என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
- தளவாய்பட்டி கிராம மக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தளவாய்பட்டி கிராம மக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தளவாய்பட்டி கிராமத்தில் சுமார் 150 வீடுகள் உள்ளன. எங்கள் கிராமத்தில் மாதம் ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. முறையாக குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.
நடவடிக்கை இல்லை
ஆனால் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மேலும் குடிநீர் வழங்குவது எங்களது வேலை இல்லை என்று சொல்கிறார்கள்.
எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறும் இல்லை.
இதனால் தண்ணீர் இல்லாமல் தினசரி வேலைக்கு செல்வதற்கும் முடியவில்லை. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே எங்களுக்கு முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்