search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாங்கம்"

    • தங்கம், வெள்ளி, மஞ்சள் விலை ஏற்றம், இறக்கமாக இருக்கும்.
    • புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பிற்பகலில் ராமேசுவரம் கோவிலின் சுவாமி சன்னதி பிரகாரத்தில் அமைந்து உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த ஆண்டு சித்திரை 1-ந்தேதியில் இருந்து 2025-ம் ஆண்டு பங்குனி 31-ந்தேதி வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பஞ்சாங்கமாக வாசிக்கப்பட்டது. இந்த பஞ்சாங்கத்தை கோவிலின் உதயகுமார் குருக்கள் வாசித்தார்.

    பஞ்சாங்கத்தில் வாசிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வாரி வழங்க நேரும். உலக அளவில் இந்தியா முதலிடத்தில் பதவி வகிக்கும். புற்றுநோய்க்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து சாதனை படைக்கும். இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சொத்து பிரச்சனை அதிகம் ஏற்படும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரும். பணத்தேவைகள் அதிகரிப்பதுடன் ஆன்லைன் வியாபாரமும் பெருகும். விலைவாசி ஏற்றம், இறங்குமுகமாக இருக்கும். தங்கம், வெள்ளி, மஞ்சள் விலை ஏற்றம், இறக்கமாக இருக்கும். விளையாட்டுத்துறையில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை படைக்க நேரும். போதைப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழக்கத்தில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்கும். கல்வி கட்டணங்கள் உயரக்கூடும். மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்விக் கொள்கை மூலம் சுமைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.

    எல்லைகள் எப்போதும் போர் பதற்றமாக இருக்கும். புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வவ்வால் தொல்லை அதிகமாக இருக்கும். பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும்.

    அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். கட்சி கூட்டணிகள் மாறுபடும். அரசியல்வாதிகள் வழக்குகளில் சிக்கும் நிலை உருவாகலாம். இந்த ஆண்டு புதிதாக இருமல், கண் நோய் அதிகமாக பரவும். இந்த ஆண்டு விவசாயம் வளமாக இருக்கும். காட்டில் உள்ள புலி, சிங்கம் உள்ளிட்டவைகளுக்கு உணவு பஞ்சம் இருக்காது. எல்லா உயிரினங்களுக்கும் உண்ண உணவும், இடமும் கிடைக்கும்.

    இந்த ஆண்டு இந்தியா கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். பல புதிய வரிகள் விதிக்க நேரும். விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். மஞ்சள் விலை உச்சத்தை தொடும். கல்வி கட்டணம், கம்ப்யூட்டர், தொலை தொடர்பு சாதனங்கள், மின்சார கட்டணம் ஆகியவை விலை உயரும். நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படலாம். புதிய வரிகளால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த ஆண்டு வெப்பமும், மழையும், குளிர்ச்சியும் அதிகமாக இருக்கும். வெளி மாநிலத்தவர்களால் திருட்டு பயம் அதிகரிக்கும். இந்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.

    • தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    • கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

    வியதீபாதம் யோகத்தில் ஒருவன் பிறந்தால், அவன் குடும்பத்தில் மோட்சம் அடையாத ஆன்மாக்களின் சாபம் ஏற்படும். அப்படி இந்த யோகத்தில் பிறந்தவரோ அல்லது அவரது தந்தையோ, ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற வியதீபாதம் யோக நாளில் (ஜோதிடர் மூலம் இந்த நாளை அறிந்து கொள்வதே சரியானது)

    அதிகாலை நேரத்தில் இந்தத் திருத்தலத்தில் உள்ள தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் நதிக்கரையில் உள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள பக்தவத்சலப் பெருமாளை வணங்கி, அர்ச்சனை மற்றும் ஆராதனைகளைச் செய்ய வேண்டும். பின்னர் தங்களால் முடிந்த அளவு (குறைந்தது 10 பேருக்கு) அன்னதானம் செய்தால், பித்ரு தோஷம் மற்றும் கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

     பரிகாரம் செய்வது எப்படி?

    அசுப யோகங்களின் தோஷம் உள்ளவர்கள், முதலில் இந்தத் திருத்தலத்தின் புனித நீரான தாமிரபரணி நதியில் நீராட வேண்டும். நீராடும்போது உடுத்தி இருந்த ஆடையை அங்கேயே களைந்து, அதற்கென வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் போட்டுவிட்டு, புதிய ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், பழைய ஆடைகளை ஆற்றில் விட்டு, அதனை மாசுபடுத்தக்கூடாது.

    பின்னர் ஆலயத்திற்குள் சென்று பக்தவத்சலப் பெருமாள் முன்பாக நின்று, அவரை வழிபட வேண்டும். பெருமாளுக்கு உகந்த துளசி மாலையை வாங்கிச் சென்று, பூஜை செய்யும் பட்டாச்சாரியாரிடம் கொடுத்து சுவாமிக்கு அணிவிக்கச் செய்ய வேண்டும். அதோடு சுத்தமான நெய் வாங்கிச் சென்று, சுவாமியின் முன்பாக இருக்கும் விளக்கில் சேர்க்கச் சொல்ல வேண்டும். பின்னர் உங்களது குறைகள் தீர இறைவனை வழிபட வேண்டும்.

    இறுதியாக நாம் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. அது என்னவென்றால், கோவிலில் இருந்து வீட்டிற்கு வரும் முன்பாக, கோவிலிலோ, அல்லது வரும் வழியிலோ குறைந்தது 10 பேருக்கு கட்டாயமாக அன்னதானம் செய்ய வேண்டும். இதற்கான பணத்தை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்யச் சொல்வதில் எந்த பலனும் இல்லை. நீங்களே நேரடியாக உங்கள் கைகளால் இந்த அன்னதானத்தை வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    • `பஞ்சாங்கம்’ என்பது மிகவும் உயிரோட்டமான சொல்.
    • பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயம்.

    ஜோதிடத்தில் `பஞ்சாங்கம்' என்பது மிகவும் உயிரோட்டமான சொல். நாள் அல்லது தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களில், யோகம் என்பது முக்கியமானது. நட்சத்திரமும், கிழமையும் இணைவதும் யோகம் தான். தவிர ஜோதிடத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல, தனிநபர் ஜாதகங்களில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு.

    இந்த யோகங்களைத் தவிர இன்னும் சில யோகமும் உண்டு. 27 நட்சத்திரங்களை போல, 27 யோகங்களும் உள்ளன. அவற்றில் பிரீதி, ஆயுஸ்மன், சவுபாக்கியம், சோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வரியான், சிவன், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், பிராம்யம், ஐந்திரம் ஆகிய 17-ம் சுப யோகங்கள் ஆகும். மீதமுள்ள விஷ் கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், விகாதம், துருவம், வியதீபாதம், பரிகம், வைதிருதி ஆகிய 10-ம் அசுப யோகங்கள் ஆகும்.

    சுப யோகங்களில் பிறந்தவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அசுப யோகங்களில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குடும்பங்களில் நிறைய பேருக்கு திருமணமே கைகூடி வராத நிலையை நாம் பார்த்திருப்போம்.

    அண்ணன், தங்கை, அக்கா, அத்தை என ஒரு கூட்டமே திருமணமாகாமல், சரியான தொழில், உத்தியோகம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும். ஒரு சிலர் குழந்தை இல்லாமல் இருப்பார்கள். சில குடும்பங்களில் தொடர் மரணங்கள், அகால மரணங்கள் போன்ற துன்பங்கள் நிகழலாம். இவற்றிற்கெல்லாம் இந்த அசுப யோகங்கள் காரணமாக அமையலாம்.

    அதேபோல் சில குடும்பங்களில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சொர்க்கமா?, நரகமா?, மறுபிறவியா?, தண்டனையா? என்று, எதுவுமே இல்லாமல் ஒரு உறுதியற்ற தன்மையில் அல்லாடிக் கொண்டிருக்கும். அதற்கும் அசுப யோகத்துடன் அவரின் குடும்பத்தில் பிறந்தவர்களின் ஜாதகமே காரணம்.

    இவற்றிற்கெல்லாம் வழிபாட்டுத் தலமாக அமைந்ததுதான், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அமைந்துள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவில். பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சேரன்மகாதேவி. இங்கிருந்து வடக்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது, பக்தவத்சலப் பெருமாள் ஆலயம்.

    வியாச முனிவரால் பெருமைப்படுத்தப்பட்ட 12 ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தின் அடிப்பகுதியில் நரசிம்மப் பெருமாள் யோக நிலையில் கோவில் கொண்டிருப்பதாக ஐதீகம். பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இந்த ஆலயம், 1921-ம் ஆண்டு முதல் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் இருக்கிறது.

    அசுப யோகங்களில் பிறந்தவர்களின் முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி பெற, சேரன்மகாதேவியில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைதான் சிறப்பானது என்பது ஆன்மிகவாதிகளின் கருத்தாகும். தாமிரபரணியை ஒட்டினாற்போல் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.

    கிழக்கு நோக்கி அபயக்கரம் நீட்டி அருளும் பக்தவத்சலப் பெருமாள், `நான் இருக்கிறேன்.. இனி உன் துன்பம் நீங்கி விடும்" என்பதுபோல் முத்திரைக் காட்டி கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். கருவறைக்கு வெளியே வலதுபுறத்தில் லட்சுமிதேவியுடன் நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

    அசுப யோகங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்திருந்தாலும் கூட, அவர்கள் தன் துயரங்கள் நீங்க நேராக இந்தத் திருத்தலம் வந்து, கோவிலைத் தொட்டுச் செல்லும் தாமிரபரணி ஆற்றில் நீராடி வழிபட வேண்டும். இதுபற்றியும், இந்த நதி பற்றியும் வியாசரால் எழுதப்பட்டுள்ளது. அது தாமிரபரணி மகாத்மீயத்தில் காணப்படுகிறது.

    10 வகையான அசுப யோகத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆத்மா நற்கதி அடையாத தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து நதியில் நின்று, தன் குடும்பத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து நீராடினால், அவர்களின் ஆன்மா நற்கதி அடையும் என்று, தாமிரபரணி மகாத்மீயம் கூறுகிறது.

    மேலும் மேற்கண்ட தோஷம் உள்ளவர்கள், இந்த நதியில் நீராடி, வியாசர், மார்க்கண்டேயர், அகத்தியர், சப்த நதிகள், பக்தவத்சலப் பெருமாள் ஆகியோரை தரிசித்து, அன்னதானம் செய்தால் `நவகிரிச்சினி பலன்' (ஒரு லட்சம் காயத்ரி உச்சரித்த பலன்) கிடைப்பதுடன், தோஷங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

    சில ஆலயங்களுக்கு நாம் என்னதான் முயற்சித்தாலும், அந்த இறைவனின் கருணைப் பார்வை நம்மீது படவில்லை என்றால், அங்கு செல்ல முடியாத நிலையே ஏற்படும். இருப்பினும் அந்த இறைவனை நினைத்து மனமுருக வேண்டிக்கொண்டால், அவரை வழிபடுவதற்கான வாய்ப்பை அவரே ஏற்படுத்தித் தருவார். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.45 மணி வரை திறந்திருக்கும்.

    • திருவண்ணாமலை அருணாசல நாயகர் காலை விருஷப வாகனத்தில் புறப்பாடு.
    • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-5 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி நள்ளிரவு 1.12 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: சதயம் இரவு 8.38 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சிக்கல் சிங்கார வேலர் விடையாற்று. திருவண்ணாமலை அருணாசல நாயகர் காலை விருஷப வாகனத்தில் புறப்பாடு. சுவாமிமலை முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-அன்பு

    கடகம்-உயர்வு

    சிம்மம்-வரவு

    கன்னி-ஆதரவு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-தெளிவு

    தனுசு- ஜெயம்

    மகரம்-புகழ்

    கும்பம்-நட்பு

    மீனம்-சாந்தம்

    • சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-4 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி பின்னிரவு 3.33 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: அவிட்டம் காலை 10.17 மணி வரை பிறகு சதயம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி. பழனி ஆண்டவர் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் பூத வாகனத்தில் வீதி உலா. திருநெல்வேலி நெல்லையபபர் கொலு தர்பார் காட்சி. சிக்கல் சிங்கர வேலவர் வள்ளிதேவியை மணந்து இந்திர விமானத்தில் காட்சியருளல். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுர சுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் சுவாமிக்கு காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-குணம்

    ரிஷபம்-களிப்பு

    மிதுனம்-மேன்மை

    கடகம்-பொறுமை

    சிம்மம்-போட்டி

    கன்னி-வரவு

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- ஊக்கம்

    மகரம்-ஆதாயம்

    கும்பம்-உழைப்பு

    மீனம்-கடமை

    • திருவோண விரதம், சுப முகூர்த்த தினம்.
    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அலங்காரம்.

    இன்று பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-3 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி காலை 8.04 மணி வரை பிறகு சப்தமி நாளை விடியற்காலை 4.06 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: திருவோணம் இரவு 11.55 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று திருவோண விரதம். சுப முகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அலங்காரம். சுவாமிமலை முருகப் பெருமான் இடும்ப வாகனத்தில் பவனி. திருவண்ணாமலை அருணாசல நாயகர் காலை பூத வாகனத்தில் பவனி. சிக்கல் சிங்காரவேலர் காலை சூர்ணோற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமார், திருவல்லிக்கேணி, ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-களிப்பு

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-இரக்கம்

    கடகம்-நன்மை

    சிம்மம்-வரவு

    கன்னி-ஆர்வம்

    துலாம்- அலைச்சல்

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- உயர்வு

    மகரம்-லாபம்

    கும்பம்-சுகம்

    மீனம்-இன்பம்

    • சகல சுப்பிரமணிய சுவாமி தலங்களில் கந்தசஷ்டி சூரசம்கார விழா.
    • குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம்

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-2 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி காலை 10.14 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: உத்திராடம் நண்பகல் 1.26 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சகல சுப்பிரமணிய சுவாமி தலங்களில் கந்தசஷ்டி சூரசம்கார விழா. திருச்செந்தூர் முருகப் பெருமான் கடற்கரையில் சூரசம்கார அற்புதக் காட்சி. திருப்பரங்குன்றம், சுவாமிமலை தலங்களில் கார்த்திகை திருவிழா தொடக்கம். குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதரவு

    ரிஷபம்-கண்ணியம்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-நலம்

    சிம்மம்-தாமதம்

    கன்னி-விருத்தி

    துலாம்- செலவு

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- பக்தி

    மகரம்-வரவு

    கும்பம்-உழைப்பு

    மீனம்-பயணம்

    • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை.
    • திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் உற்சவம் ஆரம்பம்

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை 1 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி நண்பகல் 12.03 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம்: பூராடம் பின்னிரவு 2.45 மணி வரை. பிறகு உத்திராடம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: காலை 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் உற்சவம் ஆரம்பம், காலை வெள்ளி விமானத்தில் பவனி. பழனி ஆண்டவர் உற்சவம் ஆரம்பம். குமாரவயலூர் முருகப்பெருமான் சிங்கமுகாசூரனுக்குப் பெருவாழ்வு தந்தருளல். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - சுகம்

    ரிஷபம் - சுபம்

    மிதுனம் - அமைதி

    கடகம் - நன்மை

    சிம்மம் - நட்பு

    கன்னி - அன்பு

    துலாம் - புகழ்

    விருச்சிகம் - நிறைவு

    தனுசு - ஜெயம்

    மகரம் - பயணம்

    கும்பம் - மகிழ்ச்சி

    மீனம் - திறமை

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநட்சத்திர வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி 30 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை நண்பகல் 1.34 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: மூலம் பின்னிரவு 3.49 மணி வரை பிறகு பூராடம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுப முகூர்த்த தினம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ரதோற்சவம். குமாரவயலூர் முருகப்பெருமான் கஜமுகாசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல். ஐயடிகள் காடவர்கோன் நாயனார் குருபூஜை. மாயவரம் கவுரிமாயூரநாதர் கடைமுக உற்சவ தீர்த்தவாரி. வள்ளியூர் முருகப்பெருமான் காலை ஏக சிம்மாசனத்தில் பவனி. ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநட்சத்திர வைபவம். ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-நன்மை

    கடகம்-தனம்

    சிம்மம்-வெற்றி

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- போட்டி

    மகரம்-புகழ்

    கும்பம்-செலவு

    மீனம்-நிறைவு

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்க நாதர் வெண்ணைத்தாழி சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி 29 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவிதியை பிற்பகல் 2.40 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: கேட்டை நாளை விடியற்காலை 4.31 மணி வரை பிறகு மூலம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 ம1ணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்க நாதர் வெண்ணைத்தாழி சேவை. மதுரை சமீபம் சோலைமலை முருகர் கோவிலில் யானை வாகனத்தில் பவனி. குமாரவயலூர் முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. மாயவரம் கவுரிமாயூர நாதர் ரதோற்சவம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோண்டராம சுவாமிக்கு காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-விருத்தி

    கடகம்-உதவி

    சிம்மம்-நட்பு

    கன்னி-லாபம்

    துலாம்- பயணம்

    விருச்சிகம்-மகிழ்ச்சி

    தனுசு- திடம்

    மகரம்-உழைப்பு

    கும்பம்-நற்செயல்

    மீனம்-பண்பு

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.
    • திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கநாதர் திருக்கல்யாணம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி 28 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை பிற்பகல் 3.20 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: அனுஷம் நாளை விடியற்காலை 4.48 வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திர தரிசனம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சிக்கல் சிங்கார வேலர் நாகாபரணக்காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. பூசலார் நாயனார் குருபூஜை. குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கநாதர் திருக்கல்யாணம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-அசதி

    கடகம்-விருத்தி

    சிம்மம்-லாபம்

    கன்னி-ஆதரவு

    துலாம்- கடமை

    விருச்சிகம்-கண்ணியம்

    தனுசு- உறுதி

    மகரம்-சாகசம்

    கும்பம்-நற்செய்தி

    மீனம்-ஆக்கம்

    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.
    • மாயவரம் கவுரி மாயூரநாதர் மூன்று கொத்து மஞ்சத்தில் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி 26 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தசி பிற்பகல் 3.09 மணி வரை

    பிறகு அமாவாசை

    நட்சத்திரம்: சுவாதி பின்னிரவு 3.58 மணி வரை

    பிறகு விசாகம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை

    மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று தீபாவளிப் பண்டிகை. சுப முகூர்த்த தினம். போதாயன அமாவாசை. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. வள்ளியூர் முருகப்பெருமான் கலைமான் கிடா வாகனத்தில் காலை ஏக சிம்மாசனத்தில் புறப்பாடு. மெய்கண்ட நாயனார் குருபூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. மாயவரம் கவுரி மாயூரநாதர் மூன்று கொத்து மஞ்சத்தில் புறப்பாடு. திருநெல்வேலி காந்திமதியம்மன் மஞ்சள் நீராட்டு விழா.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-சுபம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-பொறுமை

    சிம்மம்-சுகம்

    கன்னி-வெற்றி

    துலாம்- நிம்மதி

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- ஆக்கம்

    மகரம்-செலவு

    கும்பம்-ஊக்கம்

    மீனம்-வரவு

    ×