக்கக்கூடிய ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவையோ மீண்டும் வழக்கம்போல் 10 நாட்கள் வருகின்ற ஆண்டில் இருந்தாவது நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுபோல் ராமேசுவரம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கோவிலின் தல வரலாற்றை பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை ராமபிரான் பூஜை செய்வது போன்று அருகில் ஆஞ்சநேயர் மற்றும் முனிவர்கள் உள்ளிட்டோர் நிற்பது போன்று ராமலிங்க பிரதிஷ்டை சிற்பக்கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிற்பக்கூடத்தில் உள்ள அனைத்து சிலைகளும் மிகவும் சேதமடைந்தும் வர்ணங்கள் உதிர்ந்தும் பொலிவிழந்தும் காட்சி அளித்து வருகின்றது.
இந்த ராமலிங்க பிரதிஷ்டை சிற்ப கூடத்தில் உள்ள சிலைகளை சீரமைத்து புனரமைத்து வர்ணம் அடிப்பதற்கோ கோவில் நிர்வாகமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ராமலிங்கபிரதிஷ்டை சிற்பக்கூடத்தை மிகுந்த மனவேதனையுடன் பார்த்து செல்கின்றனர். ஆகவே சிற்ப கூடத்தில் உள்ள சிலைகளையும் சீரமைத்து வர்ணங்கள் பூசி புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.
- 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் புனித நீராடினர்.
புண்ணிய ஸ்தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.
குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள். அதன்படி வைகாசி மாத அமாவாசையான இன்று (19-ந் தேதி) அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.
தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசை நாளான இன்று ராமேசுவரத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
- இந்த ஆண்டு உலகில் பல அதிசயங்கள் நிகழும்.
- பஞ்சாங்கம் வாசிக்கப்பட்ட பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
ராமேசுவரம் :
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதி எதிரே வைத்து பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். அதன்படி நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ராமநாதபுரம் சமஸ்தானம் பஞ்சாங்கம் உள்ளிட்ட பஞ்சாங்கங்கள் வாசிக்கப்பட்டன. சஞ்சீவி பட்டர் வாசித்தார்.
பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்த ஆண்டு உலகில் பல அதிசயங்கள் நிகழும். இந்தியா தனது சொந்த முயற்சியில் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் பல அரிய சாதனைகளை படைக்கும். வங்கிகளில் திடீர் பண பற்றாக்குறை ஏற்பட்டு நிவர்த்தி ஆகிவிடும். பணவிரயம் ஏற்படும். உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு பஞ்சமின்றி கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பல தங்கப்பதக்கங்களை பெறுவர்.
ஜவ்வாது, சதுரகிரி, மேகமலை, மூணாறு போன்ற பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும். இந்த ஆண்டு கம்பளி, நூல் ஆடை, ஆபரணங்கள் விலை உயரும். பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். கோழிகளுக்கு புதிய வகை நோய் உருவாகும். இதனால் கோழிகள் இறக்க நேரிடும். சந்தைகளில் கோழிகளின் விலை உயரும்.
புதிய வகை விஷக்காய்ச்சல் அதிகமாக பரவும். அரசு உயர் பதவிகளில் வகிப்பவர்களுக்கு பல நெருக்கடிகள் உண்டாகும். ரசாயன பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். சன்னியாசிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு அரசாங்கத்தால் பல தொல்லைகள் ஏற்படும்.
மழை அதிகளவு பெய்து மழை நீரானது ஆற்று வழியாக கடலில் கலக்க நேரிடும். குறிப்பாக வட மாநிலங்கள் மழை வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்படும். பஞ்சாப், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும். பல நிறுவனங்களை அரசாங்கம் தனியார்மயமாக்க நேரும். மின்சார பொருட்களின் விலை உச்சத்தை தொடும். பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் உள்ளிட்ட பல அதிர்ச்சி தகவல்களும் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.
பஞ்சாங்கம் வாசிக்கப்பட்ட பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.. இந்த பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியில் கோவிலின் ஆய்வாளர் பிரபாகர், பேஷ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ராமேசுவரம் கோவில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
- ஆவண அறையில் இருந்து 308 பழமையான ஓலை சுவடிகளை கண்டெடுத்தனர்.
அகில இந்திய புண்ணியத்தலங்களில் ஒன்றாகவும் இந்தியாவில் உள்ள 12 ஜோதிலிங்கத்தில் ஒன்றாகவும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் விளங்கி வருகின்றது. அதுபோல் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் ஒரு முக்கிய புண்ணிய தலமாகவே ராமேசுவரம் கோவில் இருந்து வருகின்றது.
இவ்வளவு பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். அதுபோல் இந்த கோவிலில் ராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதி மன்னர்களின் பங்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அது மட்டுமல்லாமல் கோவில் உருவான காலத்தில் கோவிலின் ஆகம விதிமுறைகள், வரலாறு, பட்டயங்கள் உள்ளிட்ட பலவிதமான தகவல்கள் ஓலை சுவடிகளிலே எழுதி வைக்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு ராமேசுவரம் கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் கோவிலின் ஆவண அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் ஆவண அறையிலுள்ள ஓலைச்சுவடிகளை சரிபார்க்கும் பணியானது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஆவண அறையில் இருந்து 308 பழமையான ஓலை சுவடிகளை கண்டெடுத்தனர். இந்த ஓலைச்சுவடிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து துணி ஒன்றில் அடுக்கி வைத்து கட்டி ஆவண அறையில் உள்ள பீரோ ஒன்றில் மீண்டும் பாதுகாத்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறும் போது, ராமேசுவரம் கோவிலில் ஆவண அறையில் 308 ஓலைச்சுவடிகள் சரிபார்க்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. ராமேசுவரம் கோவிலில் கணக்கு வழக்குகள் அனைத்தும் தற்போது கம்ப்யூட்டரிலும், இதற்கு முன் நோட்டுகளிலும் எழுதி அது பராமரிக்கப்பட்டு வருகிறது. இதே போல் பழைய காலங்களில் ஓலைச்சுவடிகளில் தான் கோவிலின் அனைத்து கணக்கு வழக்குகள், நிலங்கள் மற்றும் வருவாய்கள், கோவில் திருவிழாக்கள், வரலாறுகள் போன்ற அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கலாம். ஆகவே ராமேசுவரம் கோவிலில் ஆவண அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் அனைத்தையும் சரியாக படித்து அதனை அனைவருக்கும் புரியும்படி மக்களின் பார்வைக்கு வைக்க இந்து சமய அறநிலையத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் அந்த ஓலை சுவடிகளில் எழுதப்பட்டுள்ள அனைத்து விதமான தகவல்களையும் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதன் மூலம் ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றுள்ள தகவல்களை பக்தர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பட்சத்தில் ராமேசுவரம் கோவிலின் சிறப்பு இன்னும் அதிகமாகும். அதனால் உடனடியாக ராமேசுவரம் கோவிலில் உள்ள அனைத்து விதமான ஓலைச்சுவடிகளையும் பக்தர்கள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ராமேசுவரத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார் கூறும் போது, ராமேசுவரம் கோவிலில் பழமையான 308 ஓலைச்சுவடிகள் ஆவண அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றுள்ள எழுத்துக்களை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் தொல்லியல் துறை வரலாற்று ஆய்வாளர்களைக் கொண்டு சரி பார்த்து படித்து ஓலைச்சுவடிகளில் இடம்பெற்றுள்ள தகவல்களை பக்தர்களுக்கும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். அதுபோல் இந்த ஓலைச்சுவடிகளை பக்தர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமேசுவரம் கோவிலில் ஆவண அறையில் பாதுகாக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகளை அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒவ்வொரு தீர்த்த கிணற்றில் நீராடினால் ஒவ்வொரு விதமான தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்த தீர்த்தம் தூர்வாரப்படுகிறது.
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலில் மிக முக்கியமானது என்றால் தீர்த்த கிணறுகள்தான். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரக்கூடிய பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு, கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடிய பின்னர்தான் சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் உள்ள ஒவ்வொரு தீர்த்த கிணற்றில் நீராடினால் ஒவ்வொரு விதமான தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 22 தீர்த்த கிணறுகளில் 6-வது தீர்த்தமாக உள்ள சேதுமாதவ தீர்த்த தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதற்காக தெப்பக்குளத்தில் தண்ணீருக்குள் ராட்சத மோட்டார் வைத்து குழாய் வழியாக கடலில் கலக்கும் வகையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, கோவிலின் சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் தாமரை செடிகள் அதிகம் வளர்ந்துள்ளதாலும், சகதிகள் அதிகம் உள்ளதாலும் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்த தீர்த்தம் தூர்வாரப்படுகிறது என்றார்.
இது குறித்து பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் கூறும்போது, பொதுவாக கோவிலில் உள்ள தெப்பக்குளமாக இருந்தாலும் கண்மாய், ஊருணிகளாக இருந்தாலும் மழை சீசன் தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் தூர்வாரப்படும். அப்படி தூர்வாரும் பட்சத்தில் மழை சீசனில் பெய்யும் தண்ணீரால் அந்த தெப்பக்குளம், ஊருணி, கண்மாயில் தண்ணீர் வரத்து இன்னும் அதிகமாக இருக்கும்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு பருவமழை சீசனில் பெய்த மழையால் ராமேசுவரம் கோவிலில் உள்ள சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் ஓரளவு தண்ணீருடன் காட்சி அளிக்கிறது. தற்போது இந்த சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி தூர்வாரும் பணி நடக்கிறது. தூர்வாரும் பணி சிறப்பானதாக இருந்தாலும் அது செய்வதற்கான நேரம் இது கிடையாது.
ஆகவே சரியான திட்டமிடல் இல்லாமல் இதுபோன்று பணிகள் நடைபெறுவதை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
- கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- இன்று அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.
இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ராமேசுவரமும் ஒன்று. காசி செல்லும் பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு வெளி மாநில பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தருவார்கள். மேலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட நாட்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.
இன்று மாசி மாத அமாவாசை தினம் என்பதால் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும் ராமநாதசுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. 10-ம் திருநாளான இன்று அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
- கோடிலிங்க ரவி சாஸ்திரி மண்டகப்படிக்கு எழுந்தருளினர்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.
இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 9-வது நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. அதற்காக கோவிலில் இருந்து நேற்று காலை சுவாமி பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், அம்பாள் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் மற்றும் சுவாமி-அம்பாள் தேரை கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், நகரசபை தலைவர் நாசர்கான், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கிய சுவாமி-அம்பாள் தேரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவாய நம, சிவாய நம என பக்தி கோஷத்துடன் இழுத்து வந்தனர்.
கிழக்கு வாசல் இருந்து புறப்பட்ட தேரானது தெற்கு, மேற்கு, வடக்கு ரதவீதி சாலை வழியாக பகல் 12.20 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் தேருக்கு முன்பாக தங்க முகப்பட்டை அணிந்து கம்பீரமாக கோவில் யானை ராமலட்சுமி வலம் வந்தது பக்தர்களை பரவசமடைய வைத்தது.
இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் திட்டக்குடியில் உள்ள கோடிலிங்க ரவி சாஸ்திரி மண்டகப்படிக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து மீண்டும் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோவிலுக்கு வந்தடைந்தனர். திருவிழாவின் 10-வது நாள் மற்றும் மாசி அமாவாசையை முன்னிட்டு இன்று பகல் 12 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்த வாரி வழங்கும் நிகழ்ச்சிக்கு எழுந்தருளுகின்றனர்.
- பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
- 19-ந்தேதி சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 6-வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து இரவு சுவாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் 7-ம் நாள் விழா இன்று நடக்கிறது.
திருவிழாவின் 8-வது நாளான நாளை(சனிக்கிழமை) மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை பகல் 1 மணிக்கு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும். மாசி சிவராத்திரியையொட்டி பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
அதுபோல் நாளை மறுநாள் 19-ந் தேதி அன்று பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகின்றது.
திருவிழாவின் 9-வது நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.39 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
இதே போல் ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர்கோவில், திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவில், திருவாடானை
ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்