search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷ பூச்சி கடித்து மூதாட்டி சாவு
    X

    விஷ பூச்சி கடித்து மூதாட்டி சாவு

    • திடீரென்று அவரை விஷ பூச்சிஒன்று கடித்ததாக தெரிகிறது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த நாகரசம்பட்டியில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் காந்திமதி (வயது76).

    விவசாயியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென்று அவரை விஷஜந்து ஒன்று கடித்ததாக தெரிகிறது.

    இதனால் வலியால் அவர் அலறி துடித்தார். உடனே காந்திமதியை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×