என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆடு முட்டி மூதாட்டி சாவு
- ஒரு ஆடு மங்கம்மாளை முட்டியது.
- தவறி கீழே விழுந்த மங்கம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காவாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சப்பன். விவசாயியான இவரது மனைவி மங்கம்மாள் (வயது65). இவர்கள் ஆடுகளை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து மாற்று இடத்திற்கு கொண்டு செல்லுமாறு மஞ்சப்பன் தனது மனைவி மங்கம்மாளிடம் தெரிவித்தார்.
அவரும் ஆடுகளை கயிற்றால் கட்டி வேறு இடத்திற்கு கொண்டு சென்றார். அப்போது ஒரு ஆடு மங்கம்மாளை முட்டியது.
இதில் தவறி கீழே விழுந்த மங்கம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மஞ்சப்பன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மங்கம்மாள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மங்கம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்