search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல் நர்வேகர்"

    • சபாநாயகருக்கு எதிராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்
    • சபாநாயகர் முடிவெடுக்கும் முன்னதாக முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசியுள்ளார்

    முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் டிசம்பர் இறுதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. சபாநாயகர் தனது உத்தரவை அறிவிக்காததால் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு எதிராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உச்சநமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார் இதுதொடர்பாக அவர் கூறியதாவது, இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்கும் முன்னதாக முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசியுள்ளார். நீதிபதி குற்றவாளியை சந்தித்து பேசுவது போல இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். சபாநாயகரின் செயல் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த உத்தவ் தாக்கரே, இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சார்பற்ற முறையில் தனது கடமையை ஆற்றுவாரா என்ற சந்தேகதம் எழுகிறது எனவும் கூறினார்.

    உத்தவ் தாக்கரேவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள சபாநாயகர் ராகுல் நர்வேகர், "ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர். சட்டப்பேரவை விவகாரம் தொடர்பாக நாங்கள் சந்தித்துக்கொள்வது அவசியம். இதில் உள்நோக்கம் இருப்பதாக கூறுவது தவறு. இது தொடர்பாக யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இல்லை" என கூறினார். மேலும், பாஜகவைச் சேர்ந்த நான், உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த எம்பி அணில் தேசாய் மற்றும் ஷரத் பவார் அணியைச் சேர்ந்த ஜெயந்த் பாடில் ஆகியோரை விமான நிலையத்தில் சந்தித்து பேசியுள்ளேன். அதற்கும் உள்நோக்கம் கற்பிப்பார்களா? என கேள்வி எழுப்பினார். அரசியல் சாசனத்துக்கு உட்பட்டும் இந்த விவகாரத்தில் நான் நல்ல முடிவை எடுப்பேன். எனது முடிவு தகுதியின் அடிப்படையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • பாஜகவை சேர்ந்த நர்வேகர், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளில் உறுப்பினராக இருந்தவர்.
    • தற்போது கொலாபா தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.

    \முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிட்டனர்.

    வாக்கெடுப்பில் நர்வேகருக்கு ஆதரவாக 164 வாக்குகளும், சால்விக்கு ஆதரவாக 107 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து புதிய சபாநாயகராக ராகுல் நர்வேக்கர் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும், நர்வேக்கரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    அப்போது பேசிய பட்னாவிஸ், ராகுல் நர்வேகர் மகாராஷ்டிராவிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் இளம் வயது சபாநாயகராக உள்ளார் என தெரிவித்தார். 45 வயதான நார்வேக்கரின் முதலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தார். பின்னர் அதில் இருந்து விலகி சிவசேனா கட்சியில் இணைந்த அவர், அக்கட்சியின் எம்எல்ஏவாக இருந்தவர்.

    பின்னர் 2014 ஆம் ஆண்டில் சிவசேனாவில் இருந்து விலகி பாஜகவில் அவர் இணைந்தார். தற்போது கொலாபா தொகுதி பாஜக எம்எல்ஏவாக அவர் உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழுத் தலைவர் ராம்ராஜே நாயக் நிம்பல்கரின் மருமகன் ராகுல் நர்வேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×