search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்"

    • இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், புனித நீராடவும் அனுமதி இல்லை.
    • நாளை அதிகாலை முதல் பக்தர்கள் வழக்கமான தரிசனம் செய்யவும், புனித நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள்

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டு ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்பாள் பலவிதமான வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 24-ந் தேதி திருக்கல்யாணம் மண்டபத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.

    இதனிடையே திருக்கல்யாண நிகழ்ச்சியின் 15-வது நாளில் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவிலின் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏக சிம்மாசனத்தில் சாமி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியை தொடர்ந்து கோவில் யானை லட்சுமிக்கு தும்பிக்கை பகுதி முழுவதும் மஞ்சளால் பூசப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமியுடன் கோவில் ரதவீதியை சுற்றி வலம் வந்த யானை ராமலட்சுமியை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், செல்போனிலும் புகைப்படம் எடுத்தனர்.

    திருவிழாவில் கடைசி நாளான இன்று(சனிக்கிழமை) சாமி, அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் கோவிலில் இருந்து கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. கோவிலில் இருந்து சாமி, அம்பாள் காலை 6 மணிக்கு எழுந்தருளிய பின்னர் கோவில் நடையானது சாத்தப்படுகின்றது.

    அதன்படி இன்று இரவு வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கம்போல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் பக்தர்கள் ஸ்படிகலிங்க தரிசனம் முதல் வழக்கமான தரிசனம் செய்யவும், புனித நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, பூஜை நடைபெற்றது.
    • 29-ந்தேதி மறுவீட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மகா சிவராத்திரி திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. மிக முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அதற்காக நேற்று அதிகாலை 3 மணி அளவில் தபசு மண்டகப்படியில் இருந்து பர்வதவர்த்தினி அம்பாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோவிலுக்கு எழுந்தருளினார்.

    இரவு 7 மணிக்கு தெற்கு நந்தவன பகுதியில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் ராமநாதசாமியும், பர்வதவர்த்தினி அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். 7.50 மணியளவில் சாமி, அம்பாளின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து சாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, பூஜை நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் ராணி லட்சுமி நாச்சியார், இளையராஜா நாகநாதசேதுபதி, தக்கார் பழனிகுமார், கோவில் இணை ஆணையர் மாரியப்பன், மேலாளர் மாரியப்பன், ஆய்வாளர் பிரபாகரன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், காசாளர் ராமநாதன், அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, பத்மநாபன், மலைச்சாமி, ரவி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருக்கல்யாண திருவிழாவில் கடைசி நாளான வருகின்ற 29-ந் தேதி கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் மற்றும் பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு மறுவீட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா முடிவடைகின்றது.

    • அம்பாளுக்கும், சுவாமிக்கும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • 29-ந்தேதி சுவாமி-அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் எழுந்தருளும் நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 11-வது நாளான நேற்று ராமதீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக நேற்று காலை 6 மணி அளவில் கோவிலில் இருந்து வெள்ளி கமல வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு மேல் சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் கோவிலில் இருந்து தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார். பகல் 2 மணிக்கு மேல் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது சுவாமியை அம்பாள் சுற்றி 3 முறை வலம் வரவே அம்பாள் கழுத்தில் இருந்த மாலை சுவாமி கழுத்திலும், சுவாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த மாலை அம்பாள் கழுத்திலும் 3 முறை அணிவிக்கப்பட்டு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை மாற்றுதல் நிகழ்ச்சியை கோவிலின் குருக்கள் உதயகுமார், சிவமணி, ஸ்ரீராம் உள்ளிட்டோர் செய்தனர். நிகழ்ச்சியில் கோவிலின் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், ஆய்வாளர் பிரபாகர், மேலாளர் மாரியப்பன், செயல் அலுவலர் விஜயலட்சுமி, பேஷ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, முனியசாமி, முன்னாள் அறங்காவலர் சண்முகம், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நேற்று இரவு 7 மணி அளவில் ஆஞ்சநேயர் சன்னதியில் வைத்து நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) அதிகாலை தபசு மண்டகப்படியில் இருந்து அம்பாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்பாடாகி கோவிலுக்கு வந்தடைகின்றார். தொடர்ந்து இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    திருக்கல்யாண திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 29-ந் தேதி சுவாமி-அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவுபெறுகின்றது.

    • மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோவில் நடை திறப்பில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    top

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் 11-ம் நாளான நாளை காலை 6 மணிக்கு அம்மன், வெள்ளி கமல வாகனத்தில் ராமர் தீர்த்தம் அருகே உள்ள தபசு மண்டகப்படிக்கு செல்கிறார். பகல் 11 மணிக்கு ராமநாத சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகபடிக்கு எழுந்தருள்கிறார். பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் சுவாமி-அம்பாள் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அனுமன் சன்னதியில் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. நாளை மறுநாள் இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது.

    மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோவில் நடை திறப்பில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3 மணி முதல் 3.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று காலை 6 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பின்னர் தபசு மண்டகபடியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் முடிந்து கோவிலுக்கு வந்தடைந்த பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். எனவே நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் தரிசனம் செய்யவும் தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • நாளை சுவாமி-அம்பாள் நிச்சயதார்த்தம் நடக்கிறது.
    • 24-ந்தேதி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் 9-ம் நாளான நேற்று அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில், கோவிலின் கிழக்கு வாசல் எதிரே தேரில் எழுந்தருளினார்.

    இதை தொடர்ந்து விநாயகர், சண்டிகேசுவரர் தேர்களையும், அம்மன் தேரையும் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். கோவிலின் இணை ஆணையர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அம்மன் தேரை உள்ளூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் இழுத்தனர். காலை 10.20 மணிக்கு கிழக்கு வாசல் பகுதியில் இருந்து புறப்பட்ட அம்மன் தேர், பக்தர்கள் வெள்ளத்தில் வந்தது. மதியம் 12 மணிக்கு நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் தேரில் வீற்றிருந்த பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    நேற்று இரவு 8 மணிக்கு அம்மன், வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் 10-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 9 மணிக்கு அம்மன் தங்க பல்லக்கில் காட்சி தருகிறார். மதியம் 12 மணிக்கு கோவிலில் உள்ள சிவதீர்த்தத்தில் அம்மன் மஞ்சள் நீராடல் மற்றும் பூரம் தொழுதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    11-ம் நாளான நாளை காலை 6 மணிக்கு அம்மன், வெள்ளி கமல வாகனத்தில் ராமர் தீர்த்தம் அருகே உள்ள தபசு மண்டகப்படிக்கு செல்கிறார். பகல் 11 மணிக்கு ராமநாத சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகபடிக்கு எழுந்தருள்கிறார். பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் சுவாமி-அம்பாள் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அனுமன் சன்னதியில் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. நாளை மறுநாள் இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது.

    • 23-ந்தேதி சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 24-ந்தேதி ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 8-வது நாளான நேற்று காலை பர்வத வர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்தார்.. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளி திட்டக்குடி அருகே மேல தெருவில் உள்ள கோடிலிங்க ரவி சாஸ்திரி மண்டகப்படிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து அங்கு இரவு பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு மகா தீப ஆராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் ஸ்ரீகோடிலிங்க ரவி சாஸ்திரி, குமார் சாஸ்திரி, கோவிலின் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அது போல் திருவிழாவில் 9-வது நாளான இன்று காலை 10 மணிக்கு மேல் அம்பாள் தேரோட்டம் நடைபெறுகின்றது. 23-ந்தேதி அன்று மதியம் 2 மணியிலிருந்து 3 மணிக்குள் ராம தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப் படியில் வைத்து சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 24-ந் தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 29-ந் தேதி அன்று கோவிலில் இருந்து சுவாமி அம்பாள்-பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா முடிவடைகின்றது.

    • 23-ந்தேதி சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 24-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 7-வது நாளான நேற்று இரவு 9 மணிக்கு பர்வத வர்த்தினி அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து வெள்ளித்தேரை ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க தொடங்கினர். கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து தொடங்கப்பட்ட வெள்ளி தேரோட்டமானது கோவிலின் 4 ரத வீதிகளை சுற்றி மீண்டும் கிழக்கு வாசல் பகுதிக்கு வந்தடைந்தது. திருவிழாவின் 9-வது நாள் நிகழ்ச்சியாக நாளை காலை 10 மணிக்கு மேல் அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 23-ந் தேதி மாலை 2 மணிக்கு மேல் தபசு மண்டகப்படியில் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந் தேதி இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    • 21-ந்தேதி அம்பாள் தேரோட்டம் நடக்கிறது
    • 24-ந்தேதி ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நடக்கிறது

    ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. இந்த நிலையில் 5-வது நாளான ஆடி அமாவாசையான நேற்று காலை 9 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் கோவிலில் இருந்து எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதை தொடர்ந்து பகல் 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஸ்ரீ ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளினார். இதை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருவிழாவின் 6-வது நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 7-வது நாளான நாளை(புதன்கிழமை) இரவு 8 மணிக்கு வெள்ளி தேரோட்டம் நடைபெறுகின்றது. 21-ந் தேதி அன்று அம்பாள் தேரோட்டம், 23-ந்தேதி அன்று பகல் 2 மணியிலிருந்து 3 மணிக்குள் தபசு மண்டகப் படியில் வைத்து சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 29-ந்தேதி அன்று காலை 6 மணிக்கு சுவாமி-அம்பாள், பெருமாள் ஆகியோர் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • இன்று ராமபிரான் தங்க கருட வாகனத்தில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • இரவு 8 மணிக்கு அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டு ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழா 5-வது நாள் நிகழ்ச்சியாக ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று(திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்தில் கோவிலில் இருந்து அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று கோவிலில் தீர்த்த கிணறுகளில் நீராடி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்திருந்தனர். இதனால் இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதுபோல் தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என்பதால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதி பிரகாரங்களிலும் ஏராளமான தடுப்பு கம்பிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் நேற்று இரவு முதலே ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ராமேசுவரம் வந்துள்ளனர்.

    • 23-ந்தேதி சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 24-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 3-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இரவு 8.30 மணிக்கு அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருவிழாவின் 4-வது நாளான இன்று காலை அம்பாள் தங்கப்பல்லக்கிலும், 8 மணிக்கு தங்க சிம்ம வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இதனிடையே ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் 5-வது நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக ஆடி அமாவாசையான நாளை காலை 11 மணிக்கு கோவிலிலிருந்து ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகின்றது. காலை 5 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து காலபூஜை நடைபெறும்.

    வழக்கமாக பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் 3 மணிக்கு திறக்கப்படும். ஆனால் நாளை ஆடி அமாவாசையாக இருப்பதால் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் 1 மணிக்கு அடைக்கப்படாமல் பகல் முழுவதும் திறந்து இருக்கும். இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவிழாவின் 7-வது திருநாள் நிகழ்ச்சியாக வருகின்ற 19-ந்தேதி அன்று இரவு வெள்ளி தேரோட்டமும் 9-வது திருநாள் நிகழ்ச்சியாக 21-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. திருவிழாவில் 11-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 23-ந்தேதி அன்று தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் 12-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

    • 19-ந்தேதி வெள்ளி தேரோட்டம் நடக்கிறது.
    • 24-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29-ந் தேதி வரை விழா நடக்கிறது. விழாவின் முதல் நாளான நேற்று பகல் 11 மணி அளவில் அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது.

    இதை முன்னிட்டு கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடிமரம் மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. கொடியேற்ற பூஜைகளை உதயகுமார், சிவமணி உள்ளிட்ட குருக்கள் செய்தனர்.

    நேற்று இரவு அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை அம்பாள் தங்க பல்லக்கில் வீதி உலாவும், இரவு தங்க காமதேனு வாகனத்திலும் வீதி உலாவும் நடைபெறுகிறது. 17-ந் தேதி ஆடி அமாவாசை அன்று காலை 11 மணிக்கு கோவிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந் தேதி இரவு வெள்ளி தேரோட்டமும், 21-ந் தேதி காலை 10 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியாக அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    விழாவின் 11-ம் திருநாளான 23-ந் தேதி தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 24-ந் தேதி இரவு 7:30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக ராமநாதசாமி-பர்வத வர்த்தினி அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. 29-ந் தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் தங்ககேடயத்தில் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவு பெறுகிறது.

    • 21-ந்தேதி தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
    • 24-ந்தேதி ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி திருக்கல்யாணம் நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா நாளை மறுநாள் 13-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை 16 நாட்கள் நடைபெறுகின்றது. திருவிழாவின் முதல் நாளான 13-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோவிலின் அம்பாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது.

    இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் ரத வீதிகளில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 14-ந்தேதி அன்று காலை 9 மணிக்கு மேல் அம்பாள் தங்கப்பல்லக்கிலும், 8 மணிக்கு மேல் அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    17-ந்தேதி அன்று ஆடி அமாவாசை அன்று காலை 11 மணிக்கு ராமர் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 21-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.

    23-ந்தேதி அன்று தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 29-ந் தேதி அன்று சுவாமி அம்பாள் பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    ×