search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி உள்பட 2 பேர் சாவு
    X

    ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி உள்பட 2 பேர் சாவு

    • போலீசார் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர்.
    • அவர் யார் என்ற விவரம் உடனே தெரியவில்லை.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கம்மாள் (வயது70). இவர் பரிசல் துறை அருகே துணி துவைப்பதற்காக காவிரி ஆற்றுக்கு சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

    இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரது மகன் சுப்ரமணிக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சுப்ரமணி ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் உடனே அங்கு வந்து ரங்கம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடையாளம் தெரியாத வாலிபர் சாவு

    இதேபோன்று ஒகேனக்கல் முதலைப்பண்ணை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் நீரில் மிதந்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசார் விசாரித்தனர். அவர் யார் என்ற விவரம் உடனே தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தருமபுரி மாவட்டத்தில் மாயமான வாலிபர்கள் யாராவது ஒகேனக்கலில் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது சுற்றுலா வந்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×