என் மலர்
வழிபாடு

திருநள்ளாறு கோவிலில் 2026 மார்ச் 6-ந்தேதி சனிப்பெயர்ச்சி: பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியில் தகவல்
- இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும்.
- சனிப்பெயர்ச்சி விழா 2025 மார்ச் மாதம் நடப்பதாக பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் 2026-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள் பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். இதில் நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்வது வழக்கம்.
சனிப்பெயர்ச்சி விழா 2025 மார்ச் மாதம் நடப்பதாக பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆனால் இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதி காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இதனை நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன் முன்னிலையில் சிவச்சாரி யார்கள் பஞ்சாங்கம் வாசித்து அறிவித்தனர்.
இதில் சிவாச்சாரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






