search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி சாவு"

    • திடீரென்று அவரை விஷ பூச்சிஒன்று கடித்ததாக தெரிகிறது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த நாகரசம்பட்டியில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் காந்திமதி (வயது76).

    விவசாயியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென்று அவரை விஷஜந்து ஒன்று கடித்ததாக தெரிகிறது.

    இதனால் வலியால் அவர் அலறி துடித்தார். உடனே காந்திமதியை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராசாத்தி தனது மகன் ராஜாகண்ணு வீட்டில் வசித்து வந்தார்.
    • கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரி அருகே கொட்டகம்பை பகுதியை சேர்ந்தவர் மல்லன். இவருடைய மனைவி ராசாத்தி (வயது 60). இவர் தனது மகன் ராஜாகண்ணு வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராசாத்தி வீட்டின் மேல் தளத்தில் காய போட்டிருந்த துணிகளை எடுத்து வருவதற்காக படிகட்டுகளில் ஏறி சென்றார். அப்போது கால் தவறி 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்து உள்ளார். நீண்ட நேரமாகியும் ராசாத்தி வராததால், குடும்பத்தினர் மேலே சென்று பார்த்தனர். அப்போது ராசாத்தி காயமடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராசாத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு ஆடு மங்கம்மாளை முட்டியது.
    • தவறி கீழே விழுந்த மங்கம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காவாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சப்பன். விவசாயியான இவரது மனைவி மங்கம்மாள் (வயது65). இவர்கள் ஆடுகளை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து மாற்று இடத்திற்கு கொண்டு செல்லுமாறு மஞ்சப்பன் தனது மனைவி மங்கம்மாளிடம் தெரிவித்தார்.

    அவரும் ஆடுகளை கயிற்றால் கட்டி வேறு இடத்திற்கு கொண்டு சென்றார். அப்போது ஒரு ஆடு மங்கம்மாளை முட்டியது.

    இதில் தவறி கீழே விழுந்த மங்கம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மஞ்சப்பன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மங்கம்மாள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மங்கம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எலி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன வெங்காயப்பள்ளி டேக்கன் வட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சின்ன பாப்பா (வயது 70). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி அதிகாலை அதிகமான வயிற்று வலி காரணமாக வீட் டில் இருந்த எலி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந் துள்ளார்.

    இதை பார்த்த அவரது குடும்பத்தினர், சின்ன பாப்பாவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மகன் குணசேகர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    • ஈஸ்வரி தனது மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூறியுள்ளார்.
    • சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூரை அடுத்துள்ள கரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி (73). இவர் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது. இதையடுத்து அந்தப் பாம்பை அடித்து கொன்று தன்னுடன் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த ஈஸ்வரி தனது மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து ஈஸ்வரியை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டிரான்ஸ் பார்மர் லைனை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
    • காவேரிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் அருகே உள்ள பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி துளசியம்மாள் (வயது 65).

    இவர் பனந்தேரி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது டிரான்ஸ் பார்மர் லைனை தொட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரி பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
    • திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலகோபுரதெரு சென்ட்ரல் சினிமா தியேட்டர் அருகில் மூதாட்டி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ரோட்டில் விழுந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மேல் மதுரை கிராம உதவியாளர் சமையன் திலகர்திடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், இறந்த மூதாட்டி தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி ஜீவா(வயது 60) என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர்.
    • அவர் யார் என்ற விவரம் உடனே தெரியவில்லை.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கம்மாள் (வயது70). இவர் பரிசல் துறை அருகே துணி துவைப்பதற்காக காவிரி ஆற்றுக்கு சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

    இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரது மகன் சுப்ரமணிக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சுப்ரமணி ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் உடனே அங்கு வந்து ரங்கம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடையாளம் தெரியாத வாலிபர் சாவு

    இதேபோன்று ஒகேனக்கல் முதலைப்பண்ணை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் நீரில் மிதந்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசார் விசாரித்தனர். அவர் யார் என்ற விவரம் உடனே தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தருமபுரி மாவட்டத்தில் மாயமான வாலிபர்கள் யாராவது ஒகேனக்கலில் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது சுற்றுலா வந்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் ராஜாபேட்டை வந்தார்.
    • அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் வந்து கோவிந்தம்மாள் மீது மோதியது.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த ராஜாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது70). இவர் உறவினர் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் ராஜாபேட்டை வந்தார்.

    அப்போது அவர் வீட்டிற்கு நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் வந்து கோவிந்தம்மாள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தம்மாள் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவரை தேடி வருகின்றனர்.

    • கீரனஅள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • மருத்துவமனையில சிகிச்சை பலனின்றி கெம்பம்மா உயிரிழந்தார்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்தள்ள அஞ்சலகிரி பகுதியை சேர்ந்தவர் கெம்பம்மா (வயது80). இவர் கீரனஅள்ளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கெம்பம்மா உயிரிழந்தார்.

    இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுனில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் வேட்டியம்பட்டி உள்ளது.

    இந்த பகுதி சாலையில் 63 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனியம்மாள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப தகராறு காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே செங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது65). கணவன்-மனைவி இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பழனியம்மாள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேதபரி சோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் குடும்ப தகராறு காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறுஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×