search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்றுகை"

    • 15-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வர்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்்ளது. இங்கு கிள்ளை பகுதியை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வர். இந்நிலையில் கிள்ளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் இருளர் சமூக மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 10 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தனர். இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். கிள்ளை பகுதியில் வசிக்கும் இருளர் சமுதாய மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இருளர் மக்கள் வந்தாலே, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கும் டாக்டர்கள், நர்சுகளை பணி நீக்கம் செய்ய வேண்டுமென போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாசலில் அமர்ந்து இருளர் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இத்தகவல் அறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இருளம் இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மற்ற சமுதாய மக்களுக்கு சிகிச்சை வழங்கப்படுவதை போல, தங்களுக்கும் சிகிச்சை வழங்க வேண்டும். கிராம மக்களிடையே பாரபட்சம் காட்டும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி னர். இருளர் இன மக்களின் திடீர் போராட்டத்தால் கிள்ளை பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
    • சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம் எதிரொலியால் ஆத்திரம்

    திருச்சி,

    சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்அருகில் அவரது உருவப் படத்தை வைத்து மாலை அணித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வன்னியர் சங்கம் சார்பில் இன்று நடந்தது.அப்போது அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை எனக் கூறி படத்தை அங்கிருந்து அகற்றி போலீஸ் ஸ்டேஷன் எடுத்துச் சென்றார். இதனையடுத்து ராமசாமி படையாட்சி படத்தை அவமரியாதை செய்ததாக கூறி, வன்னியர் சங்கத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டதோடு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் போலீசார் ராமசாமி படையாட்சி படத்தை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைத்தனர். இதனையடுத்து அவரது உருவப்படத்திற்குவன்னியர் சங்க பொறுப்பாளர் ராஜேந்திரன், படையப்பா ரெங்கராஜ், சந்தோஷ், சக்தி, சிவாஜி சண்முகம், அதிமுக டைமண் திருப்பதி, வன்னியர் சங்கத்தினர், பாமகவினர் மற்றும் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்தப் போராட்டக் காரணமாக ஸ்ரீரங்கத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 68 பெண்கள் உள்பட 165 பேரை கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு இன்மை போன்றவற்றுக்கு காரண மான மத்திய அரசை கண்டித்து கும்பகோணம் தலைமை தபால் நிலை யத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார்.

    தேசியக்குழு உறுப்பினர் சிவபுண்ணியம் முன்னிலை வகித்தார்.

    இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராதாகி ருஷ்ணன், குமரப்பா, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாலன், ராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், தண்டபாணி, கண்ணகி, நாராயணன், ராஜலட்சுமி, ஏ.ஐ.டி.யூ.சி. கைத்தறி மாநிலத்தலைவர் மணிமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அழகேசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 68 பெண்கள் உள்பட 165 பேரை கைது செய்தனர்.

    முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட அலுவலகத்தில் இருந்து காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு தலைமை தபால் நிலையம் பகுதிக்கு ஊர்வ லமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • தொடர் கொள்ளை, செயின் பறிப்பால் பொதுமக்கள் அச்சம்
    • பொதுமக்களுடன் அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு

    ரத்தினபுரி,

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள ஜி.பி.எம். நகர், பூம்புகார் நகர், சேவா நகர், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தை இன்று முற்றுகையிட்டு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 15 நாட்களாக எங்கள் பகுதியில் 7-க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. நேற்று பகல் நேரத்திலேயே ஒரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டது.

    எனவே இந்த பகுதியில் குடியி ருக்கும் எங்களுக்கு மிகவும் அச்சமாக உள்ளது. பெண்களாகிய நாங்கள் மிகுந்த பயமுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளோம். எனவே தொடர் கொள்ளை யில் ஈடுபடும் நபர்களை கைது செய்து எங்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலையில் நடை பயிற்சி சென்ற செயின் பறிப்பு முயற்சி நடந்துள்ளது. இதன் காரணமாக நகைகள் அணிந்து வெளியே செல்ல அச்சமாக உள்ளது.

    எனவே போலீசார் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியி ருந்தனர். பொதுமக்களுடன் அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் புகார் மனு அளிக்க வந்தார்.பெண்கள் உள்பட 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் திடீரென போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
    • போலீசார்- பா.ஜனதா.வினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சனாத னத்தை ஒழிப்போம் என்று சொல்லி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி யதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், மாநாட்டில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் செப்டம்பர் 11-ந்தேதி தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை அலுவ லகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் அண்ணா மலை அறிவித்திருந்தார்.

    அதன்படி நாகையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நேற்று பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஒன்று கூடினர்.

    தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    போலீசார் அனுமதி மறுத்து தடைகளை ஏற்படுத்தி தடுத்ததால் போலீசார் பாஜக வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர்
    • ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து ஏற்காடு தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டும், தபால் அலுவலக சாலையில் அமர்ந்தும் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து ஏற்காடு தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டும், தபால் அலுவலக சாலையில் அமர்ந்தும் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஞானசவுந்தரி போராட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, விலைவாசி உயர்ந்து நிற்கிறது. வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் அவதிபடுகின்றனர். எனவே இந்த மக்கள் விரோத அரசை விரைவில் நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். இந்த போராட்டதில் பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, தில்லைக்கரசி, மூர்த்தி, ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று அதிகாலை தூக்கணாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.
    • 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த இரண்டாயிரம் விளாக பகுதியில் தென்பெண்ணையாறு உள்ளது. இந்த பகுதியில் இருந்து மாட்டுவண்டிகள் மூலம் மணல் திருடிச் சென்று தங்கள் வீடு உள்ள பகுதிகளில் கொட்டுவைக்கின்றனர். பின்னர் வாகனங்கள் மூலமாக மணல் கடத்தப்பட்டு வருவதாகவும் தூக்கணாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று அதிகாலை தூக்கணாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். வீடுகள் முன்பாக ஆற்று மணல் குவியல் குவியலாக இருந்தது.

    இந்த மணலை 2 வாகனங்களில் ஏற்றும் பணியில் ஒரு சிலர் ஈடுபட்டு வந்தனர். மினி லாரி, மர்ம நபர்களை பிடிக்க போலீசார் முயன்ற போது பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் தப்பியோடினர். இதையடுத்து மணல் ஏற்றிக் கொண்டிருந்த 2 மினி லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தூக்கணாம்பாக்கம் போலீசார், புதுவை மாநிலம் கொம்பாக்கம் வேல்முருகன், குருவிநத்தம் நடராஜன் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ள மணலை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது

    கடலூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட குழு கூட்டம் கடலூர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், மருதவாணன், உதயகுமார், கருப்பையா, ராமச்சந்திரன், திருவரசு, அசோகன், ரவிச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விலைவாசி உயர்வை எதிர்த்து, வேலையின்மைக்கு எதிராக காலி பணியிடங்களை மத்திய அரசு நிரப்ப அவுட்சோர்சிங் முறையை கைவிட கோரியும் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும், என்.எல்.சி நிறுவனத்தில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை மாற்று இடம் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 1 ந்தேதி முதல் 7 ந்தேதி வரை கடலூர் மாவட்ட முழுவதும் பிரச்சார இயக்கம் தெரு முனை கூட்டம் வீடுவீடாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்வது, கடலூர், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடியில் ெரயில் மறியல் போராட்டம். மற்றும் சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மையங்களில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 100-நாள் வேலை திட்டத்தில் முறையாக வழங்கவில்லை
    • தேவையானவர்களுக்கு மட்டும் வேலை வழங்கி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    கடலூர்:

    எழுத்தூர், பெருமுளை பகுதிகளில் முறையாக 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த எழுத்தூர் கிராமத்தில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு அங்கு நடைபெறும் ராஜூவ்காந்தி ஊராக 100-நாள் வேலை திட்டத்தில் முறையாக வழங்கவில்லை எனவும், எழுத்தூர் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு வறுமை கோடு சான்றிதழ் வழங்காமல் மாடி வீடு, சொத்துக்கள் உள்ளவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார்கள்.

    குறிப்பாக 100 நாள் வேலையில் தலைவர், செயலாளர், வார்டு நபர் உள்ளிட்டோர் அவர்களுக்கு தெரிந்த நபர்கள் மற்றும் உறவினர்களுக்கு வேலை கொடுத்து மற்றவர்களுக்கு முறையாக வேலை வழங்காததை கண்டித்து எழுத்தூர் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஊராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு முறையாக வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதின்பேரில் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    இதேபோன்று திட்டக்குடி அடுத்த பெருமுளை ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நடந்து வருகிறது. இதில் பணியாளர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேவையானவர்களுக்கு மட்டும் வேலை வழங்கி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தற்போது 6-வது வார்டு பொதுமக்கள் வேலை செய்யும் நாட்களில் 1-வது வார்டு பொதுமக்களுக்கு வேலை வழங்கியதால் 6-வது வார்டு பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் சசிகுமாரை இன்று காலை வழிமறித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் அனைத்து வார்டில் உள்ள அனைவருக்கும் வேறுபாடு இன்றி முறையாக அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் எனவும். ஊராட்சி பணியாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வரவேண்டும். அலுவலகத்தில் வைத்து தான் அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும், பெருமுளை ஊராட்சியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பட்டி யலில் பெரும் முறைகேடு கள் நடந்துள்ளது அதனை சரிசெய்ய வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் சசிக்குமாரை முற்றுகையிட்டனர்.

    ஊராட்சி செயலாளர் மற்றும் வார்டு நபர் இருவரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விரைவில் இந்த கோரிக்கைகள் நிறை வேற்றாவிட்டால் மங்களூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் தெரிவித்தனர்.

    • தளவாய்பட்டி கிராம மக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தளவாய்பட்டி கிராம மக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை

    இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தளவாய்பட்டி கிராமத்தில் சுமார் 150 வீடுகள் உள்ளன. எங்கள் கிராமத்தில் மாதம் ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. முறையாக குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.

    நடவடிக்கை இல்லை

    ஆனால் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மேலும் குடிநீர் வழங்குவது எங்களது வேலை இல்லை என்று சொல்கிறார்கள்.

    எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறும் இல்லை.

    இதனால் தண்ணீர் இல்லாமல் தினசரி வேலைக்கு செல்வதற்கும் முடியவில்லை. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே எங்களுக்கு முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • தனியார் துறை முகத்தை அண்மையில் அதானி குழுமம் கையகப்ப ப்டுத்தியுள்ளது.
    • பல்வேறு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திரு.பட்டினத்தை அடுத்துள்ள வாஞ்சூர் பகுதியில் இயங்கி வந்த, தனியார் துறை முகத்தை அண்மையில் அதானி குழுமம் கையகப்ப ப்டுத்தியுள்ளது. அதுமுதல், துறைமுகத்தின் பல்வேறு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வாஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் துப்புரவு ஊழியர்கள், கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்ப டுவார்கள் என கூறியதாக தெரிகிறது. ஆனால், 14 ஆண்டுகள் ஆகியும் ஒரு ஊழியரை கூட பணி நிர ந்தரம் செய்யப்படவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள், துறைமுகம் வாயிலில் முற்றுகையிட்டு போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட் டத்தின்போது, 14 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பெண் துப்புரவு ஊழியர்களை, உடனே பணி நிரந்தரம் செய்யவேண்டும். என வலியுறுத்தப்பட்டது. இதை அறிந்த, திரு.பட்டினம் போலீசார், போராட்டக்காரர்களுடன் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, துறை முகம் நிர்வாகத்துடன் இது குறித்து பேசப்படும் என சமாதானம் செய்ததையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனர்.

    காலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி மன்றம் முற்றுகை போராட்டம்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் துளாரக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு தெரு, ரோட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளது. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக தண்ணீர் சரிவர வரவில்லை. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட பெண்களிடம், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், துணைத் தலைவர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பெண்களின் முற்றுகை போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    ×