search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கார்த்திகை மாத அமாவாசை: ராமேசுவரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
    X

    அக்னிதீர்த்த கடலில் புனித நீராட திரண்ட பக்தர்கள்.

    கார்த்திகை மாத அமாவாசை: ராமேசுவரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

    • அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள முக்கிய இந்து கோவில்க ளில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலும் ஒன்று. காசிக்கு செல்லும் பக்தர்கள் ராமேசுவரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என்று ஐதீகம் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

    முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. இன்று கார்த்திகை மாத அமாவாசை தினம் என்பதால் ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இன்று புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பலர் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரையில் தர்ப்பணம் செய்து சென்றனர். இதனால் ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்குள்ள 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடி சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×